அருள் நூல் 121 - 150 of 2738 அடிகள்

அருள் நூல் 121 - 150 of 2738 அடிகள்

arul-nool

ஓரேழு பெண்பிள்ளைகள் ஒரு ஆண்பிள்ளையை
அடர்ந்து பிடிப்பார்க ளென்றும்
அறுத்த மங்கலியம் மிகுத்துக் கட்டுவார்களென்றும்
இன்றும் சிறிது நாளையிலே
கேள்விகேளாமல் இருக்கின்ற பேர்களும்
துர்ச்சனராய் இருக்கின்ற பேர்களும்
வர்த்தகராய் இருக்கின்ற பேர்களும்
தம்மில் ஒருவருக்கொருவர்
சண்டை போட்டு மாண்டுபோவார்கள் என்றும்
போனவர்கள் போக இருக்கிறபேர்கள்
புண்ணிய புருசரைத் தரிசனம்பண்ணி
சர்வ பாக்கியத்தை அடைவார்கள் என்றும்
மூன்று லோகத்துக்கு ஒரு வால்வெள்ளி உண்டாக்கி
நெருப்புப் போட்டுக் கொண்டு வருகிறோம்
அதனாலே
மானிடரெல்லாம் மறந்து உட்கொள்ளை
பிறகொள்ளை அடிப்பார்க ளென்றும்
நமக்கு நன்றாகத் தெரியும்
நாம் அதற்குமேல் பூலோக பஞ்சாமிர்த ராச்சியத்திலே
பண்டார வேசமாய் வருகிறோம்
வருகிறபோது,
மண்ணெல்லாம் கிடுகிடுவென்று ஆடும்.
வானமும் மலையும் முழங்கி திடுக்கிடும் அப்போது
அதிலே சிலதுர்ச்சனரெல்லாம் மாண்டு போவார்கள்
போனபேர்கள் போக இருக்கிறபேர்கள்
புண்ணிய புருசராய் இருப்பார்கள்;.
மந்திர தந்திர வைத்திய
வாகடங்களெல்லாம் வடவாசலிலே போய்
சட்டுத்தீர்ந்து போய்விடுவார்கள்.
ஏழுசமுத்திரத்திலே மூன்றுசமுத்திரம் நீர்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi