அருள் நூல் 1501 - 1530 of 2738 அடிகள்

அருள் நூல் 1501 - 1530 of 2738 அடிகள்

arul-nool

நானாண்டி ஆண்டிநடுக்காட்டு குருவாண்டி
கேளாண்டிகுலத்தாண்டி இந்தகுவலயத்தை அளந்தாண்டி
சித்தாண்டிசிவனாண்டி இந்ததேசமெங்கும் நானாண்டி
மாலாண்மாறாண்டி நான்மாலும்சிறு ஆண்டியடா
கந்தைத்துணிதோளிலிட்டு கந்தப்பனும் நான்வருவேன்
இன்னும்சிலகாண்டம் எடுத்தெழுதி சொல்கிறேன்
ஆயிரத்தெட்டாம்மாசியிலே கலியுகத்தில்வந்தேனடா
சாதியானலிங்கமொன்று சமுத்திரத்துள்ளிருக்குதடா
ஆதியானலிங்கமதை நீங்கள்தினம் போற்றிடுங்கோ
அதில், முத்தியுண்டு  சக்தியுண்டு முனிபரனும்பாடுகிறேன்
கோலநெடுமாலயனும் கோலம்கட்டி ஆடுகிறேன்
நித்தம்செத்த பாவியப்பா நாதனெடுத்து தாறேனப்பா
செத்துச்செத்துப் பிறப்பே னடா
என் சித்துவித்தை அறிய மாட்டேன்
அல்லும்பகலும் குறிகள்சொல்லி அவதிமெத்த ஆச்சுதடா
ஆடுதடா ஒருபம்பரம் தான்
அதையமர்த்த வல்லாருண்டோ
காணுங்குறிசொல்லுதற்கு கழுகுமலையாண்டிவந்தேனடா
இனிதேனமலர் மீதிருந்து பலசிறப்புச் செய்யவாறேனடா
உங்கள் குலதெய்வமென் றுஎனக்குக்கடன் செலுத்தயாருமில்லை
ஏவல்செய்யும் பிசாசாலே என்மக்காள்ஈடழிந்துபோனீர்களே
மகாலிங்கம் சொக்கலிங்கம் மாயமுத்து சோதிலிங்கம்
ஒருமுத்துலோகமுத்து இந்த உலகமெங்கும் பெருத்தமுத்து
ஏகமுத்து நாகமுத்து எங்கும்முழு முத்தானேன்
வையமெல்லார்முத்தாச்சு அதைவகையறிவாரில்லையப்பா
காடெங்கும்கனத்தமுத்து அதை கண்டெடுப்பார்யாருமில்லை
சத்துக்குள்ளமுத்தப்பா அதுவுங்கள் சகலவினைதீர்க்கும்முத்து
பக்தியுள்ளமுத்தப்பா அதுவுங்கள் பதியேறும் அந்தமுத்து
கண்டவர்எடுத்திடுங்கோ உங்கள் காரணத்தெய்மப்பா
ஆணாகிபெண்ணாகி உங்கள் அம்பலக்கூத்தாடியப்பா

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi