அகிலத்திரட்டு அம்மானை 6391 - 6420 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 6391 - 6420 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அன்றந்த வானோர் எல்லோரு மேயிரங்கி
நன்மை பலதோடும் நன்னுதலாள் தன்னோடும்
மேன்மை பலபெறவே மேற்பிறக்கச் செய்வோமென்று
சொன்னீரே அய்யா சுகம்பெற்றோம் நாமளென்று
பன்னீர்க் குணம்போல் பச்சம்வந்து வானோர்கள்
ஆதியே எங்களையும் அதிலமைக்க வேணுமென்று
சோதியே என்று தொழுநின்றார் வானோர்கள்
நல்லதுதா னெனவே நாட்டமுற் றெம்பெருமாள்
வல்லமக்க ளான வாய்த்தசா ணார்குலத்தில்
ஏழு மக்களிலும் ஏற்றவா னோர்வழியில்
மாளுவந்தா லுமதிலே மாறாப் பிறக்கவென்றும்
நாரா யணர்புவியில் நல்லமக்க ளேழ்வரையும்
சீராக வந்தேற்றுச் செய்தவினை யும்நீக்கி
ஊழூழி காலம் உயிரழியா வண்ணமும்தான்
ஆழிக்கரை யான்மகவு அரசாள்வா ரென்றுசொல்லி
சொல்லிப் பிறவி செய்தார்காண் சாணாராய்
நல்லதென்று வானோர் நாடி யகமகிழ்ந்து
சாணா ராய்வந்து தானுதித்தார் வையகத்தில்
வாணா ளறிந்து வானோர் மிகப்பிறந்தார்

பரலோகத்தார் மனுப்பிறப்பு

அந்த யுகப்பிறப்பு ஆனபின் எம்பெருமாள்
சொந்தப் பரலோகச் சுத்தமுனி வோர்களையும்
எல்லோ ரையுமழைத்து எம்பெருமாள் ஏதுரைப்பார்
வல்லோரே உங்கள் வளப்பமென்னச் சொல்லுமென்றார்
நீங்க ளெனைமறந்து நீணிலத்தி லில்லையென்று
நாங்கள் மிகவறிய நன்றிகெட்டுச் சொன்னீரே
ஆனதா லுங்களுக்கு அதிகப்பிழை யாச்சுதல்லோ
ஏனமென்ன பார்த்து இயம்பு முனிவோரே
அப்போது மாமுனிவர் எல்லோரும் தாம்பயந்து
செப்புவ தேதோ சிவனுலகோர் செய்திகண்டால்
கற்பனைக்குள் ளல்லால் கடருவமோ நாங்களினி

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi