அருள் நூல் 1471 - 1500 of 2738 அடிகள்

அருள் நூல் 1471 - 1500 of 2738 அடிகள்

arul-nool

ஆணும்பெண்ணும் கூட்டியாட்டி
ஆக்கிவைக்க நான்வருவேன்
நாலுவகைக்கணக்கிலும் நான்தீர்ப்புச்செய்ததுண்டு
செம்பவளத்தேரறி
நான்தேசமெல்லாம்  பார்க்கவாறேன்
வம்புவசை அதிகமப்பா வகையறியாமல் மயங்குகிறார்
ஆங்காரம்அடிபிடிகள் அதிகமச்பாதேசமெங்கும்
கொலைகளவு அதிகமப்பா குடிகேடுஆச்சுதப்பா
பெண்ணாலெஆண் அழிவு பெருகுமடாபூமியெங்கும்
ஆணும்பெண்ணும் அழிவாகும் அம்பலத்ரசர் முடிவாகுதடா
வறுமையதுதான் பெருத்து நீங்கள்வழிதப்பிப்போவீர்களே
பொய்புரட்டு அதிகமப்பா பொருத்தல்லைமிகலிநமக்கு
தானமானமில்லையப்பா சாதிவரம்பழியுதடா
சங்கக்கூட்டம் இல்லையாடா சரசக்கூட்டம் இக்கலியில்
கொம்பன்புழு வென்றறியாமல் குதிபோடுகிறார்கலியில்
மக்களுக்கு உத்தரவு மால்சொல்ல நீதிஉண்டே
அறிவுசொல்லி தெளிவுதர
நான்அம்பலத்தில் கணக்கர்வைத்தேன்
நான்வைத்த கணக்கரெல்லாம் நன்றுநடுக்கேட்கவில்லை
ஆடிநன்றாய் பாடிநன்றாய் கொடுக்கவில்லை என்மகனே
ஆதிபரன் சோதிநாதன் அதிகாரம்செய்யவாறேன்
புத்தியினால் கெட்டவரே பிழைக்கமதிதேடுங்கப்பா
அதிகாரசச்சட்டமது அவனியெங்கும் ஆகுதப்பா
பத்திரத்தைப்பாடிவந்தாலும் பாதையிலேபோகவிடான்
கொடியென்றநாகமது கொத்தும்வேளை அறிவீர்களோ
அடங்காத பாம்பதுதான் அதன்நஞ்சை அறிவீர்களோ
எண்ணடங்கா பாம்பதற்கு இருக்கிறார் இரையாக
இருபத்தைந்துபாம்பாக உங்களிடம்பார்க்கவருகிறாரே
சான்றோரிடமிருந்து பலசாத்திரங்கள் சொல்லித்தாறேன்
என்னாலேஆகுமட்டுமிதுவரைக்கும் புத்திசொன்னேன்

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi