அருள் நூல் 1081 - 1110 of 2738 அடிகள்

அருள் நூல் 1081 - 1110 of 2738 அடிகள்

arul-nool

உங்களைப் புகழ்ந்தெடுத்தேன் என்மகனே!
வானவெள்ளி உதிக்குமுன்னே வந்தேனடா மகனே!
இனிபூமி வெடித்துப் புத்திசொல்ல நான்வருவேன்.
தேவதேவர் கூட்டத்தில் திருசங்குதான் முழங்கும்.
வேகம்வந்தால் தீராது சொன்னேன் நான்என்மகனே
சடைவுவந்தால்; உங்களுக்கு சங்கடங்கள் தீர்ப்பது யார்?
பஞ்சாசாப பொருளைப் பகர்ந்தெழுத மாட்டால்
இந்தவிதிப்படிநான் சொன்னேன் என்மகனே
ஆற்றங்கரைப் பள்ளியிலே அங்கிருந்தேன் மகனே
ஊத்தங்கரைப் பள்ளியிலே ஒதுங்கியிருந்தேன்மகனே
குதிரைபரியாகவேதான் குடிகெடுக்க நான்வருவேன்
பதியெழும்பிக்கலியழிக்க மறைபொருளாய் நான்வருவேன்
செடிக்குக் கொடுத்தவனை செவிதிருக்கி குற்றங்கேட்பேன்
பக்தியில்லா
தேவப்பிராமணரைப் பயம்காட்ட நாம் வருவோம்
உள்ளபடி சொல்வதற்காய் உகந்துவந்தேன் என்மகனே
நல்லபாம்பு விசம்போல நடத்துவேனடாமகனே
அந்தவல்லரக்கன் கோட்டையிலே வடிகொடுத்ததேன்மகனே
என்சொல்கேட்காவிட்டால் சிரித்தறுப்பேன் மகனே
ஆரார்க்கும் புத்திசொல்லி அழிக்கவந்தேன் கலியுகத்தை
என்புத்திக் கேட்டாயானால் உனக்கிறைபகுதிதவிர்த்து வைப்பேன்
ஆளும்கோட்டை வாசலிலே அதிசயம் உண்டாகும் மகனே
அது, கைகண்ட புலச்சமடா காட்டித்தா றேன்மகனே
திருச்சம்பதிக் கடலுக்குள்ளே திருமாலும் அங்கிருந்தேன்
அந்தபதி உட்படவே ஆகபதி யிருவத்தினாலாம்
ஆளும்பதி தென்கடலில் அதிகர் வரயம்பதி என்மகனே
தென்கடலில் வழிகாட்டித் திரும்பிமுகம் பார்;க்கையிலே
சந்திரனும்சூரியனும் சண்டைபோட்டே மறைவார்
தெற்குவடக்குமாகத் திருப்பததியும் தோன்றுமடாமகனே
அந்தபதி அல்லாதே அதிபதி யங்கேஉண்டு என்மகனே

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi