அகிலத்திரட்டு அம்மானை 6331 - 6360 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 6331 - 6360 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மானமாய்ப் பிறந்தால் மாளுங்கலி யல்லாது
கலிக்குள்ளகப் பட்டசடம் கலியழிக்கக் கூடாது
பெலிக்குக் கலியையிட பிறந்தல்லா லேலாது
ஆனதால் நாங்கள் அம்புவி யில்வருவோம்
வானவரே யுங்களுட வளப்பமென்ன சொல்லுமென்றார்
அப்போது வானோர் எல்லோரு மேபயந்து
செப்புவ தேதோ திருமாலே நாங்களினி
சிவன்முதலே திருமால் திருவுக் கிதுவானால்
எவனையாப் பூமியிலே இனிப்பிறக்கோ மென்பதுதான்
ஆனதால் பின்னும் அடியார்க கொருவிதனம்
ஈனமே கண்டு இரங்குதையா எங்கள்மனம்
அவ்விதத்தைச் சொல்வோம் அடியார்க் கின்னபடி
எவ்விதத்தி லேயும் இசைந்தனுப்பு மெங்கோவே
என்றுவா னோர்பணிந்து இயம்புவா ரன்போரே
அன்றுமுத லின்றுவரை அடியார்க ளெல்லோரும்
சிவனுக் கடிமை செய்திந்தப் பூமியிலே
எவனுக்கும் பதறாது இருந்தோமே இவ்வுலகில்
மாய்கையில்லை எங்களுக்கு மக்கள்பெண்டீர் தானுமில்லை
சாய்கைத் துயிலுமில்லை தகையுமில்லை எங்களுக்கு
இளைப்பில்லை தாகம் இல்லை பசிதாகமதும்
வளப்பில்லை தேகம் மறுவில்லை நோவுமில்லை
அலந்தா சையில்லை ஆணில்லை பெண்ணுமில்லை
கலந்தா சையில்லை காமக் கழிவுமில்லை
இத்தனையு மில்லாது ஈசன ருட்செயலால்
நித்திய மனப்பூவால் நிமலன் பதம்போற்றி
இன்பதுன்ப மற்று இருவினைகள் தானுமற்று
வன்பத்து சம்பத்து வாக்குடனே போக்குமற்று
மலமற்றுச் சலமற்று மயமும் சயமுமற்றுப்
பெலன்பொறி யற்றுப் பேரற்று ஊருமற்று
இத்தனையு மற்று இருந்தசிவத் தொண்டரிடம்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi