அருள் நூல் 2251 - 2280 of 2738 அடிகள்

அருள் நூல் 2251 - 2280 of 2738 அடிகள்

arul-nool

தாரபடி பால்கொடுக்கத் தாயாரும் வாறேன் நான்
பாருலகில் திருச்சம்பதி பண்டாரம் அங்கிருந்து
சோதிடங்கள் சொல்வதற்கு தொடர்ந்துவந்தேன் கண்மணியே
ஊமைபோல் தானிருந்து உருண்டோடிப் போறானே
வெகுநாளாப் பஞ்சவர்தான் ஆவலாதி வைக்கிறாரே
கயிலைக்கு வடபுறத்தில் கனத்ததிட்டுப் பாறையிலே
ஓமக்குழி வளருதப்பா உங்களுக்காய்த் தவசிருந்தேன்
தீயராயப் போகவேண்டாம் தீயதிலே யிறங்கவேண்டாம்
கூட்டோடே கைலாசம் உங்களுக்கு காத்துவைத்தேன்
நின்றால் குடித்தால் தூக்கம்வைக்க நீதியில்லை
தென்னமரம்புன்னைநிழல் தெளிந்திருக்க நீதியில்லை
கண்மணிராசாவே காருமிந்த பிள்ளைகளை
அதிகமுள்ள தெய்வகன்னிமக்களை ஆராய்ந்தெடுநீ
தென்னம்காவுள் சிலஓலை அறியச்சொன்னாள்
தும்படுத்து ஆயாமல்சுமந்து கொண்டுபோகச்சொன்னான்
அத்தனைக்கும் போட்டவனை அடித்தானே ஆனைகாலோடே
ஐவராசன் சீமைதன்னை தாருமென்று அவன்கேட்டான்
கொஞ்சநாள்கூலிக்காக காருமென்று நான்கொடுத்தேன்
நான்கொடுத்து நாட்டையவன் நாள்தோறும் அண்டிருந்தான்
சுருக்கிளனீர் வெட்டச்சொன்னான் கண்மணியேசுமக்கச்சொன்னான்
கொண்டங்கே போட்டாலும்ட கூடதிலே அடைக்கச்சொன்னேன்
அழுதுமுறையிட்டேன் ஆனாலும் கேட்கவில்லை
பாக்குவெற்றிலை கொண்டுவா பயலே உன்னைவிடுவேன்
தம்பிபடும் பாட்டைத் தாயாரே பார்க்கலையோ
கம்புகொண்டுதானளந்து கண்மணியேவெட்டச் சொன்னேன்
பறிக்கநான் வந்தேனடா பத்தினியும் கூடவந்தாள்
உடலழிந்து விழுகுதடா ஊட்டோடே வேகுதடா
கூட்டோடே வேகுதடா குருநிதி ஆற்றலாலே
பொறுதியென்ற தீயாலே பூலோகம் அழக்கிறேனடா
பதினெட்டு துர்க்கையாலே பாரழகு லோகமெல்லாம்

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi