அருள் நூல் 211 - 240 of 2738 அடிகள்

அருள் நூல் 211 - 240 of 2738 அடிகள்

arul-nool

ஒப்பார் ஒருவ ரெழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே
அப்பா நாதன் எழுதிவைத்த அகிலத் திரட்ட மானையிதே

என்றே யிந்த திருவாசம் இயம்ப சரசு பதிமாதும்
கன்றே மெய்த்தோன் யெழுதிமிக கலியுக மதிலே விட்டிடவே
நன்றோர் மறையோனிடமேகி நாட்டில் அறியச் செய்திடவே
அன்றே அவனிதானறிய அனுப்பி மகிழ்ந்து அங்கிருந்தார்.

ஆயிரத்து எட்டாம் ஆண்டு மாசியிலே
திருச்சம்பதி கடற்கரையாண்டி
நாராயணம் பண்டாரம் தெச்சணம் பள்ளிகொண்டு
காணிக்கை கைக்கூலி காவடிமுதல்
டியந்தனக்கு அவசியமில்லையென்று தர்மம் நிச்சயித்துக்
கொற்றவர் தானும்மாண்டு குறும்புகள் மிகவேதோன்றி
உற்றதோர் துலுக்கன்வந்து உடனவன் விழுந்தோடி
மற்றதேர்பத்தாமாண்டில் வருவோம் வைகுண்டமென்றே
முன் ஆகமத்தின் படியே
வைகுண்டம் பிறந்து இருக்கும் நட்சத்திரத்தில்
குதித்துக் கொள்ளும் தன்னே,
மாளுவது மாண்டுகொள்ளும் தன்னே,
முளிக்கப்பட்டது கண்டுகொள்ளும் தன்னே,
ஒரு நெல்லெடுத்து உடைக்க நாடு கேட்டுக்கொள்ளும்தன்னே,
இருநெல்லெடுத்து உடைக்கநாடு தாங்காதுதன்னே,
வானமும் பூமியும் கிடுகிடு வென்றிடும் தன்னே,
வானத்திலிருக்கிற வௌ;ளிக ளெல்லாம்
ஆலங்காய்போல் உதிர்ந்துவிடும் தன்னே,
மலைகள் யிளகிவிடும் தன்னே, பதியெழும்பி விடும்தன்னே,
முளிக்கப்பட்டது கண்டுகொள்ளும்தன்னே
என்று நருட்கள் அறியும்படி உபதேசித்துக் கொண்டு சிறந்தால்
இதைமனுவோர் அறிந்தும் கேட்டும் கண்டும்
இதுமுன்னுள்ள ஆகமும் சரி, இவர்சொல்வது சரியென்று,
இவர்தலத்தில் தானே போவோமென்று வந்தார்கள்.

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi