அருள் நூல் 91 - 120 of 2738 அடிகள்

அருள் நூல் 91 - 120 of 2738 அடிகள்

arul-nool

அதன்மேல் பக்தியா
யிருக்கின்ற பேர்களுக்கும்
பிள்ளையில்லாமல் இருக்கின்ற பேர்களுக்கும்
கண்ணில்லாமல் இருக்கின்ற பேர்களுக்கும்
தனமில்லாமல் இருக்கின்ற பேர்களுக்கும்
பராபர மூர்த்தியும் சாம்பசிவ மூர்த்தியும்
ஸ்ரீராம சேயரும் தீர்ச்சையாகி
திருமன திரங்கிபக்தி காரணங்களைச் சோதித்துப்பகர்ந்து
அவரசர் கேட்டவரங்களைக் கொடுப்பார்கள்
இன்னும் சிறிது நாளையிலே
சிலபேர் தெய்வீகமாய்ப் போய்விடுவார்கள்
முன்னுக்கு மழை தட்டும்
உலகில் பலபலவஸ்துகள் பலிக்குமெனப் பகர்;;ந்தார்
சில நீசர்கள் கருப்பை நினைவில்லாதே தொட்டு
மிகப்பரவசம் அடைந்து அழிந்து போவார்கள்
வாலி சுக்ரீவரும் பண்டாரவேசமாய் போவார்கள்
வாச்சி கொழுகலப்பையெல்லாம் நாசமாய்ப் போய்விடும்
முன்னாலே துலுக்கர் தம்மை நாசம்பண்ணுவதற்கு
துர்க்கை அம்மாளை பிறவிசெய்து அனுப்பியிருக்கிறோம்
பிராமணர் சுகத்துடன் வாழ்வார் புவியில்
முகத்தில் லிங்கமில்லாத பேர்களுக்குப்
பிரமதேவரை அனுப்புகிறோம்
பிரமதேவர் புவிமீதில் வந்து
பக்தி காரணங்களைச் சோதித்துப்
பொல்லாத பேர்களைத் தெரிந்து பிடித்து
புதுக்கிராம தேசத்தில் ஆளும் தேவதைக்குப்
பூசைப்பண்ணிப் போடுவா யெனப்புகட்டினார்
காவேரி ஆற்றுக்குள்ளே மூன்று பொதி மங்கலியம்
கவிழ்ந்து அடையவேணுமென்றும்
காசினியில்

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi