அகிலத்திரட்டு அம்மானை 5731 - 5760 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 5731 - 5760 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்றாதி நாரா யணர்தானு மிப்படியே
அன்றாதி நாதன் அவரோ டிதுவுரைக்கச்
சிவனு மிகவயர்ந்து செப்புவார் மாயருடன்
புவன மதற்குடைய பொன்னே யென்மாதவமே
இப்படித்தான் மைத்துனரே ஈதுரைத்தீ ரானாக்கால்
எப்படித்தா னானும் ஏகம தாளுவது
சுவரல்லோ மைத்துனரே சித்திரம் நாங்களல்லோ
கவரல்லோ நாங்கள் கயமல்லோ மைத்துனரே
மாயனல்லோ எங்களுக்கு மலையல்லோ மைத்துனரே
ஆயனல்லோ எங்களுக்கு அணையல்லோ மைத்துனரே
கொப்பல்லோ நாங்கள் குருவல்லோ மைத்துனரே
செப்பல்லோ மைத்துனரே சிமிள்கூடு நாங்களெல்லாம்
நீர்தானு மிப்படியே நெகிழ்ந்தமொழி சொன்னதுண்டால்
ஆர்தானு மெங்களுக்கு அணைவுமொழி சொல்லுவது
மூடிப்படிக் குலுங்க முயங்காதோ கொப்பதெல்லாம்
கூடிப்படிக் குலுங்க குலையாதோ சீவனது
தேவர்முனி சாஸ்திரிகள் சிறுபுத்தி யைக்கேட்டு
மூவருன்னைப் பாராமல் முனிந்துசெய்த ஞாயமெல்லாம்
பொறுத்தருளு மென்னுடைய புண்ணிய மைத்துனரே
மறுத்துரைத்தால் நானுமினி வகுத்துரைக்க ஞாயமில்லை
எல்லாம் பொறுத்து இனியுமக்குத் தேர்ந்தபடிச்
சொல்லொன் றுக்குள்ளே செலுத்தியர சாளுமென்று
ஈசுரனார் சொல்ல எம்பெருமா ளேதுசொல்வார்
வீசுபுக ழீசுரரே விரித்துரைக்க நீர்கேளும்
என்னையுமோ கீழுலகில் இறந்துகிடந் தாரெனவே
சொன்னவரை யெல்லாம் சுறுக்காகத் தானழையும்
என்றந்த மாயவனார் இப்படியே சொன்னவுடன்
அன்றந்த ஈசுரனார் அழைத்தா ரவர்களையும்
உடனேதான் தேவர்முனி ஒக்கப் பயமடைந்து
தடதடென ஓடிவந்து தாழ்ந்துநமஸ் காரமிட்டு

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi