அருள் நூல் 901 - 930 of 2738 அடிகள்

அருள் நூல் 901 - 930 of 2738 அடிகள்

arul-nool

கழந்தோடிப் போக்கண்டேன் சிவனே அய்யா
ஒருமாதத்துக்குள் பிள்ளைதரித்துப் பிறந்து
உருமாலும் கட்டக்கண்டேன் சிவனே அய்யா
இரண்டுதலை மூன்று கண்ணுமாகப் பிள்ளை
தரித்துப் பிறக்கக்கண்டேன் சிவனே அய்யா
கோழிக்குஞ்சுகளெல்லாம் கூட்டை விட்டெழும்புமுன்
கொம்பு முளைக்கண்டேன் சிவனே அய்யா
சடைநாய், முழுத்தேங்காயை, கவ்விக் கொண்டுபோய்
தகர்த்துமே தின்னக்கண்டேன் சிவனே அய்யா
நரியன்மார், கூடி யிரையெடுக்கப் போக
நண்டு விரட்டக்கண்டேன் சிவனே அய்யா
வீட்டெலி, கூடியே பூனைதனைபிடித்து
விருந்து அருந்தக்கண்டேன் சிவனே அய்யா
இப்படி நான்கண்ட சொர்ப்பண வித்தேசங்கள்
இந்த கலியழிக்க சிவனே அய்யா
ஆனாலும் இன்னுங்கொஞ்சம் சான்றோர்படும்துயரம்
ஆறுமோ தேறுமோ சிவனே அய்யா
அம்மை பிறந்ததும் உண்மைதான் எல்லார்க்கும்
அனுகூலக்காலம் ஆச்சே சிவனே அய்யா
வினையற்ற சண்டாளன் வகைகேடு செய்ததாலே
மேலெல்லாம் கூசுதையோ சிவனே அய்யா
தோசியெந்தன் மைந்தர்களை யேசினபடியாலே
தோலெழும் கூசுதையோ சிவனே அய்யா
கலியுகத்தில் நானும் வலியவர்களைப்போல
காசுக்கும் அலைந்ததுண்டோ சிவனே அய்யா
முக்காலும் காணிக்கைகள் வேண்டி மடப்பள்ளிகள்
முடிக்கவும் சொன்னதுண்டோ சிவனே அய்யா
உள்ளவனுக்கென்றென்றும் இல்லாதவனுக் கென்றென்று
ஓரங்கள் சொன்னதுண்டோ சிவனே அய்யா
வானமும் தலையாச்சே பூமிதான் காலாச்சே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi