அருள் நூல் 2221 - 2250 of 2738 அடிகள்

அருள் நூல் 2221 - 2250 of 2738 அடிகள்

arul-nool

நான்பெற்ற பிள்ளைகள்தான் ஆலிலைபோல் வாடுதப்பா
பொல்லாதபாவிகள்தான் துயரப்படுத்துகிறார்
கண்மணியே ராசாவே கலியழிக்க வாருமப்பா
வலிமையில்லை பெலனுமில்லை வரிசையுள்ள பிள்ளைகட்கு
அய்யோ தாயாரே ஔவையாரே கிழவியம்மா
கஞ்சனை அறுப்பதற்கு கனவரிசை கொண்டுவந்தேன்
முத்தலத்தோர்கூடிருந்து தெப்பகுளம்காட்டுவேன்நான்
பொன்மலை ஆளலாமே முத்துப்பதித்த
வைகுண்டம் அங்கேயுண்டு
ஊசிகள்தான் போட்டப்பவளக் கோட்டை அங்கேயுண்டு
எப்படியும்கற்பனையால்; இங்கேவந் தெடுக்கலாம்
உருள்வண்டி போட்டதரும் வெண்சாமரை வீசலாமே
முத்துப்பதித்தத்தோரும் பவளத்தால்சாவடியும் மண்டபமும்
கல்பதித்தவிளக்குகளும் கண்ணடங்கா செல்வமுண்டு
நடனமாடும் சாலையெலாம் நல்லதெய்வார் கூட்டமப்பா
தஙகக்குதிரையுண்டுதர்மராசர் அரசாட்சிக்கொடிகள்கட்டி
பால்கொடுத்து தாராட்டி பஞ்சணைமேல் கிடத்திடுவான்
பஞ்சணைமெத்தையில் படுத்துறங்கும் நாளாச்சு
காலுக்கு வீரகண்டை கைரண்டுக்கும் தங்கமுண்டு
குகையாள பிறந்தவளே யென்குழந்தாய் எழுந்திருடா
அதிகமுள்ள நீசனும்தர்ன மற்பிடித்து அடிக்கிறானே
படையெடுக்க வாமகனே மானமறுக்கம் பொறுக்கலையோ
மண்டைமயிர் பறியசுமந்து ஒருகாசு கொண்டுவந்தான்
வாடாப்பயலேயென்று ஒருகாசும் பறித்துக்கொண்டான்
இந்தராசன் சீமையாள வந்துபிறந்தீர்களா
கூட்டோடேதாயெழுப்பி கோகுலமே தாயாரே
வேலாயுதம்எடுத்து வேடமகன் அளுகிறான்
கலியுகத்தை முடிப்பதற்குக் காரணமாய்தவசியிருந்தேன்
கண்ணிரெண்டும் இரத்தமாகக் காச்சல்வந்து பிடிக்குதப்பா
கட்டுவேன் நான்சுருட்டி காட்டித்தாறேன் கண்மணியே

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi