அருள் நூல் 931 - 960 of 2738 அடிகள்

அருள் நூல் 931 - 960 of 2738 அடிகள்

arul-nool

வடிவும்தான் வெளியாச்சே சிவனே அய்யா
சந்திரன் வலதுகண் சூரியன் இடதுகண்
தானாகும் நாளாச்சே சிவனே அய்யா
சூத்திரம் இடம்வலம் கற்றவாறோமென்று
சொல்லுவதெப்படிகாண் சிவனே அய்யா
எவரெவர் இருந்துமணியம் பண்ணவேணு மானாலும்
எந்தன் முக்கால் அடிக்குள்தானே சிவனே அய்யா
எப்போது கூவுமென்றுஇருக்குதே யெந்தன் நெஞ்சு
இன்னும் விடியல்லையோ சிவனே அய்யா
நொடிக்குள் முடிந்துவிடும் விஞ்சைகள் இங்கிருந்த
நோகுதே திருமேனி சிவனேஅய்யா
வட்டக்கிலுகிலுப்பைத்தட்டி முடிந்துவிட்டால்
வையகமழிந்திடுமே சிவனே அய்யா
கைதட்டும் பொழுதோ கண்தட்டுநேரமா
கலியனிருப்பதெல்லாம் சிவனே அய்யா
காடுநாடாகு மென்று நாராயணன் சொன்னசொல்
காலமும் சரியாச்சே சிவனே அய்யா
நாராயணர் எங்கும் தாராளமானாரென்று
நகரெங்கும் பேராச்சே சிவனே அய்யா
கலியோ விளைந்துபோச்சு சிவனே அய்யா
கிரைகாணும் பருவமாச்சே சிவனே அய்யா
மெத்தவும் யெந்தன் மக்கள் உற்றபித்தளைவிற்று
வீட்டையும் விற்கலாச்சே சிவனே அய்யா
மூணுநேரம் துவைத்து ஒருநேரம் அன்னமுண்ண
முனிமார்கள் பெற்றமக்கள் சிவனே அய்யா
கடம்பாக்கொடியைத் தின்று கடலிலே தண்ணீருண்ண
காண்பாரோ நீசரெல்லாம் சிவனே அய்யா
அண்ணர் க்களந்தபாலை இடித்தகரைகாவல்காரன்
அவிழ்த்துப் பார்க்கலாச்சே சிவனே அய்யா
கனமுடன்முத்தமிடக் கொடுத்தகன்னத்தை நீசன்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi