அகிலத்திரட்டு அம்மானை 4591 - 4620 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 4591 - 4620 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கல்லாத பொல்லாக் கலியனுட மாய்கையினால்
நல்லோராய் மேற்பிறந்து நளினமுற்று வாழ்வரென்று
வேதா கணக்கில் விதித்துரைத்தார் முன்னாளில்
நாதாந்த வேதம் நழுவிமிகப் போகாதே
சீதாஉன்னுடைய சீர்பாதஞ் சேரவென்று
நாதா வைகுந்தா நாராயணாவெனவே
இப்படியே தேவர் எண்ணமுற்று வாடினரே
முப்படியே யுள்ள ஊழிவி தியெனவே
கடைச்சாதி யான கலிச்சாதி யானதிலே
படையாமல் நம்முடைய பங்குவம்மி சத்தோராய்
ஒண்ணா மதுகுலந்தான் உயர்தெய்வச் சான்றோரில்
வண்ணமுள்ள வேதா மனுவாய்ப் பிறவிசெய்ய
ஒன்றாக நாமளெல்லாம் உவந்துதவஞ் செய்யவென்று
நின்றார் தவத்தில் நிறைவோன் பதம்போற்றி
தங்கள் குலமான சான்றோர்கள் தங்குலத்தில்
எங்கள் தமைப்பிறவி இப்போசெய்ய வேணுமென்று
பிறந்திறந்த போதும் பின்னுமந் தப்பிதிரில்
மறந்திடா வண்ணம் மனுவி லுதித்திடவும்
ஆதிமகா மூலத்து ஆதிநா ராயணரே
நாதியா யெங்களையும் நாடிமிக வந்தெடுத்து
எங்கள் துயரம் எல்லா மவர்மாற்றி
சங்கடங்க ளில்லாத தர்ம பதியருளிக்
கிரீடமுஞ் செங்கோலும் கீர்த்தியுள்ள முத்திரியும்
வீரியமாய்த் தந்து மேலோக முமகிழ
எண்ணுஞ் சாகாமல் இருக்கும் பதவிதந்து
மண்விண் புகழ வரந்தாரு மென்றுசொல்லி
நின்றா ரதையும் நெடியோன தையறிந்து
கொண்டாடி யேதெனவே கூறினார் தேவருடன்
நின்ற நினைவை நெடுமால் தனக்குரைக்க
அன்றந்தத் தேவருக்கு அலையாத புத்திசொல்லி

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi