அகிலத்திரட்டு அம்மானை 2401 - 2430 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2401 - 2430 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

ஈயேனெனச் சொன்ன இயல்புகேட் டெம்பெருமாள்
கன்னன் பிலமும் கடியவிது ரன்பிலமும்
மன்னன் சிறுபீஷ்மர் வாழுந்துரோ ணர்பிலமும்
தென்னன் துரியோ தனன்பிலமுந் தானழித்து
வன்ன விசயனுக்கு வாளி பலகொடுத்து
வீமனுக்கு நல்ல விசைதண்டா யுதங்கொடுத்துத்
தாமன்சகா தேவனுக்குச் சத்திசூலங் கொடுத்து
நகுலனுக்கு ஆயுதமும் நல்லபரி கொடுத்துப்
புகலான தர்மருக்குப் பொறுமை அரிகொடுத்து
மங்கை துரோபதைக்கு வாய்த்தக் கனல்கொடுத்துச்
செங்கையிலே பாரதத்தைச் சேவித்தார் மாயவரும்
மாயருட கையில் வளர்ந்த திருமுடியில்
ஓசையிட வொன்று ஒத்துதே பாரதப்போர்
ஐபேருட படையும் அரவக்கொடி யோன்படையும்
கைப்போரு விற்போரும் கணைப்போரும் வாள்போரும்
அம்புப்போ ருங்கரியின் அச்சுப்போரும் பொருது
கன்னன் சகுனி கனத்தவலுச் சல்லியனும்
மன்னன் சிறுபீஷ்மர் வாய்த்த துரோணர்முதல்
சராசந் தன்வரையும் சத்தியக் கீசகனும்
பூராச வீமன் பெலியிட்டா னம்மானை
இத்தனைப்பேர் மாண்டால் இருப்பாரோ நூற்றுவரும்
அத்தனைபே ரையும் அறுத்தா னருச்சுனனும்
துரியோ தனன்படைகள் சேர மடிந்தபின்பு
விரிமாறு தூவி வெளியில்வந்தான் மாபாவி
தம்பி படைகள் தலைவர் புதல்வர்முதல்
வம்பி லிறந்தாச்சே வாழ்வெதே னென்றுசொல்லி
எல்லா ரிறந்திடிலும் எண்ணமில்லை யென்றிடலாம்
வெல்லாரும் வெல்லா விசகர்ணன் மாண்டதினால்
இருப்பதோ பூவுலகில் இறப்பதுவே நன்றெனவே
விருப்பமுள்ள கர்ணனைத்தான் வெற்றிகொண்ட அர்ச்சுனனை

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi