அருள் நூல் 811 - 840 of 2738 அடிகள்

அருள் நூல் 811 - 840 of 2738 அடிகள்

arul-nool

சீமைஅழிந்து போமே சிவனே அய்யா
சூத்திரமாகவே மாலையில் நான் கண்ட சொற்பணம்
ஏதோசொல்லையா சிவனே அய்யா
ஆசுமதூரம் சித்திரம்ட விஸ்தாரம்மென்ற சொல்லை
அளிக்க விடைதந்தாயே சிவனே அய்யா
கிறேதா திறேதா துவாரம்பகையை அழக்க
விடைதந்தாயே சிவனே அய்யா
சரியைகிரியை யோகம்ஞானமென்ற சொல்
தாண்டிய கலியாச்சே சிவனே அய்யா
மனம் சித்தம் புத்தி அகங்காரம் நாலும் அடக்கி
மௌனத்திருந்திட்டேன் சிவனே அய்யா
அப்புபிரிதிதேய்வு வாய்வு ஆகாயமென்ற
அஞ்சுமஞ்சாச்சுதே சிவனே அய்யா
நாலுமெறும் பதினெட்டும் நடசாலைக்கும்
நற்காலம் போச்சுதையா சிவனே அய்யா
மூலகிணத்துக்கும் மேலகுளத்துக்கும்
மோட்டிலேணியானேன்சிவனே அய்யா
வாசிபாம்புக்கும் பஞ்சுபதிதனக்குமொரு
வாயமாயிருந்தானையா சிவனே அய்யா
அன்பத்தோரெட்டு முனியென்பற்றென் றேக்கவில்லை
அடுத்த பாட்டோதலுற்றேன் சிவனே அய்யா
சூரியன் திசைமாறி கலியுகம் முடியவோர்
சொர்ப்பனவித்தேசம் சொல்வேன் சிவனே அய்யா
கலியை அழிப்பதற்கு கண்ணில் வித்தேசம் கண்ட
காரணம்ட சொல்லறுற்றேன் சிவனே அய்யா
பெட்டகத்து விளக்கு தட்டுப்பட்டெண்ணெய்சிந்தி
போகவும் கண்டேனையா சிவனே அய்யா
பாம்பைக் கடிக்கவந்த கீரியை சீறிமாறி பாம்பெட்டி
கொத்தக்கண்டேன் சிவனே அய்யா
பூனைபோய் யானையுடன் போர்பொருதி முன்காலால்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi