அருள் நூல் 1651 - 1680 of 2738 அடிகள்

அருள் நூல் 1651 - 1680 of 2738 அடிகள்

arul-nool

பார்த்து உங்கள் சாஸ்திரத்தை படித்து அங்குயிருக்கிறார்
கடலதிலே தீர்த்தம் செய்து உங்கள் கர்மவீனை தீர்த்திடுங்கோ
கடலுக்குள் ஒருபாப்பான் பலகர்மங்கள் நடத்துகிறான்
வய்யகத்தில் வைகை வாசல்காவலாளி ஒன்பது பேர்
ஒன்பதுபோர் அங்கிருந்து பலஉபகாரஞ் செய்கிறார்
கயிலைமலை தன்னை கண்டு கனத்தவஞ் செய்தமக்கள்
கயிலைமலையானதிலே ஒருதவசியிருந்து வாடுகிறார்
அந்த தவத்தினுட அதிசயத்தை உங்களப்பன் சொல்லுகிறேன்
ஓடிஓடி பார்த்தாலும் ஒருவருக்கு தெரியாது
காயம்பு மேனியனார் கண்ணில் அதுகாணும்
தூங்காமல் தூங்குகிறார் அதன்சூத்திரத்தை அறிவாரில்லை
அடங்காத தவசுதான் அதின்நஞ்சயிறிவீர்களா
வயிற்றுக்கிரைதேடி வாறார்காண் அக்குருவும்
எண்ணடங்கா சொருபத்தலே அதில்என்சொருபம் அங்கு உண்டு
பிடித்த பிடிவிடாது பேயாண்டி சொல்லுகிறேன்
எங்கே எங்கே என்றுசொல்லி எட்டுதிசை பார்க்குதடா
பிழைப்பதற்கு வழிபார்த்து பிலத்தவஞ் செய்திடுங்கு
நான்மறைக்ககூடாது ஞானமுத்து சொல்லுகிறேன்
எங்கே எங்கே ஒளித்தாலும் யிரவுபகல் ஒன்றார்க்கும்
அன்பர்களே என்மக்களே அறிந்தோர் அறிந்திடுங்கோ
நஞ்சு எச்சி தின்றவர்கள் ஞானக்காளிக்கிரையாவார்
மேலும் எய்யாத சமயமதுள் இருக்குதுடா ஆளிப்புழு
வையகத்தில் பொய்களவு வாதுசூது பிறர்மோகம்
செய்யாத தீவினைகள் செய்தபேர் உண்டுமானால்
அகிலகிடங்கில்வாழும் ஆழிப்புழுக் கிரையாவீர்
முன்கணக்கும் பின்கணக்கும் முதற்கணக்கும் நான் கொடுத்து
கணக்கையெறிந்துவிட்டேன் கனகயிடம் தூத்திவிட்டேன்
வாழும்பள்ளிமேலவாசல் ஒன்றை அடைத்துவிட்டான்
பட்டந்தனைபறித்து அவர்களை பாரச்சிறை வைத்திடுவேன்
ஆடுகிடாய் கோழிபன்றி ஆயனுக்கு வேண்டாம் காண்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi