அருள் நூல் 1411 - 1440 of 2738 அடிகள்

அருள் நூல் 1411 - 1440 of 2738 அடிகள்

arul-nool

மண்டலத்துப்பெண்மாய்கையாக மாலயனும் நானானேன்
கள்ளனானேன் வெள்ளனானேன் என்காரணத்தைஅறிவாரில்லை
ஆலிலை மேல்பள்ளிகொண்ட அருமைசற்றேசொல்வாரில்லை
வாரிதனை யடைத்தஅருமை சற்றுமில்லை யென்மகனே
அண்டமெலாம் பிண்டமதாய்
ஐந்தறைக்குள் அடக்கிவிட்டேன்
கடலை அடைத்ததினால் உங்கள் கண்மயங்கலாச்சுதப்பா
நான்எந்நாளும் பள்ளிகொண்டுஇருப்பதை நீயறியவில்லை
அமிர்தமது தான்கடைந்த அதிசயத்தைச் சொல்மகனே
ஆயர்பாடி ஊர்தனிலே ஆயருட பட்டணத்தில்
ஒருபதினென்னாணியித்து ஏற்றபெண்கள் தங்கள்முன்னே
மாப்பிள்ளையா நானிருந்த மாயச்சித்தை சொல்மகனே
எண்ணிடங்காபெண்களுக்கு இருக்கிறேன் மாப்பிள்ளையாய்
ஐந்துதலை நாகத்தின்மேல் ஐயாபள்ளி கொள்வதியல்லையா
பத்தவதாரம்பிறந்த பாதைகளைச் சொல்மகனே
என்னையறியாமல் ஏதும்வகை உலகிலில்லை
தன்னையறித்ததுண்டால் தலைவனைநீயறிவாய்மகனே
கண்ணால்மனக்கண்ணாலே காணுமப்பா வழியதுதான்
என்னை யறிந்தவர்க்கு ஈசன்வழி சொல்லுகிறேன்
உங்களுக்குமண்ணில் மூவாசையதுமாற்றானாய் இருக்குதடா
வட்டக்கோட்டைக்க காட்டுக்குள்ளே நட்டுவனார்கொட்டுகிறார்
சூத்திரக்கணக்கென்று சொல்லுகிறேன் கேள்மகனே
பஞ்சவர்ணக்கிளி கிளியொன்றிருந்தது
பறந்துபோகக் கண்டேனடா
ஏழுபெண்கள்கதையை எடுத்துச்சொல்ல நாளாச்சே
பாம்புச்செடிக்குள்ளிருந்த பாம்பு படம்விரித்து ஆடுதடா
ஈரேழுஉலகமுண்டு இதையெடுத்துச்சொல்வார் யார்மகனே
சாதியான கொடியபாம்பு சதிசெய்யும் பாம்பதுதான்
முப்பூவை தானெடுத்து
அதைமுத்திசெய்தால் சக்தியுண்டு

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi