அருள் நூல் 2731 - 2738 of 2738 அடிகள்

arul-nool

வாசவனும் தேவர்மறையவரும் தாம்வாழ
பேசரிய தெய்வர்கள் பெற்றமக்கள் தாம்வாழ
கன்னிமார் பெண்கள்பெற்ற கைச்சான்றோர் தாம்வாழ்
அன்னைபத்திரத்தாள் அமுதருந்தி தான்வாழ
மேலோக நீதிவிளங்கி மனுவாழ
லோகமுள்ளவும் பொய்யருகி மெய்வாழ
நல்லோரும் நவில்வோரும் தான்வாழ
எல்லாரும் வாழயிருந்து நீடுழிவாழ்க

விளக்கவுரை :


அருள் நூல் நிறைந்தது

அருள் நூல் 2701 - 2730 of 2738 அடிகள்

arul-nool


சங்கீதம் பாட சகலகலையுந் தொனிக்க
மக்கள் ஓசையேழு வாhத்தியமும் தான்முழங்கக்
கிம்புருடாதி முதல் கின்னாpவா சித்துநிற்க
தம்பூரு வீணைசுரமண்டலம் முழங்கக்
கொலுகொலு வெனத்தெய்வார் குரவைமுழங்கிநிற்க
மலமலென ஆவுநெய்யில் வாடாவிளக்கொpய
அiகு கொலுவிரிக்க ஆலத்தியேந்திநிற்க
ஒழுகு காளாஞ்சி ஒருமித்து வந்துநிற்க
சத்திமுனி பத்திரத்தாள் சாயூச்சமாயிருக்க
இத்தனைப் பண்பும் யிதமுடனே தெய்வார்கள்
பந்தலுக்குள் ளேபரிந்து யிருந்துயெல்லாரும்
கந்தனுக்கு நற்சரடு கற்பிக்க வேணுமென்று
தாயாருடன் பிறந்த தன்மா மனைவருத்தி
காயாம்பூ மேனியனார் கட்டிலொன்று தான்கொடுக்க
அதிலே யிருமெனவும்ட அருகில வரிருக்க
சதிரான வார்த்தையொன்ற தான்செவியி லுமூகி
கோப்புக் குண்டான குருமுறையைத் தான்கொடுத்து
மாப்பிள்ளையும் பெண்ணையும் வருவித்துப் பந்தலிலே
பரம ரகசியமாய் பலகைதணி லேயிருத்தி
அரகரா வென்று அம்மையுமையை தானிணைந்து
சிவசிவா வென்று திருச்சரடு சேர்த்தனரே
தவசி முனியுடனே தானெழுந்து வந்துநின்று
சீதனங்களான சிலவரிசை தான்கொடுத்து
மாதவனை நினைந்து வாழ்த்தினார் பாலர்தனை
சொந்தமாய் உங்களுக்குத் துவரையம் பதியெனவும்
தந்தோ மிலங்கைத் தளவாடம் உள்ளதெல்லாம்
பிள்ளகளே யிந்த  பெரும்புவியை ஆள்வதற்கும்
வெள்ளானை மீதேற விடைதந்தோம் உங்களுக்குத்
ஆனாலும் மக்காள்நீர் ஆளுவீர் ராச்சியத்தை
வானோர் அறியவும்பால் வாழ்த்தினோம நீர்வாழ

விளக்கவுரை :

அருள் நூல் 2671 - 2700 of 2738 அடிகள்

arul-nool

பேய்க்குக் கொடுத்திடுவார் அச்சமுடன்
தெண்டமதற்கிடுவார் வஞ்சமறநாடு வுயர்ந்துவரும்
நாள்தோறும் பூமியெல்லாம் காடுந்தணிந்துவரும்
கண்டிருங்கோ வெள்ளி இடிகளாய் விழுமாம்
வில்போடும் மாறிமாறி வேளாண்மை குன்றிவரும்
மேல்மேலும் வெள்ளமது பெருகும் மேகத்திலே
இருந்து மீனும்விழும் மழையிலே மேகமதாய் வில்லும்
வெவ்வேறாகிவிடும் ஆகமத்தில் ஜனங்கள் வளர்த்தி
குன்றிவிடும்தாக்குப் பொறுக்காது ஜனங்களுக்
ஆயள்தான்குறையும்
காப்புக்கட்டி வைத்தமகன் கனபவுசாயிருக்கிறான்
மாமன்நானிருக்க மனம்போல் நடத்துகிறான்
அவன்பட்டம் பறித்திடுவேன் கொட்டிக் கலைத்திடுவேன்.
நாரணனும்

முற்றிற்று

கல்யாணவாழ்த்து
மவுனி  கலியாண மணவோலை வாழ்த்தலுக்கு
சிவனே குருவான திருமேனி முன்னடவா
அய்யாவும் நாரணரும் அம்மை உமையவளும்
தெய்வார் தமக்கிரங்கி திருமுகூர்த்தம் செய்யவென்று
அண்டரோடு தேவர் அறியவே ஓலையிட்டு
கொண்டாடியின்பம் குளிர்ந்தநதி பாலதுபோல்
சீரானமக்களென்றும் தெய்வச்சான்றோர்களுக்கு
நாராயணர் தாமும் நல்லமுகூர்த்தமிட்டு
கன்னிக்கலியாணம் கைப்பிடிக்க வேணுமென்று
மன்னனுக்க யேற்றுமதி மந்திரியும் தானறிய
இவனிவளாமென்று யினங்குறித்துப் பெண்பேசி
அவனியறிய அலங்கார மிட்டனரே
கட்டுடைய பந்தலுக்குக் காலொன்பது நாட்டி
பட்டுமேற் கட்டியெனப் பந்தலிலே தான்வகுத்து
சில்விளக்கேற்றிச் சிறந்தபரி பூரணமாய்
நற்சுதி கண்பாட நடசாலை யும் வருத்தி

விளக்கவுரை :

அருள் நூல் 2641 - 2670 of 2738 அடிகள்

arul-nool

மேல்மழைகள் தான்கூடி மரத்துக்கொப்பு
நனைத்துவிடும்நாடி ஒருகொப்பு னையாது
மூடிவரும் கோழிமுட்டை ஒன்றிலே குஞ்சிண்டு
மூன்றுவரும் கோஎன்று பெட்டைக்கூவிவிடும்
நீசரால் வெள்ளத்தினால் சிலவூர்வேகுமே பள்ளமதாய்
தாழுமேசிலவூர் சமுத்திரம்வந்தே பெருகும்மாளும்
சிலவூர்மகிழ்ச்சியுடன் ஆளறிய அக்கினியாலே அழியும்
சிலவூர்கள் இக்குடனேமண்மாரி பெய்துவிடும்
நாடுதனில் ராசாக்கள் பாவிகளாய் நாள்தோறும்
வந்து பாசாங்குமந்திரியும் பாவிகளாய் கூசாமல்
பெண்ணாலும் பொன்னாலும் நிலங்கரையில்
மண்ணாலும் நித்தம்மடிவார் முன்னோர்கள்
உண்டுபண்ணி வைத்த உட்பொருளைத் தேடாமல்
கண்டதெல்லாம் தெய்வமெனக்கை யெடுப்பார் சண்டாளர்
குட்டியழித்திடுவார் கொல்லுவார் கொண்டவனை
முட்டியவர் தாயைமகன் கொல்லுவான் கெட்டுவிழ நெஞ்சுடனே
பேயால் நாடும் மருந்தாலே துஞ்சிவிடும்மாற
பில்லிசூனியத்தால் அஞ்சாமல் கொன்றிடுவார்
பாவமதாய் கூர்மையுடன் பாராமல் பன்னி உருக்காட்டி
பலியாகும் நன்றிகெட்டு தீவைப்பார் பகையால்
தீங்கான நோய்பெருகும் பான்மை வையகம்பாழாகும்
ஏவல்செய்ய சின்னபிள்ளைகள் சிற்றின்பம் செய்திடுமே
மண்ணில் சடைவாக வார்த்தை சொல்லும்
பின்னும் மந்தப்பாவம் பிணிகருத்தாய் பாலருகில்
மானிடர்க்கு காவலுருப் புண்ணியங் கசப்பாகும்
மேவரிய ஒருத்தனுடன் ஒப்பத்தெட்டு பேர்கள்
திருத்தமறவே திரிவார் தேசமதில்
வருத்தமாய் தேடிநித்தம் குருதாய் தகப்பன்
கூறுமொழிகேளார் திருத்தமுடனே சிவத்தைத்
தேடார்கள் கருத்துடனே பிச்சையது போடாமல்

விளக்கவுரை :

அருள் நூல் 2611 - 2640 of 2738 அடிகள்

arul-nool

தம்பிபகை அன்னயர்க்குப் பிள்ளைபகைகன்னி
பெண்களும்பகையாம் பண்ணிரியாமி
மருமகளுக்கு மாற்றானாய் மாறாமல்பூமிதனில்
மாமிதன்மேல் போர்ப்பகையாம் கூராண்மைஅறிவு
மயக்கமாய் அண்ணனுடன் தங்கமுறைமை
தம்பிச்சொல்லுவார் முழுதுமேதரைதனிலே
தாயுமானும் சரசமிகப்பெருகி ஞாயவழிப்பாராமல்
நத்தியேநேசமுடன் சிற்றின்பம் செய்திடுவார்
சீமையெல்லாம் மயங்கி அத்தனையும் தேடார்கள்
அம்புவியெல்லாம் நித்தநித்தம் பெண்கள்
மோகம் பெருகிக்கண்ட கணவன்மேல்
பாவமெனத்தோன்றாமல் பாருலகமெல்லாம்
அதிகக்கோபமுடன் பொய்யாற்கொலைகள்
செய்வார் பாவமதாய் முன்னாலே பெண்ரூபம்
முக்கோணமாய்ப் பிறக்கும் பின்னாலே ஆண்போல
புpறந்துவிடும் முன்னாலே ஆண்பிள்ளைபெண்பிள்ளைகள்போல
அரையின்கீழ் பிறக்கும் ஆண்பிள்ளைமீசை பெண்ணுக்கு
ஆகிவிடும் மட்டிகளாய் நாணுவார் நஞ்சுதின்பார்
நாக்கைப்பிடுங்கிடவார் சீனமுடன்சாவார் கிணற்றிலே
நாணமுடன் ஆற்றிலேமடிவாரும் அக்கினியில் மாள்வாரும்
தாழ்மையாய் குத்திமிகச் சாவாரும் முகடராய் நாட்டமுடன்
பூலோகமெல்லாம் பிழையான துன்பத்தால் மாலோகச்
சக்கரத்தால்மடிவார்கள் பூவோகம்விசிறும்
பனியாலும் வீசக்காற்றாலும் வெயிலினாலும்
சீறுமிருகமதால் செத்திடுவாய், வீறுகெட்டு
நாளுக்குநாளாய் நடக்கவழிகுறுகும், சேவிக்குமே
வானம்திசைமாறும் கூலிக்கும்பார்க்கும் பாழ்நரகில்
ஏறுஅக்கினியால் நாள்தோறும் பூமிநடுக்கமுண்டாம்
வாழ்வோருக்கும் மேல்புறத்து நஞ்சைவிளையும்
அதற்குக் கீழ்புறத்து நஞ்சைவிளையாது

விளக்கவுரை :

அருள் நூல் 2581 - 2610 of 2738 அடிகள்

arul-nool

வஞ்சப்பெருங்காற்றால் வையகத்தில் சஞ்சலநோய்
தீநகரக்காந்தல் செகத்தோர்க்குத் தான்வயிற்றில்
மாநெருப்பாய்த்தங்கி வயிறுகழிந்து தீனமுடன்
மாள்வார்சிலபேர்கள் மாறாமலேசிலநாள்
தாழ்வாருயர்வார் தான்கெடுவார் கோள்சண்டையாலே
சாவார்கள் அழிவார்கள் உண்டெனவே…
இரத்தமிகவோடவே மண்டலத்தில்…
நாடுபிழையாது நற்காலம்போயொழிக்கும்
கேடுதொடுத்துலகம் கெட்டுவரும் நாடுதனில்
மழைதழைத்துப்பெய்யாமல் வானம்சுருங்கிவரும்
களைகள் பயிரில் கலக்கமேவிளையாது
வெள்ளத்தால் பஞ்சம்வரும் வெண்சாவியாகி விடும்
பள்ளத்தாலும்நெற்பயிர் நடுக்கும் சனங்களுற்ற
பட்டணங்கள்தோறும் பசிநோய் அதிகமதாய்
வட்டிஅநியாயம் வாங்கிடுவார்தட்டழிந்து
பிள்ளையுடன் கொண்டபெண்ணைப் பேறாகவிற்றிடுவார்
தௌ;ளிமையாய் கள்ளச்சிறைகள் வைப்பார்
வள்ளவிலாச் சூதுவிளையும் கடுஞ்சொல்களவும்
பொய்பெருத்து மாதருள்மேல் மோகமுற்று
வாடுவார்நீதமுள்ள ஞானங்கள்தப்பிவரும்
நாய்போல்சினந்திடுவார் ஊனக்கொலைபுரிவார்
ஓயாமல்தீனதிய திருட்டுப்பெருத்துவரும்
சீமையெல்லாம் புரட்டுமுரட்டாகப் பேசிடுவார்
மருட்டியேஎன்தன் பணத்தை யிப்போது
தாவென்றுசொல்லிசிந்தை கலங்கிடவேசெப்பிடுவார்
நந்தலுறம் பொய்யாணைவிட்டிடு வார்பொய்ச்
சத்தியமே பெருகும் மெய்யோனைத்தேடாமல்
விற்றிடுவார் வையகத்தில் ராஜனவன்கைக்கூலி
நடத்தியே வாங்கிடுவான்பேசிடுவான் ஞாயப்
பிழையாக ஆசையுள்ள அண்ணனுக்கு

விளக்கவுரை :

அருள் நூல் 2551 - 2580 of 2738 அடிகள்

arul-nool

ஏழைமதியாகப் பேசும் இல்லாதெளியோரை
எங்கேயென்று தேடி அடிப்பாரே
இப்படி கலியருக்கு தானதால் யென்னால் என்ன ஆகுங்கண்டீர்
வைகுண்டாpடம் போங்கோ வலதுபக்கம் வாழ்வீர்கள்

விருத்தம்

எட்டெட்டு அறுபத்தி னாலுவைகுண்டமாச்சு
பட்டுபட்டுழன்று கலிதன்னால்சாகும்
மட்டுப்படமூன்று பத்திரண்டு அதுவும் திராசியாச்சே
கட்டடங்காப் பதினாறும் அவர்க்குள்ளே ஆச்சு

நடுத்தீர்வை உலா

பூமிதனில் நாரணர்தான் பொதுத்தீர்வை கேட்கிறநாள்
நேசமுடன் சீசரக்குச் சொன்னகுறி நேமமுடன்
புத்தியுள்ளமானிடர்கள் பொங்கமுதுடன்கேட்க
பந்தமுள்ள எம்பிரான் பாதமதுகாப்போம்
ஆதியிலேயேPசுரர்தான் அம்புவியெல்லாமொpக்க
நீதியுடன்நேராகச்செத்தசனத்தையெல்லாம்சீக்கிரத்திலேயெழுப்பி
நற்
குற்றமுள்ளபாவிகட்குக் கூர்நாகங்கொடுத்து
மேத்தமிகச்சபித்து பேயாலேதான் வதைத்து
தள்ளிவிட்டு நல்லோருக்கமோட்சம் கொடுக்கவள்ளலுடன்
நாரணர்தான் வந்தவகை விள்ளுகிறேன்கேள்
பாவிகட்காய் மானிடர்போல் சமுத்திரத்தில் பிறந்து
மூன்று நாளாயிருந்த தெழும்பிப்பூவுலகில் வந்தவுடன்
நாற்பதுநாளிருந்து ஞாயவழிகாட்டி
அற்புதமாய்ச்சீசருக்கு சொன்னகுறி பொன்னுலகில்
நாம்போறோம் பூவுலகோரே கேளும்
மண்ணில் நடுத்தீர்க்க வாருமென்று சொன்னவுடன்
சீசர், எத்தனை நாளிருக்குதென்று வினவப்பின்
அதற்கே அரனுரைக்கும் வகையானதுநித்தம்
நளடக்கும்குறிகள் தன்னைநான் சொல்லுகிறேன்
என்றும்அடக்கமறச் சொல்லுகிறேன்அதுகேளும்
பஞ்சம்வரும்செழிக்கும் பாவத்தால்பகையாம்

விளக்கவுரை :


சொல்வாய் ஞாயவழி காட்டி

அருள் நூல் 2521 - 2550 of 2738 அடிகள்

arul-nool

பேருலகில் சொல்லாமல்; பேர்மாறி நிற்போம்
அம்மாவுந்தனக்கு நாங்கள் அடிமையானதல்லால்
ஆருமெங்கள் தனைவெல்லும் பேர்களில்லை அம்மா
இப்படியே பெருவரங்கள் ஈசரன்று தந்தார்
என்னமாயமோ வறியோம் இப்போவந்த கூத்து
தப்பாமல் வந்தெமக்குத் தற்காக்கவேணும்
சந்தனந்தான் தேர்நின்று தெந்தனங்களோடும்
தெருவோட்டி வைப்பதற்குச் சீர்செய்யவேணும்
தேன்மொழியே பத்திரமா காளியெனத்தொழுதார்

விருத்தம்

கொழுததோர் வீரர்தம்மைத் தோகை மாகாளிபார்த்து
பாழாகும் இந்தசீமைப் பாதகக் கொடுமையாலே
அழியவும்நாள்வந்தாச்சு அண்ணரும் பிறந்துமாச்சு
வழியதேய்தற்கு யானும்வகுத்துரை செய்யவேனென்றாள்
காலமும்கடைநாள் ஆச்சுக்கலியுகம் அழியப்போகு
ஏலவேகொடுத்ததெல்லா மித்துடன் பிறக்கலாச்சு
மாலவன் தவசதாக மாசிறை யிருக்கலாச்சு
ஞாலமேயிதற்கு வேறுநானென்ன செய்வேனென்றாள்

நடை

கட்டுடனே உங்களுக்குக் காரணங்களின்னதென்று
காரியமாய் சொல்லுகின்றேன் கேளீர்
மட்டடங்கா கலிவந்து பிறந்ததன்றுமுதல்
மான வரம்பில்லை யப்பாகண்டீர்
ஈனமுள்ளதேவருக்கும் ஈசர்பிறமாதனக்கும்
ஏற்கநடப்பொன்றில்லை கண்டீர்
மானமுறை நீதியில்லை வழக்குசாயலுடனே
வம்புசெய்யும் பேர்கள் தினம் கூட்டம்
ஐயமிறைக்கூலி தெண்டம்
அட்டிஅநியாயம் மெத்த
ஆண்களைத் தீண்டி வேலைகொள்வார்
மானமாகவாழும் எளியோர்கள் சொத்தையெல்லாம்
வாரிவம்பர் சேரக்கைக் கொள்ளை கொள்வார்

விளக்கவுரை :

அருள் நூல் 2491 - 2520 of 2738 அடிகள்

arul-nool

மகாமேரு போறைந்து வாசமாக்கொண்டார்
எந்தபேரும் வந்திழுத்து சந்துபொந்துபோக
எட்டுதிசைதோறும் கிடாய்வெட்டிப் பலியிட்டார்
இட்டகிடா ரெத்தமெல்லாம் துட்டவீரருண்டு
இனும்போதாதென்றுபலி பின்னுங்கொள்ளைகொண்டார்
முட்டடங்கா கயிலைபையன் மாயன்மகாலிங்கம்
வாழும் பலவேசக் கயிலாசவீரனோடு
சட்டமாக இட்டபலி உண்டுத்தேரைத்தொட்டு
தங்களாலே ஆகாதென்று சங்கடங்கள் கொண்டார்
வட்டமிட்டவீரருட பொட்டுமிகப்போச்சு
வாரமுள்ளவீரமெல்லாம் சொரம்போச்சுதங்கே
என்னகேடு ஆச்சுதென்று யேங்கி அஞ்சுபேரும்
ஏழையான பத்திரமாகாளியிடம் சொல்வோம்
பொன்னழகி எங்களையும் பெற்றவளேயம்மா
புட்டாரநாயகியே கட்டழியம்மா
இத்தனைநாள் யெங்களாலே யோலாதொன்றுமில்லை
ஏழுகடல்தாண்டி யுலகாண்டிருந்தோம் அம்மா
முத்திபெறும் அக்கினித்தூண்முழுவதும் கையிலெடுத்தோம்
மூன்றுலோகம் சுற்றிபின்னும் மீண்டுகொண்டு வந்தோம்
வெள்ளிமலை மீதிலுறை அரசனுடையமகளே
அஞ்சிரண்டு மாசத்திலே பிஞ்சியீரல் உண்டோம்
மாடனருள் அண்ணாவி மாமலையில்சென்று
மாய்மாலமாய்மாய மந்திரத்தைப் பொய்த்தோம்
சுட்டுசுருக்கான பலதுட்டமா கணத்தை
கண்ணில்காணாமலரைக் காற்றாய் பறக்க வைத்தோம்
பூமிகயிலாசம்வரை எங்கள் பேரல்லால்
பின்னுமொரு துட்டவீரர் கண்ணில்காணோமம்மா
மாயனுக்கும் ஆயனுக்கும் மாமறைக்கும் தாங்கள்
மற்றும்பல தேவதைக்கும் யேற்றுக்கொண்டோம் அம்மா
பேய்கள்பல பேர்களுக்கும் பெருமாளாக வாழ்ந்தோம்

விளக்கவுரை :

அருள் நூல் 2461 - 2490 of 2738 அடிகள்

arul-nool

உபாயமாய் வீரர்தம்மை வரவழைத் திங்கேகொண்டு
ஞாயமாய்ப் பிறவிசெய்து நாரணர் கைக்குள்ளாகக்
நோயமாய் மனதிலலெண்ணி நினைத்தனர் ஈசர்தானும்

நடை

அட்டதிசையெங்கும் கீர்த்திபெற்ற அஞ்சுபேரையும் இங்கழைக்க
அருமையானஇங்கழைத்து உரிமையாக இப்போது
மெட்டித்தனமாக முன்னீந்த வரம் வேண்டி
மேலுந் தா;மாரிக்கு ஏற்றவிடை ஈயவென்று
மாலுரைத்தமொழி தவறாவண்ணம் செய்யவென்று
மனமகிழ்ந்து தானும்வெகு உபாயம் எடுத்தார்
மேலும், கந்தசாமி யவர்க்கு மாசியெட்டாந்திருநாள்
மேனமைதனைப் பார்ப்பதற்கு நாமும் போவென்றே
போகவேணுமென்றுசொல்லி பொக்கணங்களிட்டு
பொpயபுலித் தோலுடனே வரிவேலை யுமெடுத்தார்
கையில் மழுசூலம் காப்பறைகளேந்தி
கண்டந்தனில் பண்டமாலை கொண்டுபூண்டு சென்றார்
மெய்யில் வெண்ணீறணித்து உத்தராட்சம்பூண்டு
மேன்மைபொற்கரத்தில் செம்புமுந்திரிதூக்கி
தாவடமும்மேவிடத்தில் தாவண்ட சங்காரன்
சண்முகம் திருநாள்வேளைதன்னில் போவென்றே
கோவிடத்தில் வாழுகின்ற குருவசிட்டரானார்
கூண்டபல தேவர்களும் கொடியாகச்சூழ
பூவுலகில் உள்ளதேவர் போதவந்துசூழ
பேய்பிடாரி பூதகணம் புட்டாரக்காளி
நாவுலகில் உள்ளதே நான்முகனும்சூழ
நாட்டில்வரம்பெற்ற வெகுதாட்டிமையோர்
ஏவல்பொpயோர் களெல்லாம் யீசுரரைப்போற்ற
ரிடபவாகனமேறி யீசர்சென்றாரங்கே
செல்லும்வேளை கந்தனுக்கு தீபரணைகாட்டி
தேருவடந்தனைப்பிடித்துத் தெருவீதிவந்தார்
வந்ததேர் உச்சிதனில் மாயனிருந்தாண்டார்

விளக்கவுரை :


அருள் நூல் 2431 - 2460 of 2738 அடிகள்

arul-nool

எந்தஞாயமாய் நான்தவம் செய்குவேன்
சீமையெங்கும் அநியாயம் கண்டதால்
சொல்லுமுபாயம் இறைகூடி கண்டமும்
வன்மையாக நிறுத்தியே தா;மமாய்
மக்கள்தன்னையும் வைத்தாள வென்றுதான்
பேய்கள் செய்யும் கொடுமை அகற்றியே
பலிகள் தீபஒலிகளடக்கியே
ஞாயமாக நான் சீமையாளவும்
நாரணர்சுவாமி வைகுண்டமாகவும்
தேசமாகிய தெச்சணமீதினில்
செல்வச் சான்றோரிடமே பிறந்துநான்
வாசமானபுமை நடத்தவே
மாயனேமிதம் கொண்டிருக்கவே
திட்டமாயிந்ததுட்டவீராpன்
செய்திகேட்ட சிணப்பொழுதன்
வட்டமாகிய நெஞ்சம் குளிருதுமனம்
வாழ்கயிலைக் கதியதியாக
சூழஇந்தத் துடிவீரர் தங்களை
சூச்சமாகச் சுருக்காய் அழைத்துநீர்
முன்னிருந்த வரத்தின் முறைமையை
உபாயமாக அடக்கி மறுவரம்
பின்னும் தங்கப் பிறவியாக்கிப்
பேரும்மாற்றி புதுவர மீந்துநீர்
எந்தனோடு இதமா அனுப்பினால்
ஏற்றகாரியம் பார்த்து முடிப்பேன்நான்
சிந்தையது செய்யாதே பானாக்கால்
தெச்சனாபுரி சென்றேறப் போகாது
என்று மாயோனிதுவுரை கூறிட
இருந்தபேர்களும் உள்ளதென் றார்களே

விருத்தம்

ஆயனார் உரைத்தபோது அரனுமே மனதுமெச்சி

விளக்கவுரை :


அருள் நூல் 2401 - 2430 of 2738 அடிகள்

arul-nool

சொல்லும்மாயங்கள் யிங்கவர் கண்டிடும்
மார்க்கமாகவே நாலுவேதத்திலும்
மாறாட்டியே வெகுபூசையுண்டவர்
பன்றிகோழி பலிபல தானதும்
பார்த்துச்செய்வோரை காத்துக்கொள்ளுவார்
அன்றிநித்தம் அவரை தொழாது
அதட்டுவோரை உருட்டியே கொல்லுவார்
மூடும்கண்கள் விழிப்பதற்குள்ளாக
உலகம்ஈரேழும் உலாவித்திரிபவர்
வாசமான வடவா முகத்திலே
வன்னிசெந்தழல் ஆவிகுளிப்பவர்
தேசமெங்கு மவரல்லால் வேறில்லை
கொல்லும் வரிசைக்க வாள்வல்லவர்
வேசமானால் பலது கொண்டாடுவார்
வெற்றிவீரர் வெகுபுத்திக் காரராம்
ஆனதாலவர் அருகில்வந்தாக்கால்
அட்டதுட்டிக்கு இடமல்லோ ஆக்குவார்
ஈனம்சற்றும் இரக்கம் கிடையாது
ஏற்றமாலோனே யோதுதான்சொல்கிறீர்
ஆகுமோ அந்த பேர்களமக்கென்றார்
ஐந்துபேரையுமிங்கே அழைக்கிறேன்
பாகுசெநாpந்தஈசர் உரைத்திட
பண்டுமாலும் பகுத்துரை செய்வார்
நல்லமாமறை மைத்துணரானவர்
நாட்டிலிப்படி கோட்டிகளாக்கிடில்
செல்வமாகிய தெச்சணம் மீதினில்
சென்றுநான்தவன் செய்துநிறைவேற்றி
அன்பரானமனுக்கள் தொpந்துநான்
அரசேயாள வரம்பெற்றதெப்படி
இந்தமாஞாலா பேர்களிருந்தக்கால்

விளக்கவுரை :

அருள் நூல் 2371 - 2400 of 2738 அடிகள்

arul-nool

கன்னி யீஸ்வரி சரசுவதியே
சிந்தை மகிழ்ந்திருந்த செந்தமிழுக்;கு
தெய்வமடவாரும் காப்பாமே

விருத்தம்

ஆதியாம் கடவுளான அச்சுதன்பச்சைமாலும்
சாதிகள் தமக்குவேண்டிச் சந்தனச் செந்தூர்தன்னில்
வாரிமயில்மனுவாய்த்தோன்றி வளா;கன்னி நகாpல்மாயன்
நீதியைமனதிலெண்ணி நெடியவன் வருகவென்றே

வருகிறபோதே மாயன்மனமது மகிழ்ந்துகொண்டு
கருதியேயீசர் தம்மைக்கட்டுடன் வணங்கிச்செல்வார்
சுருதியாய் நமதுகைக்குள் சீவாயியேவலாக
பருதிபோல் ஐந்துவீரர்படைத்துநீர் அனுப்புமென்றார்

அனுப்புமென்றிந்த மாலுரைகேட்க
ஐயன் மெத்த மனம்மகிழ்ந்து
என்னமாய்ச் செய்து அனுப்பமாலோனே
நீகேட்ட சட்டமாயிக வீரர்கள் யாரென்ன
சன்னபின்னம் போலுள்ள வீரர்கள்
தா;மபுரி நன்மைக்குமாதே
என்னமாயிது நான்செய்வதெப்படி
என்றுயென்மனம் யெண்ணுதே மாலோனே
ஆடுகோழி யிலைப்பட்டை தீபங்கள்
ஆகாதென்றல்லோ ஆகமம் பூரித்தீர்
நாடுமட்டும் அடக்கி உண்டிடும்
நல்லவீரர்கள் சம்மதிப்பார்களோ
கடியசேவகன் கயிலையில் பையனும்
அக்கினியேறி மாயப்பலவேசம்
அத்திவாக்கனும் காத்தவராயனும்
அந்துபேருமே தீர்க்கமுள்ளவர்
தீர்க்கமுள்ளவர்கள் ஐந்துபேர்கள்தான்
தேசத்திலும்பல வேசங்கள்கொண்டவர்
கோலமாம்பல தூலங்கள் கற்றவர்

விளக்கவுரை :


அருள் நூல் 2341 - 2370 of 2738 அடிகள்

arul-nool

கதைப்பாடத் திருமால் காப்பாம்
அண்ணன் தம்பியோடைந்து பேரும்
அருளால் சிவவேடமுந்தாpத்து
ஒண்ணு போலொரு சொல்லதுவாய்
உடைய அன்பவரைத் திறமாய்க்காக்க

வண்டத்தனம் பேசும்வன்பர்களே
வாணன் வதைத்திந்த கலியுகத்தில்
கொண்டே யிருட்கலி தனையறுத்து
கூண்டபதிக்கோட்டைக் கொத்தளமும்

துலங்கா பதிகளும் துலங்கவைத்துத்
தொணும் சிவாலயம் காத்தாண்டு
பெருமைமிகு ஆடை பால்பழமும்
பொpய மணிமேடை அம்பலமும்

நன்மை பலதான வரிசையுடன்
நாரணர் சட்டம் மீறாமலே
ஒழுங்காய் உலகினில் ஒருசொல்லாக
உண்மை பலசெய்தாரதை

முழுதும் காவியமாய் படிப்வர்க்கு
முதலோன் அருள்தந்து முன்நிற்கவே
கருரெனும் வீரர் கருடராசன்
கடியகமண்டல சிமளராசன்

துட்டரெனும்வீரர்; தேர்த்தகனும்
குட்டிவீரனும் தேர்க்குடையோன்
அன்பர்க்கனுகூல மாவீரன்
அஞ்சுபேர்க்கதை அன்பாய்கூற

வாரபிழையொன்றும் வாராமலே
வாயில்வந்திங்கே வகுத்துரைப்பார்
சீராய்ச் சரவணம் மேல்துயிலும்
செந்தில் வேற்குரு கந்தப்பரே
கந்தக்கருங்குhல் தெய்வமாது

விளக்கவுரை :


அருள் நூல் 2311 - 2340 of 2738 அடிகள்

arul-nool

நன்மையாய்த்தென்னாளும் நமதுசொற்படி போல்வாழ
தின்மைகள் பலதும்செய்யும் திருடரைக் கருவாய் செய்ய
செம்மையாய் நமக்குள்ளைந்து சீவாயி வேண்டுமென்றார்

என்றவர்நினைத்தபோது ஈஸ்வரனார் மகிழ்ந்துமுன்னாள்
தண்டமிழ்ப் பதத்தாலிந்த தாட்டிக வீரரான
மன்றமிழ் சுடலைநாதன் மாநிலம் காத்தவீரன்
என்றிவர்முதலாய் ஐந்துவீரர்கள்இசைவால்வந்தார்

வந்திடும் பேரைக்கண்டு மாயவர் மனதுள்மெச்சி
புந்தியில் மகிழ்ச்சி கூர்ந்து புதுவரம் அவர்க்க ஈந்து
மந்திரித்தலைவா யெந்தன் மக்களே பாpசையேந்தும்
தந்திரத் தோழன்மாரே சாற்றுவழி கேளென்றார்

மொழியிது வென்று நாமம்உலகினில் மறவார்நம்மை
தெளிவுடன்பார்த்தேன் நாளும்திறமாய்க் காக்கவேணும்
பழிகொலை களவுபேயாட்டம் பழநீசக்குலங்கள் தன்னை
குளிர்சுளிர் நோயைத்தாக்கி கொன்றிடு உலகில்தானே

வேறு

சிவனே சிவஞானத் தேசிகனே
தேவர் தேவர்க்கும்தாயகமே
தவமே தவஞான தவக்கொழுந்தே
சர்வதயாபர சங்கரனே

சங்கம் நிறைந்தருள்தற்பரனே
தமியேன் உனதுட வருளாலிந்த
மங்கைபதிநாட்டில் தாமரையூர்
வளரும் தவம்செய்யும் மாயன் கைக்குள்

ஏவல் சீவாயிமாரெனவும்
ஏகனருள் கொண்ட ஒழுங்குடனே
காவல்காரராய் வரங்கள் வேண்டிக்
கருடரெனப்போர் தழைக்தோங்க

மூவுலோகம் தளைத்தோங்க
முதலோன் மகவெனகீர்த்திபெற்ற
காவபுகழ்கொண்ட கருடராசன்

விளக்கவுரை :

அருள் நூல் 2281 - 2310 of 2738 அடிகள்

arul-nool

வடகடலும் அழக்கிறதே வானம் இடியுதடா
பூமிவெடிக்கிறதே மலைகள் இளகுதடா
சுழல்காற்றுவருகதப்பா தேசம்விட்டு ஜனம்ஓடுதடா
மண்ணறைக் குள்ளிருக்கும் மாயாண்டி வெளிவருவேன்
அப்புவியை அரசாளவரும் போது சம்பூர்ணத்
தேவரைத்தானெழுப்ப அய்யாவும்
உம்பர்தனைவதைத்த வையகத்தில் வரும்போது
அன்பான மக்கள் தனை
அருள்புரிந்து அய்யாவும்
மாரிபொழயவைத்து மக்கள் பஞ்சம்தீர்த்து
ஆழிபெருகி அவனியெங்கும் அய்யாவும்
தரணியில்வந்து  தயவுசெய்து என்னசொல்வார்
வள்ளியாற்றுக்கு மேற்கு வாரியால் தானழியும்
கோட்டாறு அங்கே கொள்ளையினாலழீப்போம்
சுசீந்திரம்ட ஆறுடைந்து சுத்தகதி ஆகுதங்கே
ஆறுடைத்துத்தேரும் அன்புடனே தெற்குதர
தாமரைகுளம்பதியும் தண்ணீராய் போகுமங்கே
கழிக்கரையைத் தானழித்துக் கடற்கரையில்முழித்து
கன்னபெற்ற பிள்ளையுழும் கருத்தாகவேகூடி
கூடிஅய்யா குரபரா றாயணமுனியும்
தெற்குவடக்காய் திருப்பதியும் தோணுமென்றார்
ஈரேழுகாதம் இருக்கதுகாண் துவாரகையும்
வடக்குவாசல் துலங்குதுகாண் அம்பலமும் அம்பலத்தில்
நாரணரும் அரசிருக்க வாறோங்காண் வாறோமென்று
வாக்குரைத்தார் மக்களுக்கு அய்யா.

பஞ்சதேவர் உற்பத்தி

காப்பு

விருத்தம்

சீரணிகொன்றை சூடும் சிவனுடைய பாதம்போற்றி
நாரணர் மனுப்போலிந்த நகா;க்கலியுகத்தில் வந்து
போரணிமனுக்கள் யாவும் பேணியோர் தலத்துள்ளாகி
காரணமகிமை காட்டிக் கருத்துள்ளம் தற்காத்தாரன்றே

பொறுதியாய்த் தர்மநீதி புலனுள்ள மனுக்கள்யாவும்

விளக்கவுரை :

அருள் நூல் 2251 - 2280 of 2738 அடிகள்

arul-nool

தாரபடி பால்கொடுக்கத் தாயாரும் வாறேன் நான்
பாருலகில் திருச்சம்பதி பண்டாரம் அங்கிருந்து
சோதிடங்கள் சொல்வதற்கு தொடர்ந்துவந்தேன் கண்மணியே
ஊமைபோல் தானிருந்து உருண்டோடிப் போறானே
வெகுநாளாப் பஞ்சவர்தான் ஆவலாதி வைக்கிறாரே
கயிலைக்கு வடபுறத்தில் கனத்ததிட்டுப் பாறையிலே
ஓமக்குழி வளருதப்பா உங்களுக்காய்த் தவசிருந்தேன்
தீயராயப் போகவேண்டாம் தீயதிலே யிறங்கவேண்டாம்
கூட்டோடே கைலாசம் உங்களுக்கு காத்துவைத்தேன்
நின்றால் குடித்தால் தூக்கம்வைக்க நீதியில்லை
தென்னமரம்புன்னைநிழல் தெளிந்திருக்க நீதியில்லை
கண்மணிராசாவே காருமிந்த பிள்ளைகளை
அதிகமுள்ள தெய்வகன்னிமக்களை ஆராய்ந்தெடுநீ
தென்னம்காவுள் சிலஓலை அறியச்சொன்னாள்
தும்படுத்து ஆயாமல்சுமந்து கொண்டுபோகச்சொன்னான்
அத்தனைக்கும் போட்டவனை அடித்தானே ஆனைகாலோடே
ஐவராசன் சீமைதன்னை தாருமென்று அவன்கேட்டான்
கொஞ்சநாள்கூலிக்காக காருமென்று நான்கொடுத்தேன்
நான்கொடுத்து நாட்டையவன் நாள்தோறும் அண்டிருந்தான்
சுருக்கிளனீர் வெட்டச்சொன்னான் கண்மணியேசுமக்கச்சொன்னான்
கொண்டங்கே போட்டாலும்ட கூடதிலே அடைக்கச்சொன்னேன்
அழுதுமுறையிட்டேன் ஆனாலும் கேட்கவில்லை
பாக்குவெற்றிலை கொண்டுவா பயலே உன்னைவிடுவேன்
தம்பிபடும் பாட்டைத் தாயாரே பார்க்கலையோ
கம்புகொண்டுதானளந்து கண்மணியேவெட்டச் சொன்னேன்
பறிக்கநான் வந்தேனடா பத்தினியும் கூடவந்தாள்
உடலழிந்து விழுகுதடா ஊட்டோடே வேகுதடா
கூட்டோடே வேகுதடா குருநிதி ஆற்றலாலே
பொறுதியென்ற தீயாலே பூலோகம் அழக்கிறேனடா
பதினெட்டு துர்க்கையாலே பாரழகு லோகமெல்லாம்

விளக்கவுரை :


அருள் நூல் 2221 - 2250 of 2738 அடிகள்

arul-nool

நான்பெற்ற பிள்ளைகள்தான் ஆலிலைபோல் வாடுதப்பா
பொல்லாதபாவிகள்தான் துயரப்படுத்துகிறார்
கண்மணியே ராசாவே கலியழிக்க வாருமப்பா
வலிமையில்லை பெலனுமில்லை வரிசையுள்ள பிள்ளைகட்கு
அய்யோ தாயாரே ஔவையாரே கிழவியம்மா
கஞ்சனை அறுப்பதற்கு கனவரிசை கொண்டுவந்தேன்
முத்தலத்தோர்கூடிருந்து தெப்பகுளம்காட்டுவேன்நான்
பொன்மலை ஆளலாமே முத்துப்பதித்த
வைகுண்டம் அங்கேயுண்டு
ஊசிகள்தான் போட்டப்பவளக் கோட்டை அங்கேயுண்டு
எப்படியும்கற்பனையால்; இங்கேவந் தெடுக்கலாம்
உருள்வண்டி போட்டதரும் வெண்சாமரை வீசலாமே
முத்துப்பதித்தத்தோரும் பவளத்தால்சாவடியும் மண்டபமும்
கல்பதித்தவிளக்குகளும் கண்ணடங்கா செல்வமுண்டு
நடனமாடும் சாலையெலாம் நல்லதெய்வார் கூட்டமப்பா
தஙகக்குதிரையுண்டுதர்மராசர் அரசாட்சிக்கொடிகள்கட்டி
பால்கொடுத்து தாராட்டி பஞ்சணைமேல் கிடத்திடுவான்
பஞ்சணைமெத்தையில் படுத்துறங்கும் நாளாச்சு
காலுக்கு வீரகண்டை கைரண்டுக்கும் தங்கமுண்டு
குகையாள பிறந்தவளே யென்குழந்தாய் எழுந்திருடா
அதிகமுள்ள நீசனும்தர்ன மற்பிடித்து அடிக்கிறானே
படையெடுக்க வாமகனே மானமறுக்கம் பொறுக்கலையோ
மண்டைமயிர் பறியசுமந்து ஒருகாசு கொண்டுவந்தான்
வாடாப்பயலேயென்று ஒருகாசும் பறித்துக்கொண்டான்
இந்தராசன் சீமையாள வந்துபிறந்தீர்களா
கூட்டோடேதாயெழுப்பி கோகுலமே தாயாரே
வேலாயுதம்எடுத்து வேடமகன் அளுகிறான்
கலியுகத்தை முடிப்பதற்குக் காரணமாய்தவசியிருந்தேன்
கண்ணிரெண்டும் இரத்தமாகக் காச்சல்வந்து பிடிக்குதப்பா
கட்டுவேன் நான்சுருட்டி காட்டித்தாறேன் கண்மணியே

விளக்கவுரை :


அருள் நூல் 2191 - 2220 of 2738 அடிகள்

arul-nool

கழுத்திலே கல்லேற்றிக் கைதாப்பாள் போடுகிறானே
பழிக்கோ நாங்கள் பெற்றபிள்ளை படும்பாடுகேட்கலையோ
கம்புவெட்டி அடிக்கிறானே கல்லேற்றி அடிக்கிறானே
அரியரசன் தவசுபண்ணி தெய்வகன்னி பெற்றமக்கள்
பொறுத்திருங் கோமக்காள் பூலோகம் ஆள்வீர்களே
குடுக்கவட்டைச் சிரட்டைகொண்டு வந்துயிருந்தேனடா
சூதாடிப்படைபொருது திறம்பார்க்க வரவில்லையப்பா
அரியரசன் தவசுபண்ணி அவர்பெற்ற பிள்ளையுண்டு
பொன்னரசி ராச்சியத்தில் அரசாளப் பிள்ளையுண்டு
மன்மதன்சீமையிலே வாள்வீச்சுக் காரருண்டு
கூலிக்காரர் மக்களில்லை கோடிவரிசை பெற்றமக்கள்
வற்றிய குளத்துக்குள்ளே முத்துக்
கெண்டைப் பிடிக்க பிள்ளையில்லை
அம்மா அம்மா தாய்க்கிழவி அதிமுள்ள பிள்ளையுண்டு
நாட்டுச்சீமையிலே வகையெடுக்கப் பிள்ளையில்லை
என்னுடைய தம்பிமாரே இலங்காபுரி ஆள்வாயோ
ஊசிமுனையதிலே உங்களுக்காய்த் தவமிருந்தேன்
காசியிலே ராசர்மகன் வாழும்தேசம் தாறேன்நான்
நட்டமா நான்இட்டவேலி நாள்தோறும் வாழ்ந்திருக்கும்
பால்வருணன் என்மகன்தான் பஞ்சவரும் என்மகன்தான்
நான்பெற்ற என்மகன்தான் ராச்சியத்தை ஆள்வானே
வாசமுடையபெருஞ்சுனையில் தெய்வஉயிர்மீன்பிடிக்கவந்தேன்
ஊற்றால்தான் போட்டதுண்டால் உயிர்த்தேர்ந்து மீன்பிடிப்பேன்
பழிபாவம் செய்திடுவேன் பார்த்திருங்கோ கொஞ்சநேரத்திலே
செடிகலைத்துவேட்டையாடி தெளிந்தமுயல்பிடிக்கவந்தேன்
அதிகமுள்ள வெடிகள்கொண்டு அமைத்துவைத்து கட்டிடுவேன்
இளங்கொடிகால் வைத்து எடுத்துக்காட்டவந்தேனப்பா
என்னுடைய பிள்ளைகளே இரக்கமுண்டு பத்தனமாரே
கடுவாய்ப்புலிகள்சிங்கம் கடக்கநின்று சிரிக்குதப்பா
ஒளித்திருந்தேன் வெகுநாளாய் ஓடிவந்தேன் எடுப்பதற்கு

விளக்கவுரை :

அருள் நூல் 2161 - 2190 of 2738 அடிகள்

arul-nool

தாசியாட்டமுண்டு சான்றோர்பார்க்கத் தம்பிரான்கற்பித்தேன்
ஆனைமேல் ஏறிநீங்கள் அற்றகுற்றம் பார்ப்பதுண்டு
சீதனம் விட்டுத்தாறேன் தெய்வேந்திரன் அங்குண்டு
கலியுகத்தில் வேலையில்லை கண்மணியே உங்களுக்கு
ஆலங்காய்நெல்லிவிளையும் அரிசிசிறு தானியமுண்டு
அமுததேற்றங்கொள்ளாலேமே ஆசாரம் அங்கேயுண்
கோவங்காய் பாகற்காய் கொழுந்துவரை அங்கேயுண்டு
சத்தியவாக்காய்ச்சொல்லுகிறேன் தம்பிரான்கற்பனையாய்
தலைவாசலானதிலே தலைதூக்கி மயிர்பிடித்து
கற்புடையராசன்வந்து கண்ணாடி வைத்துபப் பார்த்தான்
என்பேரில் குற்றமில்லை இழுத்துப்புதைக்க பிள்ளையில்லை
அப்படியேபிள்ளகைளே அணைத்தார்பால்கோட்டையிலே
இரண்டாம்முடிதரிக்க நீராவிக்கரைகளுண்டு
சங்குசக்கரமுண்டு தம்பிமாரே உங்களக்குக்
கன்னியிலேவந்திருந்து மேல்நோக்க நாமந்தருவேன்
சித்திரத்தாலதிகமுள்ள தோழருமங்கேவுண்டு
பஞ்சவரே உங்களுக்கு வஞ்சகமாய் சொல்லவில்லை
மாயவலைக்குள்ளிருந்து நடுஞாயம்தீர்த்துவாறேன்
திட்டித்தநாள்முதலாய்ச் சிலகாலம் தவசிபண்ணி
பால்காவடிவேண்டாமென்று பண்டார மிங்குவந்தேன்
ஒன்றுநான்கேட்கவில்லை உனக்குத்தெரியும்தாயே
சின்னம்சிறு மதலையாகத் தோப்பதிலே தவசிருந்தேன்
பிச்சிப்பூ அச்சுமாலை பொரியவல் கேட்கவில்லை
நல்லெண்ணெய் பிண்ணாக்கு ராசாவும் கேட்கவில்லை
தெய்வகன்னி பெற்றபிள்ளை செடிதோறும் அலைகிறாரே
பேய் எச்சி தின்றுஅவர் பேய்போல் அலைகிறாரே
நானானேன் தானானேன் தந்தேநன்னம் தந்தேநன்னம்
நாகம்போலே உள்ளபேயை நல்லதீயாலெரித்தேன்
மந்திரம் மாற்றிவைத்தேன் மாறானதைச் சாபமிட்டேன்
கருத்துள்ள ஈசுவரியேக் கண்டுகொண்டு பார்க்கவேணும்

விளக்கவுரை :


அருள் நூல் 2131 - 2160 of 2738 அடிகள்

arul-nool

என்னையொன்றுசொல்லதே இறையவனும் அறியலையோ
வெகுநாளாய்வந்திருந்து வேண்டும்புத்தி சொன்னேன்நான்
ஒன்றும் அறியாமல் விழுகிறானே தீயதிலே
சொல்லிவிட்டேன் கேட்கவில்லை என்னுடைய நம்பிமாரே
அறட்டி மடக்கிக்கொண்டு முடுக்கிகொண்டிருக்கிறானே
தவமிருக்கும் இடமதிலே வலமிடமா றாட்டம்வைத்தான்
பொய்ரதத்தை ஓட்டிவைத்தான் பூலோகம் தான்நடுங்க
பஞ்சவரே வெகுநாளாய் வருத்திநான் தீர்த்துவிட்டேன்
குட்டம்குறைநோவு கொடியதீனம் தீர்த்துவிட்டேன்
கண்குருடு கால்நொண்டி கர்மமுதல் தீர்த்துவிட்டேன்
தெச்சணா பூமியிலே தென்குமரி நன்னாட்டில்
வெகுநாளாய் வந்திருந்து மக்களுக்கு புத்திசொன்னேன்ங்
எத்தனையோ வெகுநாளா யியருந்துபுத்தி சொன்னேன்
அப்பனில்லா பிள்ளையது அதிகபிள்ளை யானதுதான்
செப்பரிய தாய்க்கிழவி சேர்ந்தாளே யெடுப்பதற்கு
இடுக்கமில்லை யினிமேலும் வெண்ணெயுண்டு நீளுதடா
தெப்பக்குள மிங்கமுண்டு திருமால் கற்பிச்சியிருக்கு
பிராமண வேசம்பாட பத்தன்மாரே நீங்களுண்டு
பொன்னாலே பூனூலும் தங்கத்தாலே சாலுவையும்
கடுக்கண்திருக் காணியில்லை கலியுகத்தில் வேலையில்லை
பொன்னரும்பு வேலைசெய்யப் பூமியில்தட்டானுமில்லை
பொன்னரிய கன்னபெற்ற பிள்ளைகள் வந்ததுண்டால்
குறுணிப்பொன்னிடுவதற்கு கொடுத்துவைத்திருக்குதப்பா
பட்டமர சாளக்கோடிமக்க ளுண்டு பாவனையாய்நான்  கொடுப்பேன்
எல்லார்க்கு மொருப்போல ஈசன்நான் யிருக்கிறேன்
சொற்பெரிய ராச்சியத்தில் சீமைகாட்டி ஆளலாமே
குதிரைகட்ட லாயமுண்டு கோடிச்சீமைகட்டலாமே
அதிகமுள்ள ராச்சியத்தில் அமுதேற்றுத்கொள்ளலாமே
கண்ணாடி பார்த்தப்பட்டு கடியதுகியில் ஆடையுண்டு
குளிர்கால ஓட்டமுண்டு கொடிவிருதுக் கட்டமுண்டு

விளக்கவுரை :


அருள் நூல் 2101 - 2130 of 2738 அடிகள்

arul-nool

இத்தனைக்கு கலிமுறுகி அநியாயம் அதிகமாச்சே
பலவிதமாய்க்பக்தன்மாரேபாடி ஆடிபரத்திவிடவந்தேனடா
சொற்பெரியபத்திரத்தாள் கற்பனையாய் வளர்த்தபிள்ளை
இதுவரைநான்பொறுத்தேன் இனிபொறுக்கமாட்டேனடா
உங்கள்வருத்தம்கண்டு ஒருமருந்துகொண்டுவந்தேன்
தெய்வீரேஉங்களுக்காய் சிறுபிள்ளையாய் நானிருந்தேன்
அப்பனொருபண்டாரம் அதிகசுகம் கொண்டுவந்தார்
ஏடுயெறிந்துவிட்டேன் கையெழுந்திருந்து போவென்
கல்மடமும்திருப்பதியும் கடலதிலேஅங்கிருக்க
எப்படியும்நானிருப்பேன் யென்னுடையதம்பிமாரே
ஒருசாமநேரத்திலே ஊழியென்றகாற்றுவரும்
மற்புடையபிள்ளைகளே வருவேன் நான்எழுப்புதற்கு
என்னை அறியாதவன் உன்னால் தவம்வேணுமென்பான்
எப்படியும்கும்பிடுவான் புளுக்குழியில்தள்ளிடுவேன்
கோத்திரத்தில் உள்ளவர்க்கு கூடுமட்டும்புத்திசொன்னேன்
கேளாதபேர்களுக்கு நானென்செய்வேன்ப்பா
மஞ்சள்நீர் பாலாறாய் வருகுதப்பா என்மகனே
கஞ்சனையறுத்தமுனி கடல்நீர்குடித்துவிட்டேன்
அப்படியே குடித்தவர்க்கு ஆண்டிவந்துகுடியிருப்பேன்
தெத்தெடுத்த பிள்ளையில்லைதிட்டிக்காமல் பெற்றபிள்ளை
அப்போநீயரசாள அதிகபிள்ளை யீன்றெத்தேன்
விருதுக்கோடி பெற்றபிள்ளைவிருப்பமுள்ளபிள்ளைதான்
என்னுடைய மந்திரியெல்லோருமொரு முகமாய்
அலைவாய் கடலதிலே வருவதற் காயழைக்கிறாரே
ஆடுகிடாக் கோழிபன்றி அறுத்துபலி கேட்கவில்லை
பொங்கரிசி கோழிமுட்டை பொறித்தகறிகேட்கவில்லை
உருகச்சுட்ட பணியாரம் அவலருண்டை கேட்கவில்லை
கருகச்சுட்டமுருக்குகளும் கடையல்பால் கேட்கவில்லை
உருக்கெடுத்த மடப்பதியில் திரிக்கொழுத்திவைக்கவில்லை
ஒருகாசும்கேட்கவில்லை உமையவளே அறிவாயோ

விளக்கவுரை :


அருள் நூல் 2071 - 2100 of 2738 அடிகள்

arul-nool

மாப்புக்கேட்க மக்களுண்டு மகாதேவன் அருளாலே
ஆயிரத்தெட்டு மாசியிலே அதிகப்பேறு பெற்றுவந்தேன்
என்னாலேஒருஞாயம் எண்ணாமல்செய்யவில்லை
எண்ணாமல்மாப்பு செய்து இரணியணைச் சங்கரித்தேன்
பின்குடுமி முடிந்தவர்கள் பூமியில்இருக்கமாட்டார்
அய்யோ பிள்ளைகளே அறிவுள்ள என்மகனே
சொல்லரிய வெயலதிலே சுடுமணலில் தானிருத்தி
சொல்லரிய கல்லேற்றி வேறுபொடியில தள்ளிவைத்தான்
இந்த அநியாயம் கேட்க ஈசுரனார் விடையும்பெற்று
பள்ளியிலேசென்றிருந்து பாடிவரும் பிள்ளைகளே
அன்றுசிரிப்பீர்களோ அதிகத்தலம் காட்டித்தாறேன்
நட்சத்திரமுதிரும் நல்வானமிடிந்துவிழும்
என்னயைறியாதபேர்கள் எரிந்துசரிந்துபோவார்
பத்தினிதான் பெற்றபிள்ளை படும்பாடு கேட்கவில்லை
கற்பித்துபெற்ற கந்தன்படும்பாடு அறியவில்லை
சொற்பெரிய திருமாலைச் சோதனைக்கு அனுப்பிவைத்தேன்
கந்தனைஅடித்தவரைப் புழுங்கிடங்கில் தள்ளிடுவேன்
ஊருணி கிடங்கெல்லாம் ஊற்றுமிகப் பெருகுதடா
சிறீலங்கை மாறியது செந்நெல் விளையுதடா
தீமெழுகநாளேச்சு சொல்லித்தாரேன் தெரியும்படி
ஆண்டிபெற்ற பிள்ளைகள்தான் அரசாட்சி ஆகுதடா
பசுவின்பால் குடித்ததுவும் பத்தினிவயிற்றில் பிறந்ததும்
பன்றிவயிறு தானொரிந்து பன்றிநெய்யாய்ப் போகுதடா
சொற்பெரிய கவுந்தலத்தில் சிலவாழ்வு யிடிந்துவிழும்
நீபெரிது நான்பொதுவடிவெடுப்பேன் பழிக்குலத்தில்
பலவேசம்போட்டதுண்டால் பத்தன்மார் அறியமாட்டான்
எடுத்தான் ஒருகோலம் இறங்கிவந்தேன் கைலாசம்
முப்புரக்கோட்டையிலே மூன்றுவேசம் போட்டுவந்தேன்
அப்பாவியென்னை யுந்தான் அறியாமல் அடித்தானே
இந்தக்கலியுகமதிலே இருக்கவொட்டான் என்னையுந்தான்

விளக்கவுரை :

அருள் நூல் 2041 - 2070 of 2738 அடிகள்

arul-nool

செப்பரியதோப்பதிலே சீதைவென்றுநிற்பிச்சியிருக்க
எப்பநான்புறப்படுவேன்யென்னுடையபத்தன்மாரே
செப்பறியதிருமாலும் அங்கிருக்க
தென்பரியதோப்பதிலே செப்பமுடன்வைகுண்டம்
ஆனைப்படிதிட்டிச்சிருந்த அறிவுள்ளபண்டாரம்
பத்தன்மாரேவெகுநாளாய் வேலைசெய்யும்பிள்ளைகளே
முன்னிருந்தயுகமதிலே தன்னியத்தால்பால்தந்தேன்
என்னையறியாதபேர்கள் இருப்பாரேகலியுகத்தில்
வங்காள அரண்மனையார் வாறாரேகலியழிக்க
என்மகளே திருநெல்வேலி எல்லாரும் ஒருமுகமாய்
சொல்லரியபுத்தினைத் தெரியும்படி சொல்லிவிடு
வெகுநாள் கலியழிக்கவிரும்புகிறேன் கருவூலமே
சொற்பெரிய தோப்பதிலே சீதையுங்கள்  அம்மையவள்
மற்பெரிய ராசனிடம் மற்பிடித்து நிற்கிறாளே
மகிழ்ந்திருந்து விளையாட வாறீரோ யென்மக்களே
திரும்பிநீங்கள் வரவேண்டாம் தெய்வசுனை அங்குவுண்டு
செங்கமாரி நோயுமில்லை தீனமில்லை பத்தன்மாரே
கவிழ்ந்திருந்து பதியரசன் கட்டிலின் மேலிருக்க
பாற்கடலில் பள்ளிகொண்டு பகுத்துவிடைவாங்கி
பஞ்சவேர உங்களுக்குப் பழிபாவம் செய்யவில்லை
திரும்பிநீங்கள் சிரித்தாக்கால் தீனமுண்டு உங்களுக்கு
கடலதிலே கெரடிமரமும் கல்லறையும் பொன்கணமும்
பொக்கணமும் புலித்தோலும் வாழைக்காய் கேட்கவில்லை
கற்பனையாய் பெற்றிருந்தபடியாலே வீற்றிருந்தேன்
சொற்பெரிய கற்பனையாய் பத்திரத்தாள்பெற்றபிள்ளை
கைலாச பணிவிடையுண்டு கலியுகத்தில் வேலையில்லை
நிறைவேலை செய்தாலும் நீதங்கேட்க மனிதரில்லை
கடலதிலே ஒருகிழவி அவதாரக்கிழவி தானும்
அமைத்துவந்தார் உங்களுக்காய் அம்மையென்ற லட்சுமியைக்
கண்டுதணிந்தவர்க்குக் கைலாசம் இங்கேயுண்டு

விளக்கவுரை :

அருள் நூல் 2011 - 2040 of 2738 அடிகள்

arul-nool

ஆதவா அரிநாராயணா போற்றி ஆதியே உந்தன் போற்றி போற்றியே
மூவர்தேடியும் முற்றாதமுதலின் திருத்தாள் பதம்போற்றி
தேவர்க்கரியதிரவியமே தெய்வமுதல் வேதச்சுடரே
காவகரியவனமதிலே கற்பை அழத்துக் கைவிட்டகன்ற
தாவாதுணையேயென்கணவா தயவேஉததுபதம் போற்றி
தீர்த்தோமெங்களைத்தானும் திரும்பக்கயிலைகழையாமலவர்
சார்ந்தோரெமது கணவரையும் தந்தேதரணி அரசான
தேர்ந்தேபயின்ற சிறுவர்களின் சிறப்புஏதும் குறையாமல்
வாழ்ந்தேயிருக்கு வரமருளும் மாயாதிருக்கும் மறைமுதலே
மாட்டி லேறும் மகாபரனே மாது உமையார் பங்காளா
காட்டிலடியா ரேழ்பேம் கற்றா விழந்த பசுவது போல்
ஊட்டி உறக்க மில்லாமல் ஊமை கண்டக் கனாவது போல்
வாட்ட மறிந்து மனமிரங்கி வந்தாய் கவரை தீர்ந்தோமே

நடை

நாரணரேநீரும் நல்லபெண்கள் யேழுபேர்க்கும்
சீரான வரங்கள்செப்பி அனுப்புமென்றார்
உடனே நாராயணரும் உள்ளம்மிகக்கழித்து
மடமாதேபெண்ணே மக்களுடதன்வழியில்
சான்றோரிடமேதான் பிறந்து கன்னியர்களாய்
இருக்கும்சமயம் யான்வருவேன் தெச்சணத்தில்
தெச்சணத்தில்வந்து சிறந்த தவம்புரிந்து
தவத்தைநிறைவேற்றி தானிருக்கும் வேளையில்
உங்களையும் வருத்தி உற்றமணம் புரிவேன்
இருபேரும்மக்களை எடுத்துபுவி ஆண்;டிடலாம்
தந்தோம் வரங்கள்தான் பிறங்கோ பெண்ணோயென்றார்

விருத்தம்


தந்தார் வரத்தை வாங்கித் தார்குழலேழுபேரும்
முந்திநாமீன்ற பிள்ளை மெய்க்குலம் தன்னில்தோன்ற
மைக்கழல் மார்களெல்லாம் மானிடர்வழியே வந்தார்
மேற்குலம் தன்னில் மாதர்விருப்பமாய் வாழ்ந்தாரன்றே.

திங்கள் பதம்

அஞ்சுதலைபோல்முகமும் ஆயிரங்கை காலுமாகப்
பிஞ்சுமலைபோல்கூட்டி பிறப்பித்துநானுமிங்கே

விளக்கவுரை :

அருள் நூல் 1981 - 2010 of 2738 அடிகள்

arul-nool

நாடுபதி னாலறிய நாமமதுவிட்டு
காணாத கற்பகப்பால் வையதிலே கொடுத்து
காளியென்ற தேவியுடைய கையில்மிக வீந்து
வளர்த்துத்தரு வாயெனவே வாக்குமிக வாங்கி
மாமுனியும் ஓர்மலையில் மானாகச் சென்றார்
இளைத்துத்தளர்ந்து கூட்டையதில் போடவென்று
எண்ணிவிட யெம்பொருமாள் எய்துவிட்டான்வேடன்
வேடனுக்குப் புத்திசொல்லி பஞ்சவரை வருத்தி
வீரத்தனமெல்லாம் தண்டாலே யவர்வாங்கி
சூரமுள்ள கூட்டையதில் தான்கிடத்திப் போட்டுச்
சூத்திர மாயவரும் ஸ்ரீரங்கம் மேவிச் சென்றார்
இப்படியே யுள்ளவரலாறான தெல்லாம்
ஆதிகருட ஆழ்வாரும் அம்மையுடன்சொல்லி
இப்போது கூட்டி வாறேனம்மா எனக்குவிடைதந்தால்
என்னடி பணிந்துசருட ஆழ்வாரும்நிற்க
நல்லதுதான் அண்ணருடைய அதிகத் திறங்கேட்டோம்
நாலுமணி நேர மாதிநாராயணரைக் கூட்டிக்கொண்டு
மாதுபார் வதிகயிலை வாழ்ந்திருந்தாளே
கயிலையில் மாதுதானும் கட்டுடனிருக்கும்போது
ஒயிலுடன் கருடனும்; ஒருதொடி தன்னில்சென்று
அகிலமும் அளந்தநாதன் அவரையும் கூட்டிவாறேன்
கயிலையில் வந்துஞாயம் கட்டுடன் உரைக்கின்றாரே
பரிதனக் குதவுமாயப் பாவைய ரேழுபேரும்
திறமையாய் தவசிபார்க்க சீர்தனைச் செய்யுமென்றார்
தவம்தன்னையேற்றாம் வாருங்கோ வெளியிலென்றார்
வெளியே வந்துமாது விளக்கமே தீர்த்தோமென்று
தெளிவுடன் வெற்றியோங்கி வாழ்வைநீதருவாய்போற்றி

விருத்தம்

சீதமாங்குணச்செல்வனே போற்றி சிவசிவாசிவனே போற்றி
நீதவாநனிநடப் பெய்துவாய் போற்றி நீ சிவசிவராகவா போற்றி
மாதவா அரிகேசவா போற்றி வல்லனே அரி செல்வனே போற்றி

விளக்கவுரை :


அருள் நூல் 1951 - 1980 of 2738 அடிகள்

arul-nool

அப்படியிருக்க ஆனகயிலைதன்னில்
அம்மையுமையும் தானேறிந்து தானேது சொல்வாள்
செப்பமுடி யாததவம் தேவியேழு பேரும்
நற்புடைய யீசுரரைச் சென்று தொழுதேற்றி
நல்லகன்னி மார்புதுமை நவிலலுற்றார் மாது
கேட்டறிந்த யீசுரரும் கெட்டி கெட்டி யென்ன
கேட்டாயோ வுனதண்ணர் நாட்ட மிதுவென்றார்
வட்டமிலாப் பூஞ்சுனையில் வந்தவரைத் தொட்டு
மாயஞ்செய்ய யேதுவினால் வந்;தஞாயம் பெண்ணே
நாட்டமுட னிந்தகதை பார்க்கப் போகவென்றால்
நாரணர் வாராமல் நாம்போவ தேதோ
கேட்டந்த யீசொரியும் கெட்டிகெட்டியென்று
கெருடாழ்வா ரைநினைக்கக உடனே யவர்வந்தார்
உற்றாயுங்கள் அண்ணருடைய ஊர்வளமை யெல்லாம்
உரைத்துவிடு வென்றாரே உலகளந்த மாதை
சித்திரம்போல் பஞ்சவர்க்குச் செய்த உபகாரம்
சிலகாலம் அங்கிருந்து சென்றார் வனத்தூடே
வீரமுள்ள தெய்வகன்னி மாரைவன மீதில்
வித்தியாதர முனிபோலே வேசமொன் யெடுத்து
கூதலையும் கொந்தலையும் கோதையர்க் கேவி
கூத்தாடி மாயவனார் கொழுந்துதீப்போ லானார்
அக்கினி வேசம்  கொண்டு அவர்கிடக்கும் மாயம்
ஆரமணி கன்னியர்கள் கூதல்பொறுக்காமல்
முக்கியமாய் அக்கினியை மோந்துவளைந் தனரே
முன்மோகம் மிகத்திரண்டு மூன்று நாலுப்பிள்ளை
பெற்றுவிட்டுக் கன்னியர்கள் மூச்சுவிட்டு வோடி
மீளும்சுனை தானிழந்து பெண்களேழு பேரும்
அத்துவனக் கானகத்தில் அருந்தவசு நின்றார்
அண்ணரொரு பிள்ளைதனை ஆவியுமே யெடுத்து
நாணாமல் பிள்ளைக்கு நாமம் சாணானென்று

விளக்கவுரை :


அருள் நூல் 1921 - 1950 of 2738 அடிகள்

arul-nool

செவ்வாய்க்கருமேனி சிறீபத்ம னாபதிலே
சென்றேகடலில் துயன்ற பாரளந்த்
சிறீபாதமே துணையாம்
ஐயவர்க்குதவுவோனே ஆதிநாராயணனே
இந்தவரத்தைதந்தருள் செய்யவேண்டும் பச்சைமாலே
தென்கடலில்துயின்ற பாரளந்த சிறீபதமே துணையாம்
ஆடரவில்துயிலும் சிவஐங்கரா சங்கரனெ
ஆலிலையில்துயிலும்நாதனே ஆபத்துக்காத்தருள்வாய்
மனதிலறியாமல் நாங்கள் மாது ஏழுபேரும்
வந்திடும்தீவினை அகற்றிடவே அருள்மாதுமைபாகனே
இனிதுயர் தீர்த்தேழுபேர்களும் யீன்றவைத்த
மதலையைத்தந்திந்த ராச்சியமும் ஆளவரம் தாருமய்யனே
பண்டூசல்செய்த முனியவர்பாரியாய் எங்களையும்
பண்பாகக்கலியாணயின்ப முடன்செய்து
பாராளுதற்குவந்தருள் செய்யவேணும்
சிசிமாது மணவைநகர்ப்பதியில் வாழ்பவரே
மேட்டுலாடமதில் மெல்லியர் கண்டாட்டி மேலுடலெல்லாம்
பொருமித்துநயனத்துவில்விளைத்ததில் ஐந்துபூவைபக்கட்டி
நாற்பத்தொன்றுபத்து ஆவிமடக்கி சயனமதில்மேவளர்த்ததபாக
நாடித்தங்கள்தங்கள் வாக்கிலொரு சீர்நாட்டிதிலோர்
விரலைநாட்டி மனம்நாட்டி நாக்குச்சுழிதாக்கி
நுனிமூக்கில் விழிநோக்கி நல்லறிவைக்கொண்டு கல்லறிவைப்
போக்கிவாக்கி சித்தியாயநோக்கி மடவார்வாசமெல்லாம்
அடைத்தொரு வாசல்நோக்கிப் பஞ்சணையில் வஞ்சியைமிஞ்சவே
இருத்திப்பார்க்கும் லாடமதில் நோக்கிநின்றார் ஏழுபேரும்
இந்த நிகட்டையாக பன்னிரண்டுவருடம் காலிழகாவண்ணம்
தவசிநின்றார் நின்றுதவசில் மண்டலரைக்கண்டு தேவரெல்லாம்
நெட்டூரமித்தவன்தான் கட்டுட் டென்பார்
மண்டலத்தில் யித்தவம்போல் கண்டறியோம் கேட்டறியோம்
விண்டறியக்கூடாத வெற்றி! வெற்றி! வெற்றி! மேலோர்மெச்சினார்

விளக்கவுரை :


அருள் நூல் 1891 - 1920 of 2738 அடிகள்

arul-nool

மெய்யோவறீய வழியிலொரு விசனத்தீங்கு கண்டிலமே
பையோடரவு மிகவணிந்தபரமன் பயிலைக்கேகவென்றால்
ஓடுவர் கன்னியர்களெல்லாம் பதறிஓம்நகச்சிவாயவெனவே
நாடுவார் நமக்கிவ்விதம் நன்னுதல்மார் ஏழுபேருமோடினார்.

விருத்தம்

பொர்பவனத்தில குளித்ததும்போச்சு
    பென்னார்கயிலை வாழ்ந்ததும் போச்சு
கற்போகுலைந்துபல கோலங்களாச்சு            
    காட்டில்பயந்திருக்கவே விதியாச்சு
என்னயென்ன பாவத்தைச் செய்தோமோ
    கண்ணேயிவ்விதி வந்தறியோமோ
வன்னசிவனார் நம்மைமறந்தார்
    மாதுமைத்தாயம் நமைமற்நதாரே
என்றந்த கன்னி யேழுபேரும்
    யியல்பாய் வனவாசம் போனார்
சென்றந்த வனவாசம் கண்டவர்மறைந்து
    சிவானர் அருள்பெறவே தவசிநன்றாரே
நின்றதவத்தின் நிலைமை கூறிட
    நித்தமேயுன்சித்த மருள்செய்வாயn
மக்களையீன்றுவந்த மாமுனியருகில்வைத்து
    வெட்கமும்மிகவேயாகி விழிநுதல்வேழுபேரும்
சிக்கெனவாகனத்தில் சென்றவரேழுபேரும்
    அம்மையருள்பெறத் தவசி நின்றார்
நின்றார் நெடுகான வனமானதிலே
    நித்தம் கற்றோனை சித்தம்வைத்தே
வண்டாடும் பூஞ்சுனையில் மாதேழு
    பேருங்குழித்து நித்தம்வருகையிலே
கோலம் வேறாகின தாலிவ்வனத்திலே
    சிவனேதஞ்சமென்று மெங்களை ஆளவருவாயே

நடை

வருவாய் வருவாய் நீ மகாபரயீ சுவரனே
வந்தெங்கள் சங்கடம் தீர்த்தாட்கொள்வாயே

விளக்கவுரை :

அருள் நூல் 1861 - 1890 of 2738 அடிகள்

arul-nool

கண்ட அகமகிழ்ந்து நல்லகாரிகை கன்னியர்ஏழுபேரும்
பண்டுமறைந்தநிதி நல்லபண்பாகக் கண்டபாவினைபோல்
வந்துகுளிர் காயந்தது நல்லமங்கைஎயெழுபேரும் போவோமென்று
பந்துதனம் உடையாரந்த பாவையேழுபேரும் சம்மதித்து
வந்துமிகக்கனலை வட்டமிட்டே வளைந்துகொண்டு
சந்துஷ்டியாய் மகிழந்து தணலை ஆவிமிகத் தானிருக்க
கொண்டாடி மாயவனார் ஒரு கோலமதால் கொள்ளைகொண்டு
பண்டாரம் மகிழ்ந்திடவே அந்த பாவையேழுபேரும் கர்ப்பமுற்று
அண்டாமல்தான்நீங்கி இவரோவெனவே எரிக்கஉன்னினரே
கொண்டாடித்தாக்கிடவே அந்த, கோதையின் கற்பிழந்து
எரிக்கமதியழிந்து அந்த, ஏலங்குழலாரியல்மறந்து
மதிக்கொத்தமாமயிலார் மாமுனியைக்கண்டு மதிஅசந்து
அய்யோநம்பெண்ணரசே நம்மறிவுகுலைந்தோம் ஆயிழையே
இத்தனைநாள்வரைக்கும் நாமிருந்த நெறியும்குலைந்தோமடி
சத்திக்குமீசுரக்கும் நாம்சாற்றும்மொழியேது தங்கையரே
வனத்திலேவந்தயிடத்திலிருந்த மாயம் வருவதறிந்திலமே
புனத்தில்கிளியன்னமும் நம்பேச்சும்கேட்காமல் போகுதடி
என்னவிதிவசமோ நமக்கிட்ட விதிமுறையிப்படியோர்
அன்னமடவாரேயிது யார்செய்த கைமசக்கானதுவோ
என்றே மிகப்புலம்ப முனியேற்றின கர்ப்பமுருத்திரண்டு
அன்றே ஒருமணிக்கர்ப்பம் அவதரித்தங்கேதான்பிறந்து
பிறந்தபொழுது பெருமூச்சுவிட்டார் ஆயிழைமாரெல்லாம்
மறக்கமதிமயங்கியந்த மக்களைப்பாராமல்மாமடவார்
நாணிமிகவயர்த்து காடு நாட்டூடேபோவென்று
கோணிமடவார் கோகோகோவென வோடலுற்றார்
ஓடினார்பெண்களெல்லாம் ஒருநொடியதில்நில்லாமல்
தேடினார்வானத்தினூடே சிவசிவா சிவனேயென்று
கோடியேமடவாரெல்லாம்; கொண்டதோர் நாணத்தாலே
வாடியேபுலம்பிமாதர்வனத்தை நோக்கிப் போகின்றாரே
அய்யா வனத்தில் சுனையாட அங்கேயிருந்து வரும்போது

விளக்கவுரை :


அருள் நூல் 1831 - 1860 of 2738 அடிகள்

arul-nool

ஈசன்யெலென்று மரத்திலந்ததேவிமார் ஏறவேணுமென்றே
மிகத்துணிந்து நல்லஏழினுள்கன்னி இளையவளும்
கூறிதுயிலெடுக்கும்வேளை கோலதிருமால் ஒரு கோலம் கொண்டார்
கொண்டதோர் கோலம்தன்னை அந்தகோதை ஏழுபேரும் கண்டிருந்து
இன்றே கைவாச்சுதன்று யெரிக்கதுணிந்ததாரே நாரணரை
தீப்போல்மிகமிகவாவி அந்த சொந்த சுனைக்கரையானதிலே
வெயில்போல் கொழுந்துவிட்முமுனி நல்லகனலாகிகிடந்தார்
கண்டந்தகன்னியரும் கனலாய்எரிந்துவிடோமென்று சொல்லி
கொண்டாடிக்கன்னியர்கள் பின்னும் குக்களித்துச் சுனையாடவென்று
துகிலைக்கரையில் வைத்தஅந்த தோகைச்சுனையில் குளித்திடவே
வெயிலான மாயவருமொரு உபாயம்நினைத்தார் உலகளந்தார்
இனியிந்தகன்னிகட்குமெத்தவெவிறையலை தான்கொடுத்து
தணியாத அக்கினியைவந்துதழுவிட கற்பையழிக்கவென்று
நினைத்தே வருணனையும் நெடுவாயுவை அங்கேவரைவழைத்து
நினைந்தே விறையல்கொண்டு நண்ணுதல்மாரேழுபேரையிப்போ
மசக்கி கொடுவாவென்றொரு மாயமதுக்கு விடைகொடுத்தார்
திசக்கியமாயமது அந்ததேவி ஏழுபேர்க்கும் சென்றதுவே
அப்போதங்கே அருணன் ஆகாசமீதிலே நின்றுகொண்டு
பொற்பொறி நரல்போல் வந்த பெண்களின்மேலே தூவினனே
தப்பாமால்வாயுவும் வளர்சரீரம் விறைக்கவே வீசனனே
மெய்யானகன்னியர்கன் மெத்தவிறையலாலுளும் நடுங்கி
ஒடுங்கி மிகக்கொடுகி யந்த உள்ளம் தடுமாறும் பெண்களெல்லாம்
இந்த விறையலுக்கு நாம்ஏது செய்யப்போகிறோம் பெண்ணரசே
சிந்தையருதடி உடல்சிலிர்க்கு முகமெல்லாம் வாடுதடி
ஆராருசெய்தததுவோ பெண்ணே ஆட்டம் பொறுக்கமுடியுதில்லை
கூரல்மிகக்காய ஒரு கொந்தணல் தன்னிலும் காணோமே
காணாமே பெண்ணரசேநம் கர்மவிதியது தங்கையரே
வாணாளயருதடி யென்று மாதுகன்னிமார் ஏழுபேரும்
பார்க்கின்றவப்பொழுது அந்தபாரான ஆவிக்கரையருகில்
தாக்கின்ற அக்கனியும் தணல்போலே குமறி யெரிந்திடவே

விளக்கவுரை :

அருள் நூல் 1801 - 1830 of 2738 அடிகள்

arul-nool

விருத்தம்

சீரணி மாயன்றானும் தெட்சணம் மீதில்வந்து
காரணமான கன்னிமார்கள் ஏழுபேரை
நாரணம் முகூர்த்தம் செய்ய நாடோருகுடைக்குள் ஆண்ட
காரணம் தன்னைக் கூறகமலப் பூமகளேகாப்போம்

நடை

சீரானகன்னியர்கள் சிவலோகம் சிவனார்க்குபூசைசெய்து
நேராய்மிகவிருக்க அந்த நேரிளைகன்னிமார் ஏழுபேர்களும்
நாராணயர்தொடர்ந்து அந்தநல்லவனத்தில் சுனையருகில்
ஆரார்மிகவறியார் அருவனம் பூஞ்சுனையானதிலே
போகாவவ்விடம்தனிலே அந்தப் பெண்கள் குளிக்கும் சுனைப்புதுமை
வாயால்தொகுத்து உரைக்கயிந்த வையகமதில் யாதுளதோ
தேவர்மிகப்போகார் தெய்வேந்திரன் வானவர்போகவறிவார்
மூவரும்போகறியாரி முனிசித்தாதிமார்களும் போகறியார்
ஒருவர் கண்காணாத அந்த உற்றசுனைக்கரையானதிலே
ஆலிலைமேல்துயிலும் நல்லவச்சுதன்பச்சைமாலங்கே சென்று
ஏலமடவாரின் துகிலெல்லாம் எடுத்தொரு ஆலதின்மேல்
ஒளித்தங்கே வைத்ததும் ஒண்ணுதலார் கன்னிஏழுபேரும்
குளித்தோடி அக்கரையில்வந்து கோலங்களைப் பார்க்கும் வேளையிலே
காணார்துகில்தனையும் கருமேகத்தைநோக்கிய ஆலமரத்தை
அண்ணாந்தவர்பார்த்து ஆடையைபார்க்கவே நோக்குவேளை
கண்டாரே ஆலமரத்தல் அவர்க்கானது கிலடையாளமென்று
கொண்டாடி கன்னியர்கள் கோ!கோ!கோ! என்ன கொடுமையென்பர்
எடுத்தாரைக்கண்டிலமே இதுஎன்மாயமோ பெண்ணரசே
கடுத்தானகற்பினையோயிது கம்மாயோ பெண்கன்னியரே
பூமிதனிலிருந்தும்நம்பொற்றுலகில் ஆலில்பறந்தென்ன
சுவாமிசிவனர்க்கு பொல்லாத தோசத்தை செய்தோமோ
கர்மவிதிப்பயனோ வேதன்கட்டளையிட்டபடிதானோ
நம்துகில்பற்து நடு ஆலமரத்திலே போயிருக்க
என்னவிதிப்பயனோ எடுத்தோரை கண்டிலோமி; பெண்ணரசே
உன்னியெடுப்பதற்கு ஒருஆளையிங்குகண்டிலோம்
என்றேமிகப்புலம்பி கன்னியேழுபேரும் மிகத்திரண்டு

விளக்கவுரை :


அருள் நூல் 1771 - 1800 of 2738 அடிகள்

arul-nool

வகுப்பதற்கு இன்னதென்றறியேன் நானும்
வகைவிபரம் நீரருளி வரமேதந்து
தொகுப்பதற்குச் சிலம்பிமுவே துணையாமென்று
இடமதிற்கில்  லாமலீடேறத் தீர்த்து
எப்போதும் எனையாளும் எம்பிரானே
யுகபதியில் மேவியுதித்தெழுந்த நாதா
உன்உவமை சொல்லுதற்கு உதவிகாப்போம்.

நடை

காப்போம் சிவபர ஆதிநாராயண கண்மணியானவரை
கன்னிமார்பாடலுக்கு முன்னைவினைத்திடகல்விக்குதவுவாயே
சேர்ப்பாயுந்தன் அருள்சிந்தையில்வைத்திருந்த தெய்வமடவார்
திருக்கறைத்கூறச் செயல்குருநீயல்லாமல் சீமையிலாருளாரோ
முக்கிபெறும் தெய்வமாதர் ஏழுபேரும் முன்னாக்கு காலமெல்லாம்
முண்டவனத்தில் கூண்டுதவம்செய்து முற்றும்நிறை வேற்றி
பக்தியுடன் நற்சொல்ல வைத்துப்படிமுறை தப்பாமல்
பாரானதெட்சணமீதானதில் வந்துபண்பாக கண்டுமையும்
வாதாடியவர்பெற்ற மக்களைக்கேட்டுன்னைவருடியே நாள்தோறும்
சீரானமக்களை யீந்துபின்னேழ்வரைச் சேர்த்துமணமருளி
தேவியும்மக்களும் மன்னவராகி நீர்சீமைதனை ஆண்டுதவும்
பண்பான இந்த கதைபடிப்பேனென்ற பாவவினை யானதெல்லாம்
பறக்கும்கருடனைக் கண்டொரு உள்ளான் பறந்து போலோக்கும்
குயில்நின்று கூவிட மந்திகுரங்குகள் கூப்பிட்டதொக்கும் மன்றோ
கூறும் செந்தமிழ்பாவணர் முன்னே குழந்தை உரைத்தேனப்பா
குற்றமதி லொன்றும்வராமல் காத்திடக்கர்த்தனருள்வேணும்
கூடும்பரவெளி ஆனந்திமார்தேவி கூடியருள் புரிவாய்
சித்தமிரங்கியே தேவிமனோன்மணி சிந்தையிலேருந்தும்
சொல்லும் கதைகனக்கல்லல் வராமலே தோகையருள் புரிவாய்
ஆண்டவளாம்அரி நாராயணருடன் உலகில்மிகவாழும்
ஆதிபராசக்திதேவி ஏழுபேரும் அன்பாயிதற்குதவும்
கூண்டபுகழ்பெற்ற சான்றோரையீன்றகோதை ஏழுபேரின்
கோலத்திருலியாணத்திருக்கதைகூற என்குரு நாதனிது காப்பதாமே.

விளக்கவுரை :

அருள் நூல் 1741 - 1770 of 2738 அடிகள்

arul-nool

குடியிருந்துகொலைகள் செய்வேன்பின்
கொலைக்கழுவில் போட்டிடுவேன்
கண்டதுண்டமாய் அழியுதப்பா கைலாசம்புரண்டுபோச்சே
பரமனென்னைக்கண்டதுண்டு தனித்து நானிங்குவந்தேன்
பரிசித்துராஜன் கண்டதுண்டு பயந்திடுங்கே ஓடிவந்தேன்
மார்க்கண்டேன் வந்ததுண்டு மறைந்திங்கே வந்ததுண்டு
வையகத்தில் எமனும் மாயனும் கண்டதுண்டு
ஈசனுடனேவார்த்தை சொல்லாதே நீபடுகுழியில் விழாதே
ஆண்டிபேர் சொன்னதுண்டால் ஆசாரஞ் செய்திடுங்கோ
கொட்டிமுழக்கிடுவேன் குடிகரை யேறுமட்டும்
பொய்க்காற்று அடிக்குதப்பா பெருவெள்ளமதாய்க்போகுதடா
கொம்புசத்தம்கேட்குதப்பா வம்புகலி யழியுதடா
இன்னும்செப்படிவித்தையொன்று செய்கின்றேன் கேள்மகனே
வையகத்தில் ஒருசாரம்
வகைவகையாய் நாடாள்வார் தேசமெங்கும்
நம்முடைய சித்துவித்தை காணக்கான மூன்றானேன்
மாயவன்பொல்லாதான் குடிகொண்டால் உள்ளறிவான்
மாசியென்றும் வாசியென்றும் மாமுனிப்பற்று சொல்லுகின்றேன்
ஒன்றுக்கொன்று பகையாச்சே உங்களுண்மைபகையானால்
விள்ளுரென்றும் ஒருவனுண்டு பலவேடிக்கைக்காறனடா
நாட்டுமுடியிறக்கி வைகுண்டராசர் ஆளவருகிறார்
நம்பிப் பிடித்திடுங்கோ அய்யா சிவசிவா அரகரா

சிவகாண்ட அதிகாரப்பத்திரம் முற்றிற்று

சத்த கன்னிமார் பாடல்

விருத்தம்


முன்னெழுதி வைத்திருந்த விதியினாலே
மூவரிய தெய்வகன்னி யேழுபேரும்
தன்னரிய நாரணரை தேடித்தேடி
தவமிருந்து நிறைவேற்றித் தவத்தாலிந்த
தென்னிலங்கை மணவைநகர் பதியிதான்
சீமைபதி தெட்சணத்தில் சென்றுகண்டு
மன்னவனும் தேவியுமாய் மகிழந்தஞாயம்
வளமையுடன் கதையாக வகுக்கலுற்றார்

விளக்கவுரை :

அருள் நூல் 1711 - 1740 of 2738 அடிகள்

arul-nool

ஞானக்கழுகுபிடித்ததுண்டால் இந்தநாட்டில் இருப்பீரோ
அண்டபகி ரண்டம்வெல்ல ஆயுதம் பிடித்ததுண்டால்
துண்டுதுண்டாய்போய்விடுவீர் துணையுண்டோ உங்களுக்கு
குலத்தைக்கெடுக்கின்ற கோடாரிக்கம்பதுபோல்
உங்களுடையபாவம் உங்களுக்கு கொல்லும்வேலா யிருக்குதடா
கோபமது உங்களுக்கு கொல்லும்வேலா யிருக்குதடா
கொலைகளவு உங்களுக்கு கொல்லும் ஆயுதமாயிருக்குதடா
வாதுசூது பிறர்மோகம் வளருதப்பா ஒருகழுகாய்
ஆசையது உங்களுக்கு என்மக்கா தோசமாயிருக்குதடா
எல்லோர்க்குங்கோபமாச்சுஇடையிலோட்டம் ஆச்சுதடா
பிரமன்பகைத்துண்டால் நீங்கள்பேசாமல்போய்வீடுவீர்
விஷ்ணுபகைத்ததுண்டால்வெறியாட்டம் கொண்டிடுவீர்
உத்திரம் பகைத்ததுண்டால் உயிர்பிழைக்கமாட்டீரப்பா
காலனும் வந்துவிட்டால் உங்களைக்
கைபிடியாய் கொண்டுபோவான்
இத்தனைபேர் சோ;ந்திருக்க ஈசென்ன செய்வேனப்பா
அவரவர்க்கு இட்டகுறை ஆதிமுனி என்னசெய்வேன்
நடுத்தீர்ப்புக் கேட்குதற்கு நாளடுத்து வருகுதப்பா
நடுத்தீர்ப்புக்கேட்டவுடன் நாடாள நான்வருவேன்
சீசன்மார்தன்னிடத்தில் மக்கள்தெளிவாக கேட்டிடுங்கோ
சொல்லுங்கப்பா அன்பருக்குத் துணையாயிருந்திடுங்கோ
உன்னோடு என்னாளும் உயிர்க்குயிராயிருப்பேனப்பா
ஊட்டுகிறேன் ஓட்டுகிறேன் நான்உயிர்க்குயிராயிருக்கிறேன்
வம்புவசைபேசாதே என்வாளுக்கிரையாகதே
ஏசாதேபேசாதே யென்கணக்கர்சீசர்களே
சிரிப்பாரோடேயிருப்பேன் நகைப்பேன்நாக்கறுப்பேன்
முன்னாலேஒடுக்கிவந்த ஒருவரையும் விட்டதில்லை
எதிர்த்தவனை வைத்தேனோ உங்கள்யிருகாதுங்கேட்கலையோ
கள்ளனிடம் நானிருப்பேன் பின்காட்டிக்கொடுத்திடுவேன்
பிடித்தவனோடே யிருப்பேன் அவரைபிள்ளை போலாக்கிடுவேன்

விளக்கவுரை :

அருள் நூல் 1681 - 1710 of 2738 அடிகள்

arul-nool

மேளதாளம் குரவை தொனி வேண்டாம்காண் யீசனுக்கு
ஓரு அன்புமலரெடுத்து அனுதினமும பூஜைசெவ்வாய்
நடுதீர்ப்பு நான்கேள்க்க நாளதுக்கு வருகுதப்பா
பள்ளிக்கணக்கரெல்லாம் பாடஞ்சொல்ல வேணுமடா
நாட்டு கணக்கெடுத்து நாம் தீர்ப்பு நடத்தயிலே
என்மக்கா சீசர்களே எடுத்தெழுதி சொல்வீர்களே
அம்பலத்து கணக்கர்களே நீங்கள் அறியவில்லை என்பீர்களே
காப்புக்கட்டி வைத்தமகன் கனபவுசு எண்ணுகிறான்
பண்டம் பறிபோகுதடா அவர்களை பாரச்சிறை வைத்திடுவேன்
ஆயிரத்தெட்டாம்மாசியிலே ஆண்டிபுத்திசாலிவந்தேன்
வழிதப்பி எல்லோரும் மயங்குகிறார் கேள்மகனே
ஆண்டிக்கு கோபமானால் அழிந்துவிடும் முப்புரம்போல்
அடங்காதகோபமாச்சே ஆண்டியென்ன செய்வேனடா
மக்களுக்கு வேலைசெய்ய மனமில்லைஎந்தனுக்கு
இன்னும்ஒருகாரணம் எடுத்தெழுதிசொல்லுகிறேன்
அவரவர்க்குத்தனித்தனியே ஆண்டிபுத்திசொல்லிவந்தேன்
நந்திசொன்ன உபதேசம்மக்கள் நாள்தோறும்கேட்டிருந்தும்
நீலனுக்கு மூக்கனுக்கு சொன்னநெட்டூரம்போலாச்சே
முன்னும்பின்னும் சொல்லியிருந்தும் முழுமோசம் ஆகிபோச்சு
புத்திகெட்டபிள்ளைகளே நீங்கள் சக்திகெட்டுபோனீர்களே
ஒருகாதில்தான்கேட்டு ஒருகாதில் விட்டீர்களோ
இனிநம்மா லேயாகாது நமக்குஇவ்விடஞ்செல்லாது
வல்லாண்மைசெல்லாது வலுவழக்கு ஆகுதிங்கே
பொல்லாப்புக்கட்ட வேண்டாம் போறென்கைலாசம்
நாதனுமேகேட்டதற்கு நன்மையொருவாpல்லை
நாதனுமே கேட்டதற்கு நன்மையொருவாpல்லை
கண்டகோவில்தெய்வமென்று கையெடுத்தால் பலமுண்டோ
கடுவாய்பிடித்ததுண்டால் காணாமல் மறைந்துவிடுவேன்
பாம்புகடித்ததுண்டால் பதைத்துநீங்கள்பட்டிடுவீர்
இனவாதை பிடித்ததுண்டால் இருப்பீர்களோ இவ்வுலகில்

விளக்கவுரை :

அருள் நூல் 1651 - 1680 of 2738 அடிகள்

arul-nool

பார்த்து உங்கள் சாஸ்திரத்தை படித்து அங்குயிருக்கிறார்
கடலதிலே தீர்த்தம் செய்து உங்கள் கர்மவீனை தீர்த்திடுங்கோ
கடலுக்குள் ஒருபாப்பான் பலகர்மங்கள் நடத்துகிறான்
வய்யகத்தில் வைகை வாசல்காவலாளி ஒன்பது பேர்
ஒன்பதுபோர் அங்கிருந்து பலஉபகாரஞ் செய்கிறார்
கயிலைமலை தன்னை கண்டு கனத்தவஞ் செய்தமக்கள்
கயிலைமலையானதிலே ஒருதவசியிருந்து வாடுகிறார்
அந்த தவத்தினுட அதிசயத்தை உங்களப்பன் சொல்லுகிறேன்
ஓடிஓடி பார்த்தாலும் ஒருவருக்கு தெரியாது
காயம்பு மேனியனார் கண்ணில் அதுகாணும்
தூங்காமல் தூங்குகிறார் அதன்சூத்திரத்தை அறிவாரில்லை
அடங்காத தவசுதான் அதின்நஞ்சயிறிவீர்களா
வயிற்றுக்கிரைதேடி வாறார்காண் அக்குருவும்
எண்ணடங்கா சொருபத்தலே அதில்என்சொருபம் அங்கு உண்டு
பிடித்த பிடிவிடாது பேயாண்டி சொல்லுகிறேன்
எங்கே எங்கே என்றுசொல்லி எட்டுதிசை பார்க்குதடா
பிழைப்பதற்கு வழிபார்த்து பிலத்தவஞ் செய்திடுங்கு
நான்மறைக்ககூடாது ஞானமுத்து சொல்லுகிறேன்
எங்கே எங்கே ஒளித்தாலும் யிரவுபகல் ஒன்றார்க்கும்
அன்பர்களே என்மக்களே அறிந்தோர் அறிந்திடுங்கோ
நஞ்சு எச்சி தின்றவர்கள் ஞானக்காளிக்கிரையாவார்
மேலும் எய்யாத சமயமதுள் இருக்குதுடா ஆளிப்புழு
வையகத்தில் பொய்களவு வாதுசூது பிறர்மோகம்
செய்யாத தீவினைகள் செய்தபேர் உண்டுமானால்
அகிலகிடங்கில்வாழும் ஆழிப்புழுக் கிரையாவீர்
முன்கணக்கும் பின்கணக்கும் முதற்கணக்கும் நான் கொடுத்து
கணக்கையெறிந்துவிட்டேன் கனகயிடம் தூத்திவிட்டேன்
வாழும்பள்ளிமேலவாசல் ஒன்றை அடைத்துவிட்டான்
பட்டந்தனைபறித்து அவர்களை பாரச்சிறை வைத்திடுவேன்
ஆடுகிடாய் கோழிபன்றி ஆயனுக்கு வேண்டாம் காண்

விளக்கவுரை :

அருள் நூல் 1621 - 1650 of 2738 அடிகள்

arul-nool

அதிகாரபத்திரத்தில் அரவர்க்கு தீர்ப்புண்டு
சத்தியத்தீர்ப்புகேட்க மத்திபத்தைச் செய்யாதே
மத்திபத்தைச்செய்தாயானால் மனநாகந்தீண்டிவிடும்
தீர்ப்புக்கேட்கநாளாச்சு தெரிந்தோர் தெரிந்திடுங்கோ
தம்பிகணக்கனையும் தான்கூட்டி வாறேனப்பா
நெடுநாமம் அழியுதடா நேர்வழி தோணுதடா
தரணியது அழிந்தாலும் சத்தியம் அழியாதப்பா
சிவகாண்டதீர்பெழுதி தெரிவித்தேன் என்மகனே
வீட்டுக்கொரு கணக்கன் யிருக்கிறான் வையகத்தில்
உன்நாவில் நானிருந்து நடுதீர்ப்பு செய்யுகிறேன்
பலசொருபம் பாடிவைத்த பத்திரத்தை பார்த்திடுங்கோ கண்ணுமக்கா
யின்னும் ஒருகாண்டம் எழுத்தெழுதி பாடுகிறேன்
அயோத்திப ட்டணந்தான் அழியுதப்பா என்மகனே
அச்சுத்தேரி ஒடியுமுன்னே ஆண்டிவேலை செய்திடுங்கோ
பஞ்சவர்கள்  அஞ்சுபேர்தான் பதியதுதான் அழியுதப்பா
குருநாடு அழியுதப்பா கோபாலகுருசாமி சொல்லுகிறேன்
மந்திரமும் நானானேன்  மருந்துமூலி நானானேன்
சந்திரனும நானானேன் சூரியனும் நானானேன்
சேரசியங்கள் சூத்திரங்கள் பலசாஸ்திரங்கள் நானானேன்
எண்ணடங்கா சோதிபரன் மண்ணடங்கியிருக்கிறேன்
வேதாந்தம் சித்தாந்தம் விளம்பிவைத்தேன் வையகத்தில்
கொத்தை குறையாதே குறைமரக்கால் வையாதே
துலங்குதப்பா மேல்பதிதான் துணையாகும் உங்களுக்கு
உபதேசம் சொல்லும் கூலிஉடன் கையில்கொடுத்திடுங்கோ
பத்திரத்துக்கெழுத்து கூலிபலயிடம் வாங்கி கொடுத்திடுங்கோ
பள்ளிகண்கரெல்லாம் பதிவு குறையாமல் கொடுத்திடுங்கோ
கற்ப மூலி உங்களுக்கு கர்மவீனை தீற்குமுலி
காணுதப்பா அப்பதிக்குள் ஒருகனத்தமுத்துயிருக்குதடா
யின்னும் ஒருகாண்டம் எடுத்தெழுதி சொல்லுகிறேன்
பாவனாசம் மானதிலே பள்ளிகொண்டார் தர்மலிங்கம்

விளக்கவுரை :


அருள் நூல் 1591 - 1620 of 2738 அடிகள்

arul-nool

முன்னோலைவாசகத்தை முழித்திருந்து கேட்டிடுங்கோ
பின்னாலே கண்டதுதர்ன போகுதடா என்மகனே
சத்தியமாநடந்திடுங்கோ நான்சடையாண்டிசொல்கின்றேன்
மாசியென்ற மாதத்திலே உங்கள்மாமனுக்கு போதாது
நாட்டில்குறிகள்சொல்லி நான்பிழைக்கவந்த இடந்ததினிலே
வந்தஇடந்தனிலே ஒருவலுக்கடுவாய் வருகுதப்பா
கடுவாய்கண்டால்விடாது நான்காணாமல்மறையபோறேன்
ஏகமெங்கும்வெளியாச்சே நளானெங்கேஒளித்திடுவேன்
கடலதிலேபோகுமுன்னே எனைகடுவாய்ப்பிடித்துகொள்ளும்
வேதமுத்துஞானமுத்துஉங்களுக்கு வேண்டும் வேலைசெய்யுமுத்து
சப்பாணிக்கிழவனுக்கு தங்கயிடமல்லையப்பா
பார்தனிலேதான் அடங்கிமக்கள்மனதிலேயேயிருந்துவிட்டேன்
பண்டாரக்கிழவனுக்கு பயந்தெளிப்பார்யாருமில்லை
எங்கெங்கே போனாலுமெனக்கிரவுபகல்ஆகுதப்பா
என்மக்காள்சீசர்களே நானிதுவரை புத்திசொல்லிவந்தும்
அறிந்தோர் அறிந்திடுங்கோ அறிவுள்ளோர்கேட்டிடுங்கோ
தெரிந்தோர் தெரிந்திடுங்கோ உங்கள்சித்தம்பலதாண்வரை
தெளியார்க்குபதேசம் நீசெப்பிரு என்மகனே
இரப்போர்க்கு அன்னமது ஈந்திடுங்கோ கண்ணுமக்காள்
ஆடைகொடுத்திடுங்கோ அம்பலாசாரஞ் செய்திடுங்கள்
கொடுத்தால் அன்னம்குறையாமல் கொடுத்திடுங்கோ
கொடுத்தால்பதவியுண்டு குறைவில்லைஉங்களுக்கு
படித்தோர்கேட்டிடுங்கோ பலபாசைக்காரர்கள்
அடிப்பார்அடிக்கவந்தால் அடியைச்சகித்திடுங்கோ
வம்புவசைகள்சொல்லி வைதாலும் கேட்டிடுங்கோ
அவரவர்கள் தன்கணக்கு உங்கள் அரசனிடத்திலிருக்கிறது
என்பேரைச்சொல்லி எவரெவர்வந்தாலும்
அன்பாக அன்னமிட்டு ஆதரித்த பக்தருக்கு
என்னஎன்ன அபாயம்இடுக்கமதுவந்தாலும்
அன்னேரம்நாராயணன் ஆயனங்கேநான்வருவேன்

விளக்கவுரை :


அருள் நூல் 1561 - 1590 of 2738 அடிகள்

arul-nool

கங்கைபால் வற்றுமப்பாகிழவன்பண்டாரம் சொல்லுகின்றேன்
வெட்டவெளிதனில்மக்காள்வேலி பயிராகுதப்பா
ஊரோட்டம்தேரோட்டம் மக்காளொன்றுவட்டம் ஆகுதடா
மாரிவெள்ளம் அழிக்குதடா மாயாண்டி சொல்லுகிறேன்
கூத்தாடிக்கூத்தாடி நான்கொள்ளிவைத்துப் போவேனடா
கொள்ளிவைக்கும்குமரனடா கொப்பன்நந்தி யீசனடா
பள்ளிக்கணக்கனடா நான் பள்ளியிலே ஆடிவாறேன்
கங்கைநீர் ஆடிவாறேன்கிழவன் பண்டாரக்கூத்தாண்டி
வெள்ளானை மீதிருந்து விளையாடிப்பாடுகிறேன்
துரியோதனனுக்கு நாரதமுனி வாறேன்நான்
பாட்டனும் பூட்டனும்நான் பாரசித்த பிச்சைக்காரன்
நேரில் பிரியமும்நான் பேதைக்கோலம் மாறியும்நான்
அஞ்சாடு மேய்த்தடைத்த ஆனந்தக்கோன் வந்தேனடா
கூடாரத்துக் குள்ளிருந்து குலவிசை செய்திடுவேன்
நான்பாவி பொல்லாதவன் நாட்டில்ஒருவருக்கும் ஆகாது
கோட்டிகொண்ட பித்தனடா குடிகொடுக்ககுருவும்நான்
உன்கூட்டுக்குள்ளிருந்து குறிபலதும்சொல்வேன் நான்
தேராண்டியப்பா நான் தெருவீதி ஆடிவாறேன்
கைலாசம் தனிலிருந்துபல காரணங்கள் முடிக்கவந்தேன்
ஆணானேன் பெண்ணானேன் அடங்காத சொருவமானேன்
அஞ்சாடு மேய்ந்திருந்தஉங்களுக்கு ஆடபேறாய் நானிருந்தேன்
கஞ்சிவெள்ளம் கொடுக்கவுங்கள் கனவிலும் எண்ணமில்லை
ஒடுங்கிவிட்டேன் ஆடுமேய்த்து ஒருபலனும்கண்டதில்லை
இனிகடுவாய்க்கிரையாக காட்டிக்கொடுத்திடுவேன்
கும்பி கொதிக்குதடா எனக்கினி குடியிருக்கலாகாது
போவேன் கைலாசம் பின்அடி மாதத்திலே
முன்னாடி பின்னாடி முழுதெய்யாத ஆடியானேன்
கண்டபொருள் திரவியங்கள் காணாமல் போகுதடா
அஞ்சுவீடு அழியுதடா ஆண்டிநான் என்னசெய்வேன்
பஞ்சவர்ண மேடைகளும் பள்ளிவாசல் அழியுதடா

விளக்கவுரை :


அருள் நூல் 1531 - 1560 of 2738 அடிகள்

arul-nool

கூத்தாடிச்சித்தனும்நான் கூன்கிழவன்பண்டாரம்
பண்டாரக்கிழவனடாநான் பதிவைத்து பிடித்திடுவேன்
இன்னுமென்னை அறியவில்லை சோபனமும் சொல்லவில்லை
மருந்துவாழ்மலையென்று மயங்குகிறாரென் மக்களெல்லாம்
மேலுங் கீழுந்தெரியாது
நான்மெய்யன்மகன் பொய்யனப்பா
கட்டுப்பாடுமொட்டாத நான் உன்குருவும் சொல்லுகிறேன்
கங்கையிலேதீர்த்தமாடி உங்கள்கேசவரை போற்றிடுங்கோ
காயக்காரன் மாயசித்தம் நானுங்கள்
கண்காணப் பெருவழியேன்
அவரவர்கள்செய்யுங்குற்றம் உங்களாண்டி அறிவேனடா
கடலதிலேதீர்த்தமாடி நீங்கள்கனத்தவம் செய்திடுங்கோ
உங்கள்கங்கையிலே எப்போதும்கேசவன் இருக்கின்றேன்
மயங்குகிறார் ஏழுபெண்ணும் இந்தவையகம் அறியவில்லை
நளாலுதிசைக்குள்ளாக நடுவேயென்று இருக்குதப்பா
அந்தமூலைப்பேருஞ்சொல்வான் அறிந்தோரறயிந்திடுங்கோ
தெட்சணாமூலையிலே பதிபோட்டிருக்குதடா
அதுகுட்டிபோட்டுஇருக்குதப்பா முக்கோடிதவஞ்செய்து
பார்தனிலே அக்குருவும் பதிபோட்டிருக்கின்றாரே
இரவுபகல்எப்போதும் அவர்க்குயிரைபோட்டாற்றுவதில்லை
அஞ்சாமல் பிடித்திடுங்கோ அடங்கிடுவாரக்குருவும்
நஞ்சுதின்று நாளாச்சு நான்மறையப்போறெடனா
வஞ்சகமில்லை சொன்னோம் வழிபார்த்துப்பிடித்திடுங்கோ
வையத்தில்யாபேர்க்கு மொருவலுச்சக்கரம்வருகுதப்பா
கந்தன்திருவேலனே என்ன ஆண்எயென்றறியமாட்டான்
கண்டதுண்ட மாகவல்லோ கனத்தபூமி வெடிக்குதடா
கோலநடுமாலயனும்சாலங்கட்டி ஆடுகிறேன்
காளிவெள்ளம் வருகிறதுகப்பல்செய்து வைத்திருங்கோ
நாடெல்லாம் காடாகும் நல்அக்கினிவந் தாகுதடா
நாலுகாலு ஜீவஜெந்து நாட்டிலில்லை ஓட்டமடா

விளக்கவுரை :


அருள் நூல் 1501 - 1530 of 2738 அடிகள்

arul-nool

நானாண்டி ஆண்டிநடுக்காட்டு குருவாண்டி
கேளாண்டிகுலத்தாண்டி இந்தகுவலயத்தை அளந்தாண்டி
சித்தாண்டிசிவனாண்டி இந்ததேசமெங்கும் நானாண்டி
மாலாண்மாறாண்டி நான்மாலும்சிறு ஆண்டியடா
கந்தைத்துணிதோளிலிட்டு கந்தப்பனும் நான்வருவேன்
இன்னும்சிலகாண்டம் எடுத்தெழுதி சொல்கிறேன்
ஆயிரத்தெட்டாம்மாசியிலே கலியுகத்தில்வந்தேனடா
சாதியானலிங்கமொன்று சமுத்திரத்துள்ளிருக்குதடா
ஆதியானலிங்கமதை நீங்கள்தினம் போற்றிடுங்கோ
அதில், முத்தியுண்டு  சக்தியுண்டு முனிபரனும்பாடுகிறேன்
கோலநெடுமாலயனும் கோலம்கட்டி ஆடுகிறேன்
நித்தம்செத்த பாவியப்பா நாதனெடுத்து தாறேனப்பா
செத்துச்செத்துப் பிறப்பே னடா
என் சித்துவித்தை அறிய மாட்டேன்
அல்லும்பகலும் குறிகள்சொல்லி அவதிமெத்த ஆச்சுதடா
ஆடுதடா ஒருபம்பரம் தான்
அதையமர்த்த வல்லாருண்டோ
காணுங்குறிசொல்லுதற்கு கழுகுமலையாண்டிவந்தேனடா
இனிதேனமலர் மீதிருந்து பலசிறப்புச் செய்யவாறேனடா
உங்கள் குலதெய்வமென் றுஎனக்குக்கடன் செலுத்தயாருமில்லை
ஏவல்செய்யும் பிசாசாலே என்மக்காள்ஈடழிந்துபோனீர்களே
மகாலிங்கம் சொக்கலிங்கம் மாயமுத்து சோதிலிங்கம்
ஒருமுத்துலோகமுத்து இந்த உலகமெங்கும் பெருத்தமுத்து
ஏகமுத்து நாகமுத்து எங்கும்முழு முத்தானேன்
வையமெல்லார்முத்தாச்சு அதைவகையறிவாரில்லையப்பா
காடெங்கும்கனத்தமுத்து அதை கண்டெடுப்பார்யாருமில்லை
சத்துக்குள்ளமுத்தப்பா அதுவுங்கள் சகலவினைதீர்க்கும்முத்து
பக்தியுள்ளமுத்தப்பா அதுவுங்கள் பதியேறும் அந்தமுத்து
கண்டவர்எடுத்திடுங்கோ உங்கள் காரணத்தெய்மப்பா
ஆணாகிபெண்ணாகி உங்கள் அம்பலக்கூத்தாடியப்பா

விளக்கவுரை :


அருள் நூல் 1471 - 1500 of 2738 அடிகள்

arul-nool

ஆணும்பெண்ணும் கூட்டியாட்டி
ஆக்கிவைக்க நான்வருவேன்
நாலுவகைக்கணக்கிலும் நான்தீர்ப்புச்செய்ததுண்டு
செம்பவளத்தேரறி
நான்தேசமெல்லாம்  பார்க்கவாறேன்
வம்புவசை அதிகமப்பா வகையறியாமல் மயங்குகிறார்
ஆங்காரம்அடிபிடிகள் அதிகமச்பாதேசமெங்கும்
கொலைகளவு அதிகமப்பா குடிகேடுஆச்சுதப்பா
பெண்ணாலெஆண் அழிவு பெருகுமடாபூமியெங்கும்
ஆணும்பெண்ணும் அழிவாகும் அம்பலத்ரசர் முடிவாகுதடா
வறுமையதுதான் பெருத்து நீங்கள்வழிதப்பிப்போவீர்களே
பொய்புரட்டு அதிகமப்பா பொருத்தல்லைமிகலிநமக்கு
தானமானமில்லையப்பா சாதிவரம்பழியுதடா
சங்கக்கூட்டம் இல்லையாடா சரசக்கூட்டம் இக்கலியில்
கொம்பன்புழு வென்றறியாமல் குதிபோடுகிறார்கலியில்
மக்களுக்கு உத்தரவு மால்சொல்ல நீதிஉண்டே
அறிவுசொல்லி தெளிவுதர
நான்அம்பலத்தில் கணக்கர்வைத்தேன்
நான்வைத்த கணக்கரெல்லாம் நன்றுநடுக்கேட்கவில்லை
ஆடிநன்றாய் பாடிநன்றாய் கொடுக்கவில்லை என்மகனே
ஆதிபரன் சோதிநாதன் அதிகாரம்செய்யவாறேன்
புத்தியினால் கெட்டவரே பிழைக்கமதிதேடுங்கப்பா
அதிகாரசச்சட்டமது அவனியெங்கும் ஆகுதப்பா
பத்திரத்தைப்பாடிவந்தாலும் பாதையிலேபோகவிடான்
கொடியென்றநாகமது கொத்தும்வேளை அறிவீர்களோ
அடங்காத பாம்பதுதான் அதன்நஞ்சை அறிவீர்களோ
எண்ணடங்கா பாம்பதற்கு இருக்கிறார் இரையாக
இருபத்தைந்துபாம்பாக உங்களிடம்பார்க்கவருகிறாரே
சான்றோரிடமிருந்து பலசாத்திரங்கள் சொல்லித்தாறேன்
என்னாலேஆகுமட்டுமிதுவரைக்கும் புத்திசொன்னேன்

விளக்கவுரை :


அருள் நூல் 1441 - 1470 of 2738 அடிகள்

arul-nool

குருபுத்தி யார்க்கும் உள்ளதைநான்
சொல்வேன் கேள்மகனே
அப்பூவைத்தானெடுத்து அணிந்திடுங்கோ கண்ணுமக்காள்
மூன்றுநாமம் ஒன்றுபாம்பு
அதுமூன்றும் ஆடுதப்பா
கொத்தினால் திரும்பாதப்பா
அதுகுடிகெடுத்தப் பாம்புவிசம்
தலைமன்னர் மீதிருந்து பலசாஸ்திரங்கள் சொல்லுதப்பா
சங்குக்குள்ளிருந்து வந்தேன் வையகத்தில்
கும்பக்கோணப்பாதையாக குறிகள்சொல்லி வந்தேனப்பா
விள்ளுர் தனிலிருந்து விரைத்துவந்தேன் வையகத்தில்
ஏகன்போக னப்பாநான்
இருப்பதை அறிவாரில்லை
கருவூர்தனிலிருந்து கனவருத்தப் பட்டுவந்தேன்
பாலன் சிறுகுழந்தை வந்தபாதையறிவீர்மக்காள்
உங்களுக்கு வேலைசெய்ய நான்
உலகில்வந்தேன் கண்ணுமக்காள்
இருமனதா லெண்ணாதே பின்
எனக்குஉத்தரம் சொல்வாயn
மருந்துவாழ் மாமுனிவன் மாயசாலக் காரனும்நான்
நாடெல்லாம் பாடியாச்சே
நாதனென்ன செய்வேனப்பா
வேலை செய்தால் வினையில்லையே
அந்த விசமதுதான் அனுகாதப்பா
மந்திரத்தால் தந்திரத்தால் மாரணத்தால் தீர்ந்திடுமோ
எல்லோர்க்கும் கோடிப்பாம்பு இருக்குதப்பா சத்துருவாய்
நல்லோரைத் தீண்டாது நாதனிங்கேசொல்லுகிறேன்
முச்சந்திக்குள்ளிருந்துபாம்பு உச்சம்பெற்று வருகதப்பா
ஆவென்று அழுதாலும் அருந்தவப்பட்டாலும்
கூவென்று அழுதாலும் கொத்திவிடும் அப்பாம்பு

விளக்கவுரை :

அருள் நூல் 1411 - 1440 of 2738 அடிகள்

arul-nool

மண்டலத்துப்பெண்மாய்கையாக மாலயனும் நானானேன்
கள்ளனானேன் வெள்ளனானேன் என்காரணத்தைஅறிவாரில்லை
ஆலிலை மேல்பள்ளிகொண்ட அருமைசற்றேசொல்வாரில்லை
வாரிதனை யடைத்தஅருமை சற்றுமில்லை யென்மகனே
அண்டமெலாம் பிண்டமதாய்
ஐந்தறைக்குள் அடக்கிவிட்டேன்
கடலை அடைத்ததினால் உங்கள் கண்மயங்கலாச்சுதப்பா
நான்எந்நாளும் பள்ளிகொண்டுஇருப்பதை நீயறியவில்லை
அமிர்தமது தான்கடைந்த அதிசயத்தைச் சொல்மகனே
ஆயர்பாடி ஊர்தனிலே ஆயருட பட்டணத்தில்
ஒருபதினென்னாணியித்து ஏற்றபெண்கள் தங்கள்முன்னே
மாப்பிள்ளையா நானிருந்த மாயச்சித்தை சொல்மகனே
எண்ணிடங்காபெண்களுக்கு இருக்கிறேன் மாப்பிள்ளையாய்
ஐந்துதலை நாகத்தின்மேல் ஐயாபள்ளி கொள்வதியல்லையா
பத்தவதாரம்பிறந்த பாதைகளைச் சொல்மகனே
என்னையறியாமல் ஏதும்வகை உலகிலில்லை
தன்னையறித்ததுண்டால் தலைவனைநீயறிவாய்மகனே
கண்ணால்மனக்கண்ணாலே காணுமப்பா வழியதுதான்
என்னை யறிந்தவர்க்கு ஈசன்வழி சொல்லுகிறேன்
உங்களுக்குமண்ணில் மூவாசையதுமாற்றானாய் இருக்குதடா
வட்டக்கோட்டைக்க காட்டுக்குள்ளே நட்டுவனார்கொட்டுகிறார்
சூத்திரக்கணக்கென்று சொல்லுகிறேன் கேள்மகனே
பஞ்சவர்ணக்கிளி கிளியொன்றிருந்தது
பறந்துபோகக் கண்டேனடா
ஏழுபெண்கள்கதையை எடுத்துச்சொல்ல நாளாச்சே
பாம்புச்செடிக்குள்ளிருந்த பாம்பு படம்விரித்து ஆடுதடா
ஈரேழுஉலகமுண்டு இதையெடுத்துச்சொல்வார் யார்மகனே
சாதியான கொடியபாம்பு சதிசெய்யும் பாம்பதுதான்
முப்பூவை தானெடுத்து
அதைமுத்திசெய்தால் சக்தியுண்டு

விளக்கவுரை :


அருள் நூல் 1381 - 1410 of 2738 அடிகள்

arul-nool

ஆதிபரன் சித்து வித்தை மண்ணால்
உனைமனைந்து பலமாய் கையினால் உனைவகுத்தேன்
உந்தன் பலங்குலைக்க உலகில்பெண்ணை வகுத்துவிட்டேன்
உண்டாக்கிவைப்பதுநான் உலகில்அழிப்பதும் நான்மகனே
ஏகமதாய் நிறைந்தபரன் இருந்துலகை அளுகிறார்
கண்ணுமக் காள்என் சூத்திரத்தைக்
கண்டறிந்து பாருங்கப்பா
பதிமூன்றுக் குள்ளிருந்து பாடுகிறேன் சிவகாண்டம்
இரவுபகல் வேலைசெய்தாலும் யீசன்வேலை முடியாதப்பா
இருபத்தி மூன்றுதெய்வம் யீசனெங்கும் வடிவானேன்
இருமூன்று தனியுகங் ஈடளித்த மாயனப்பா
இருபத்தி நாலாயுகம் இருந்துபுத்தி சொல்லுகின்றேன்
இருபத்தி ஐந்தாயுகம் எழுந்திருந்து வந்தேனப்பா
ஐம்பதிக்குள் அதிசயம் தான் அறிந்திருங்கோகண்ணுமக்காள்
குடியிருந்து ஐந்துயுகம் கொள்ளிவைத்து போறேயனப்பா
ஒன்றிரண்டு ஐந்துக்குள்ளே உலகடக்கி அரசாள்வீர்
இன்னும் ஒருகாண்டம் எடுத்தெழுதி சொல்லுகிறேன்
இருபத்திரண்டு காரணம்ஈசன்சொன்னேன் சிவகணக்கு
மூன்றுபத்து இரண்டறம்நான் வளர்த்தேன் கலியுகத்தில்
நாள்தோறும் மிரண்டுஅறம் நாதன்வேலை செய்தாலும்
அதற்கு தண்ணீர் ரதுதான்கொடுப்பா ரில்லையப்பா
அண்டத்திலோரம் தான்நாதன் சொல்லுகிறேன் தப்பாது
அண்டபகிரண்டம்வெல்லவொரு ஆயுதம்வந்திருக்குதப்பா
இட்டவாளுக்கிரையாக இருக்கிறார் சத்துருக்கள்
திருச்சம்பதி அழியுதடா திருமாலுஞ் சொல்லுகிறேன்
எட்டுத்திசை வட்டக்கோட்டை கட்டுமுட்டாயிருக்குதடா
மச்சமுனி நானுமப்பா மாயச்சொருபமறிவாயோ
ஊமையானேன் செவிடானேன்
பித்தனானேன் பேயனானேன்
என்பெருமையெங்கும் அறிவாரில்லை

விளக்கவுரை :


Powered by Blogger.