அருள் நூல் 961 - 990 of 2738 அடிகள்

அருள் நூல் 961 - 990 of 2738 அடிகள்

arul-nool

கவ்வயிழுத்தானையோ சிவனே அய்யா
காரம்பசுவதனைக் கங்கைகரையில் கொல்லக்
கண்ட கலியாச்சே சிவனே அய்யா
துரியோதனனும் பஞ்சவரும் சேர்ந்து
ஒருவயிற்றில் பிறக்கக்கண்டேன் சிவனே அய்யா
பதினெண்சாதியும் ஏழைச்சான்றோரை
வசைபறந்து போகலாச்சே சிவனே அய்யா
சான்றோர் வயலிலிருக்க நீசன் வயலில்
தண்ணீர் பாயக்கண்டேன் சிவனே அய்யா
எதிர்வாய்க்கால் தண்ணீர் குறுக்கே விழுந்துபாய
என்னத்தைக் கொண்டடைப்பேன் சிவனே அய்யா
மக்களுக்காக இருந்தேன் சிறையதிலே
வைகுண்டம் தேடுதே சிவனே அய்யா
நாளும் குறுகலாச்சே நருளும் பெருகலாச்சே
நாமும் சடையலாச்சே சிவனே அய்யா
பத்திரமா காளியுடன் கன்னிமார் ஏழுபேரும்
பரல்யேழும் கேட்கிறாரே சிவனே அய்யா
கலியுகம் முடிந்துபோச்சு சக்கராயுதத்துக்கு
இரைகாணும் பருவமாச்சே சிவனே அய்யா
கூடும் சடமும் கூட்டோடே கொஞ்சம்
கைலாசபுரமிருக்க சிவனே அய்யா
வீடும் பதியும் விளையாடும் விண்ணோர்
கண்டு மனம்மகிழ சிவனே அய்யா
ஆளும்படிதான் அய்யா வாங்கே
ஆனநஞ்சிப் பொய்கையிடை சிவனே அய்யா
சூதுபடியாய் விளையாடிச் சொல்லி முடித்தோம்
துரோபதைக் குன்றிமக்கள் ஏழுபேர்க்கும்
கொடியசாபம் நீங்கிவிடும் காசிக்கலயங்களும்
கல்லறையும் பொன்பணமும் குத்துபிடித்தவனைக்
குரங்கோட்டம் பார்த்துவிடுவேன்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi