அருள் நூல் 2041 - 2070 of 2738 அடிகள்

அருள் நூல் 2041 - 2070 of 2738 அடிகள்

arul-nool

செப்பரியதோப்பதிலே சீதைவென்றுநிற்பிச்சியிருக்க
எப்பநான்புறப்படுவேன்யென்னுடையபத்தன்மாரே
செப்பறியதிருமாலும் அங்கிருக்க
தென்பரியதோப்பதிலே செப்பமுடன்வைகுண்டம்
ஆனைப்படிதிட்டிச்சிருந்த அறிவுள்ளபண்டாரம்
பத்தன்மாரேவெகுநாளாய் வேலைசெய்யும்பிள்ளைகளே
முன்னிருந்தயுகமதிலே தன்னியத்தால்பால்தந்தேன்
என்னையறியாதபேர்கள் இருப்பாரேகலியுகத்தில்
வங்காள அரண்மனையார் வாறாரேகலியழிக்க
என்மகளே திருநெல்வேலி எல்லாரும் ஒருமுகமாய்
சொல்லரியபுத்தினைத் தெரியும்படி சொல்லிவிடு
வெகுநாள் கலியழிக்கவிரும்புகிறேன் கருவூலமே
சொற்பெரிய தோப்பதிலே சீதையுங்கள்  அம்மையவள்
மற்பெரிய ராசனிடம் மற்பிடித்து நிற்கிறாளே
மகிழ்ந்திருந்து விளையாட வாறீரோ யென்மக்களே
திரும்பிநீங்கள் வரவேண்டாம் தெய்வசுனை அங்குவுண்டு
செங்கமாரி நோயுமில்லை தீனமில்லை பத்தன்மாரே
கவிழ்ந்திருந்து பதியரசன் கட்டிலின் மேலிருக்க
பாற்கடலில் பள்ளிகொண்டு பகுத்துவிடைவாங்கி
பஞ்சவேர உங்களுக்குப் பழிபாவம் செய்யவில்லை
திரும்பிநீங்கள் சிரித்தாக்கால் தீனமுண்டு உங்களுக்கு
கடலதிலே கெரடிமரமும் கல்லறையும் பொன்கணமும்
பொக்கணமும் புலித்தோலும் வாழைக்காய் கேட்கவில்லை
கற்பனையாய் பெற்றிருந்தபடியாலே வீற்றிருந்தேன்
சொற்பெரிய கற்பனையாய் பத்திரத்தாள்பெற்றபிள்ளை
கைலாச பணிவிடையுண்டு கலியுகத்தில் வேலையில்லை
நிறைவேலை செய்தாலும் நீதங்கேட்க மனிதரில்லை
கடலதிலே ஒருகிழவி அவதாரக்கிழவி தானும்
அமைத்துவந்தார் உங்களுக்காய் அம்மையென்ற லட்சுமியைக்
கண்டுதணிந்தவர்க்குக் கைலாசம் இங்கேயுண்டு

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi