அருள் நூல் 661 - 690 of 2738 அடிகள்

அருள் நூல் 661 - 690 of 2738 அடிகள்

arul-nool

நீட்டி நொடிக்குமுன்னே கலியழித்து வாவென்று
நீயும்விடை தந்தாயோ சிவனே அய்யா
சிந்திக்கிடக்கும் மயிர்பந்து முடிந்துவிட்டால்
சீமைஅழிந்திடுமே சிவனே அய்யா
ஊமைபோலிருப்பதை வாயைத் திறந்துவிட்டால்
உலகம் அழிந்திடுமே சிவனே அய்யா
அதிசயங்கள் வளரும் அறியகிணற்றின்பாலை
எவரும் குடிக்கிறாரே சிவனே அய்யா
எவரெவர் நினைக்கின்ற நினைப்புக்குத் தக்கதகா இருந்து
விளையாடினேன் சிவனே அய்யா
மாபாவி யிறையறிந்து யாதோகோ ரியமென்று
பாலில்மோசம் செய்தானே சிவனே அய்யா
நஞ்சிட்டபாலைமக்கள் நற்பாலென்றெண்ணி யுண்ண
நற்பாலாயிருந்ததை சிவனே அய்யா
இப்படியிருக்கையில் சோதனைசெய்ய நீசன்
எனைவாவென்றழைத்தானே சிவனே அய்யா
கட்டிலையும் கொண்டுவந்த  தொட்டில் கட்டியென்னை
கனமுடன் கூட்டிப்போனார் சிவனே அய்யா
வழியும் விலகித்தந்து சிலதூரம் போகையில்
கடல்வளைத்து கொண்டதையோ சிவனே அய்யா
கரையில் திருநெல்வேலி அரகரா வென்றசத்தம்
கல்லும் உருகிடும் சிவனே அய்யா
அண்ணாவிதிருவம்பலம் அருள்கொண்டு கரைசேர்ந்தேன்
இலங்கைத் துவரயம் பதியில் திருவிளக்கு
எரியவும் கண்டேனையா சிவனே அய்யா
முட்டப்பதியும்நாடும் கிட்டக்கிளம்பும்வகை
முனியும்வந் தெடுத்தாரே சிவனே அய்யா
ஏழைமா முனியொரு கூரை நிழலில்புக
எல்லோரும் கைகொண்டாரே சிவனே அய்யா
பொத்திய கைகளை சற்றே திறந்துவிட்டால்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi