அருள் நூல் 1291 - 1320 of 2738 அடிகள்

அருள் நூல் 1291 - 1320 of 2738 அடிகள்

arul-nool

அரிகோபலனை அய்யா காதை முறுக்கி
உனக்கு இடடகணக்கைத் தந்தேன்
தந்த கணக்கை எல்லோருக்கும்
தெரியச் சொன்னாயா?
தெரியச்சொன்னதைச் சொல் என்று கேட்க
அரிகோபலன் சொல்லத் தெரியமால் நின்று
தியங்கண்டு மகிழ்ந்து மயிலாடி சீசர்
கிடுகிடென்று மனப்பயங்கரமாய் நிற்க
நீ சொல்சீசன்  எழுத்தெழுந்து அய்யா சொல்ல
அரிகோபலன் சொல்லத்தெரியாமலும்
சீசர்சொல்லத் தெரியமாலும் இருந்ததினாலே
அய்யாதிருவாய் மலர்ந்து அருளினது என்னவென்றால்
கன்னிமார் ஏழுபேர் உண்டுமே
ஏழுபேர்க்கும் ஏழுமதலைகள் உண்டுமே
ஏழுபேரில் வைகையில் இரண்டுபேர் இறந்துபோனதுண்டுமே
அதிலே ஐந்துபேர்க்கு ஐந்துதேவிமார் உண்டுமே
ஐந்துபேர் ஆண்பிள்ளையாளால் அவரவர் தேவிமார்க்கு
அம்மையிடத்தில் உத்தரவு தோணிற்று
பெண்பிள்ளை ஐந்துபேரானாலும்
தர்மக்கிணற்றில் தானம்பிண்ணித் தர்மக்கிணற்றை ஐந்துதரம்
சுற்றிச்சேவித்து நம்முடைய திருப்பதியை
ஐந்துதரம் சுற்றிச் சேவித்து
கொடிமரத்தை ஐந்துதரம் சுற்றி சேவித்து
நான் அம்பலத்தில் சுவாமி அரசடிமூட்டில்
வந்திருந்து சத்தியம் கொண்டோம்
அன்றுமுதலாய் அந்த ஒழுங்கின்படி
நடந்து வருகின்றார்களா?
அவரவர் தேவிமார் முகம்பார்த்து பேசினதே அல்லாது
வேறெதேவிமார் முகம்பார்த்து பேசினதேயில்லை என்றும்
ஆண்பிள்ளைகள் நீங்கள் ஐந்துபேரானாலும்

விளக்கவுரை :



அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi