அருள் நூல் 841 - 870 of 2738 அடிகள்

அருள் நூல் 841 - 870 of 2738 அடிகள்

arul-nool

பொத்தி யெடுக்கக்கண்டேன் சிவனே அய்யா
பச்சைப்பாம்பை கண்டவுடன் மயில்களெல்லாம்பதுங்கி
கிடக்கக் கண்டேன் சிவனே அய்யா
ஆலாகருடனையும் சிட்டிவோடிப் பறந்து அடித்து
எடுக்கக்கண்டேன் சிவனே அய்யா
ஆடுபோய் மாடுடனே அலறவேமாக்கு போட்டுஅது
போர் செய்யக்கண்டேன் சிவனே அய்யா
பச்சப்பிள்ளையை வொக்கரையிலெடுக்க பாம்பா
நெளியக்கண்டேன் சிவனே அய்யா
கடலெல்லாம் குளமாக குளமெல்லாம் கடலாக
கண்ணுகுத் தோன்றக்கண்டேன் சிவனே அய்யா
ஊசிமுனையதிலே கடலும் மலையுடனே ஊரும்
பதியுங்கண்டேன் சிவனே அய்யா
கோரைக்குருத்துக்குள்ளே தாரணிதன்னிலுள்ளகுடிகளும்
வாழக்கண்டேன் சிவனே அய்யா
திரைகடலில் சிறுமீன் பெரியமீனைப் பிடித்துத்தின்னவும்
கண்டேனையா சிவனே அய்யா
ஈரத்தின் மேல்கிடந்த ஆடையை அட்டைகண்டு
எடுத்துவிழங்கக்கண்டேன் சிவனே அய்யா
போர்வெள்ளைக்கொக்கு புழுத்திங்க போனையிடத்தில்புழு
வெட்டிக்கொத்தக் கண்டேன் சிவனே அய்யா
பூமாலையைக்கட்டி தோள்மாலையாக போட்டபூவும்தான்
வாடக்கண்டேன் சிவனே அய்யா
முடுக்கன்மார் பெற்றமக்கள் தூக்கம்வைத்த பாயதிலே
மூச்சோடி போகக்கண்டேன் சிவனே அய்யா
புலியை எலிபிடித்து கலியில் பொசிப்பதற்கு போதமும்
கண்டேனையா சிவனே அய்யா
முள்ளுமுனையதிலே  குளம்வெட்டி வயலும் பாய்ச்சி
முன்மடை பாயக்கண்டேன் சிவனே அய்யா
உப்புவிளைந்துவரும் நஞ்சை நிலங்களெல்லாம் உபரு

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi