அகிலத்திரட்டு அம்மானை 6181 - 6210 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 6181 - 6210 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சுரைக்கூடிட் டேதிரிவான் சுத்தநாற் பத்திரண்டான்
நாற்பத்தி மூன்றான் நத்தைச்சூரி விதையை
தாற்பத்தி யமெனவே தானிருப்பான் கண்டாயே
விராலி யிலையும் விளாங்காய் வெறுந்தோடும்
நிராதனமாய் வைத்து நித்த மருந்துவன்காண்
நாற்பத்தி நாலான் என்றே யிவனையறி
நாற்பத்தைந் தானுடைய நல்விபரம் நீகேளு
பூப்பறித்துத் தின்று பூனைமொழி பேசிடுவான்
நாற்பத்தாறாஞ் சன்னாசி நல்ல விபரம்கேளு
பேய்க்குமட்டிக் காயைப் பிசைந்து விரைதானெடுத்து
நாய்க்குணம்போல் தின்பான் நாற்பத்தி ஆறானும்
எருமை யுடமோரும் எள்ளெண்ணெ யுங்குடித்து
நருநரெனப் பேசிடுவான் நாற்பத்தி யேழானும்
மருளான பெண்ணை மனதில்வை யோமெனவே
இருளான போது இந்தநினை வாயிருப்பான்
காமத்தைத் தன்னால் கழியவிட் டேவாடி
நாமத்தைப் பேசான் நாற்பத்தி யெட்டானும்
புகையிலையைத் தீயில்வைத்துப் புகையு மிகக்குடித்து
நகம்வளர்த் தேயிருப்பான் நாற்பத்தொன் பான்தானும்
அன்பதாஞ் சன்னாசி அரசியிலை மேலிருப்பான்
மண்புரளத் தான்கிடந்து மாஜலங் குடித்திருப்பான்
அன்பத் தொன்றானும் அலைவாய்க் கரைதோறும்
புண்ணியத் தீர்த்தமெனப் போயாடி யேதிரிவான்
நீல மவரி நித்தஞ்சா றேகுடித்து
ஆலம் பலகையிலே ஐம்பத்திரண் டானிருப்பான்
சுக்குப் பொடியைத் தினந் தினமெயருந்தி
அக்குமறு கணிவான் ஐம்பத்தி மூன்றானும்
ஐம்பத்தி நாலான் அசுரக்கா வடிவைத்துக்
கெம்பித் திரிவான் கீரித்தோல் காலிலிட்டு
விளியிட் டேயாடி வெற்றிகொண் டேதிரிவான்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi