அருள் நூல் 2101 - 2130 of 2738 அடிகள்

அருள் நூல் 2101 - 2130 of 2738 அடிகள்

arul-nool

இத்தனைக்கு கலிமுறுகி அநியாயம் அதிகமாச்சே
பலவிதமாய்க்பக்தன்மாரேபாடி ஆடிபரத்திவிடவந்தேனடா
சொற்பெரியபத்திரத்தாள் கற்பனையாய் வளர்த்தபிள்ளை
இதுவரைநான்பொறுத்தேன் இனிபொறுக்கமாட்டேனடா
உங்கள்வருத்தம்கண்டு ஒருமருந்துகொண்டுவந்தேன்
தெய்வீரேஉங்களுக்காய் சிறுபிள்ளையாய் நானிருந்தேன்
அப்பனொருபண்டாரம் அதிகசுகம் கொண்டுவந்தார்
ஏடுயெறிந்துவிட்டேன் கையெழுந்திருந்து போவென்
கல்மடமும்திருப்பதியும் கடலதிலேஅங்கிருக்க
எப்படியும்நானிருப்பேன் யென்னுடையதம்பிமாரே
ஒருசாமநேரத்திலே ஊழியென்றகாற்றுவரும்
மற்புடையபிள்ளைகளே வருவேன் நான்எழுப்புதற்கு
என்னை அறியாதவன் உன்னால் தவம்வேணுமென்பான்
எப்படியும்கும்பிடுவான் புளுக்குழியில்தள்ளிடுவேன்
கோத்திரத்தில் உள்ளவர்க்கு கூடுமட்டும்புத்திசொன்னேன்
கேளாதபேர்களுக்கு நானென்செய்வேன்ப்பா
மஞ்சள்நீர் பாலாறாய் வருகுதப்பா என்மகனே
கஞ்சனையறுத்தமுனி கடல்நீர்குடித்துவிட்டேன்
அப்படியே குடித்தவர்க்கு ஆண்டிவந்துகுடியிருப்பேன்
தெத்தெடுத்த பிள்ளையில்லைதிட்டிக்காமல் பெற்றபிள்ளை
அப்போநீயரசாள அதிகபிள்ளை யீன்றெத்தேன்
விருதுக்கோடி பெற்றபிள்ளைவிருப்பமுள்ளபிள்ளைதான்
என்னுடைய மந்திரியெல்லோருமொரு முகமாய்
அலைவாய் கடலதிலே வருவதற் காயழைக்கிறாரே
ஆடுகிடாக் கோழிபன்றி அறுத்துபலி கேட்கவில்லை
பொங்கரிசி கோழிமுட்டை பொறித்தகறிகேட்கவில்லை
உருகச்சுட்ட பணியாரம் அவலருண்டை கேட்கவில்லை
கருகச்சுட்டமுருக்குகளும் கடையல்பால் கேட்கவில்லை
உருக்கெடுத்த மடப்பதியில் திரிக்கொழுத்திவைக்கவில்லை
ஒருகாசும்கேட்கவில்லை உமையவளே அறிவாயோ

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi