அருள் நூல் 1351 - 1380 of 2738 அடிகள்

அருள் நூல் 1351 - 1380 of 2738 அடிகள்

arul-nool

இதைக் கேட்கிறபோது வாயில் வெற்றிலை இல்லாமல்
இது சத்தியமென்று எண்ணிநடக்கிற பேர்களுக்கு
ஈசன்மலர்பாதம்கிட்டிக்கொள்ளும்
மேலும் ஆயிரத்தெட்டாமண்டு மாசியில்
ஆண்டிதெட்சணம் பள்ளிகொள்ள வந்திருந்து
பற்பலகாரணம் நடத்திச் சொல்லிவந்தும்
உலகம் அறியாமல் மயங்கிப்போச்சு
மேல்மாசி ஆறுஏழு அஞ்சில்
மாசியென்ற மாதத்தில் பதினைந்துக்குள்ளிருந்து
தர்மயுகம் உதிக்கும்

அதற்குமுன்னுள்ள காரணம் - அழிவுகள் விவரம்


பெருங்காற்றினால் அழிவு
வெள்ளத்தால் அழிவு
பேய்மாறட்டத்தால் அழிவு
பெருஞ்சுரத்தால் அழிவு
சம்மாரியால் அழிவு
காளிவெள்ளத்தால் அழிவு
நஞ்சுதின்று கொலைப்பட்டழிவு
பெண்ணாலே ஆணழிவு
ஆணாலே பெண்அழிவு
பூமிதரும் ஓசையினால் ஒருபெருமூச்சு உண்டாகும்
இப்படி பற்பல தீர்ப்புக்கேட்க
நாராயணம்ட நாவில் வகுத்துக் சொன்னோம்
அருளாக ஏகம்அண்ட பரிபூரணமாய்
வரையாகி திரையாகி வான்புவி லோகமுமாய்
ஒளியாகி விழியாகி உயிருக்கிணையாகி
திருவுயிராய் ஒருவுயிராய் தேசத்தில் வேசமுமாய்
ஒன்றாகி இரண்டாகி உலகமெங்கும் நானாகி
ஒன்றுமிரண்டும் மூன்றும் நாலாய் அஞ்சாய்
உனைவகுத்தேன் அஞ்சி அடங்கி ஆதிபரன்
பங்காளன் அஞ்சிரெண்டு மூன்றானே னிந்த

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi