அருள் நூல் 2011 - 2040 of 2738 அடிகள்

அருள் நூல் 2011 - 2040 of 2738 அடிகள்

arul-nool

ஆதவா அரிநாராயணா போற்றி ஆதியே உந்தன் போற்றி போற்றியே
மூவர்தேடியும் முற்றாதமுதலின் திருத்தாள் பதம்போற்றி
தேவர்க்கரியதிரவியமே தெய்வமுதல் வேதச்சுடரே
காவகரியவனமதிலே கற்பை அழத்துக் கைவிட்டகன்ற
தாவாதுணையேயென்கணவா தயவேஉததுபதம் போற்றி
தீர்த்தோமெங்களைத்தானும் திரும்பக்கயிலைகழையாமலவர்
சார்ந்தோரெமது கணவரையும் தந்தேதரணி அரசான
தேர்ந்தேபயின்ற சிறுவர்களின் சிறப்புஏதும் குறையாமல்
வாழ்ந்தேயிருக்கு வரமருளும் மாயாதிருக்கும் மறைமுதலே
மாட்டி லேறும் மகாபரனே மாது உமையார் பங்காளா
காட்டிலடியா ரேழ்பேம் கற்றா விழந்த பசுவது போல்
ஊட்டி உறக்க மில்லாமல் ஊமை கண்டக் கனாவது போல்
வாட்ட மறிந்து மனமிரங்கி வந்தாய் கவரை தீர்ந்தோமே

நடை

நாரணரேநீரும் நல்லபெண்கள் யேழுபேர்க்கும்
சீரான வரங்கள்செப்பி அனுப்புமென்றார்
உடனே நாராயணரும் உள்ளம்மிகக்கழித்து
மடமாதேபெண்ணே மக்களுடதன்வழியில்
சான்றோரிடமேதான் பிறந்து கன்னியர்களாய்
இருக்கும்சமயம் யான்வருவேன் தெச்சணத்தில்
தெச்சணத்தில்வந்து சிறந்த தவம்புரிந்து
தவத்தைநிறைவேற்றி தானிருக்கும் வேளையில்
உங்களையும் வருத்தி உற்றமணம் புரிவேன்
இருபேரும்மக்களை எடுத்துபுவி ஆண்;டிடலாம்
தந்தோம் வரங்கள்தான் பிறங்கோ பெண்ணோயென்றார்

விருத்தம்


தந்தார் வரத்தை வாங்கித் தார்குழலேழுபேரும்
முந்திநாமீன்ற பிள்ளை மெய்க்குலம் தன்னில்தோன்ற
மைக்கழல் மார்களெல்லாம் மானிடர்வழியே வந்தார்
மேற்குலம் தன்னில் மாதர்விருப்பமாய் வாழ்ந்தாரன்றே.

திங்கள் பதம்

அஞ்சுதலைபோல்முகமும் ஆயிரங்கை காலுமாகப்
பிஞ்சுமலைபோல்கூட்டி பிறப்பித்துநானுமிங்கே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi