அருள் நூல் 2071 - 2100 of 2738 அடிகள்

அருள் நூல் 2071 - 2100 of 2738 அடிகள்

arul-nool

மாப்புக்கேட்க மக்களுண்டு மகாதேவன் அருளாலே
ஆயிரத்தெட்டு மாசியிலே அதிகப்பேறு பெற்றுவந்தேன்
என்னாலேஒருஞாயம் எண்ணாமல்செய்யவில்லை
எண்ணாமல்மாப்பு செய்து இரணியணைச் சங்கரித்தேன்
பின்குடுமி முடிந்தவர்கள் பூமியில்இருக்கமாட்டார்
அய்யோ பிள்ளைகளே அறிவுள்ள என்மகனே
சொல்லரிய வெயலதிலே சுடுமணலில் தானிருத்தி
சொல்லரிய கல்லேற்றி வேறுபொடியில தள்ளிவைத்தான்
இந்த அநியாயம் கேட்க ஈசுரனார் விடையும்பெற்று
பள்ளியிலேசென்றிருந்து பாடிவரும் பிள்ளைகளே
அன்றுசிரிப்பீர்களோ அதிகத்தலம் காட்டித்தாறேன்
நட்சத்திரமுதிரும் நல்வானமிடிந்துவிழும்
என்னயைறியாதபேர்கள் எரிந்துசரிந்துபோவார்
பத்தினிதான் பெற்றபிள்ளை படும்பாடு கேட்கவில்லை
கற்பித்துபெற்ற கந்தன்படும்பாடு அறியவில்லை
சொற்பெரிய திருமாலைச் சோதனைக்கு அனுப்பிவைத்தேன்
கந்தனைஅடித்தவரைப் புழுங்கிடங்கில் தள்ளிடுவேன்
ஊருணி கிடங்கெல்லாம் ஊற்றுமிகப் பெருகுதடா
சிறீலங்கை மாறியது செந்நெல் விளையுதடா
தீமெழுகநாளேச்சு சொல்லித்தாரேன் தெரியும்படி
ஆண்டிபெற்ற பிள்ளைகள்தான் அரசாட்சி ஆகுதடா
பசுவின்பால் குடித்ததுவும் பத்தினிவயிற்றில் பிறந்ததும்
பன்றிவயிறு தானொரிந்து பன்றிநெய்யாய்ப் போகுதடா
சொற்பெரிய கவுந்தலத்தில் சிலவாழ்வு யிடிந்துவிழும்
நீபெரிது நான்பொதுவடிவெடுப்பேன் பழிக்குலத்தில்
பலவேசம்போட்டதுண்டால் பத்தன்மார் அறியமாட்டான்
எடுத்தான் ஒருகோலம் இறங்கிவந்தேன் கைலாசம்
முப்புரக்கோட்டையிலே மூன்றுவேசம் போட்டுவந்தேன்
அப்பாவியென்னை யுந்தான் அறியாமல் அடித்தானே
இந்தக்கலியுகமதிலே இருக்கவொட்டான் என்னையுந்தான்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi