அகிலத்திரட்டு அம்மானை 4621 - 4650 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 4621 - 4650 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நல்லதுதான் தேவர்களே நாடுவது காரியந்தான்
வல்ல தவசு மனம்பிரியாச் செய்யுமென்றார்

பசுவும் பெண்ணும்

அச்சுதரும் தானடந்து அனந்தபுர மேகுகையில்
பச்சுடம்பாய் நின்ற பசுவுமோ ரேந்திழையும்
நாராய ணாவெனவே நாடித் தவமிருக்கச்
சீராய்த் திருமால் சிறந்ததவங் கண்டருளி
ஏது பசுவே ஏந்திழையே வுங்களுக்கு
நேதுவில்லா வண்ணம் நெடுந்தவசு பண்ணினதேன்
அப்போ துபசுவும் அச்சுதருக் கேதுரைக்கும்
இப்போது மாயவரே என்னுடைய புத்திரனைக்
கொல்லும் படியாய்க் கோதை யிவள்தவசு
செல்லும் படியாய்ச் சிந்தை மிகக்கலங்கி
புத்திரனு மாண்டால் பிள்ளையா யென்றனக்கு
உத்திரக் கன்றாய் உடன்பிறக்க வேணுமென்று
நின்றேன் தவசு நீலவண்ண ருண்டெனவே
என்றே பசுவும் ஈதுரைக்க ஏந்திழையும்
நன்றாகப் பார்த்து நாரா யணருரைப்பார்
ஒண்டொடியே உன்றன் உற்றவழக் கேவுரைநீ
அப்போது பெண்கொடியும் அச்சுதரைத் தானோக்கிச்
செப்போடு வொத்த தேவியுஞ் சொல்லலுற்றாள்
அய்யாவே யெனக்கு ஆளான வீரனைப்போல்
மெய்யா யொருமதலை விமல னருளினர்காண்
மதலை வளர்ந்து வயதுபதினா லாகுகையில்
குதலை மொழிகேட்டுக் கொண்டாடி நான்மகிழ்ந்து
இருக்குமந் தநாளில் இப்பசுவின் புத்தினர்தான்
உருக்கமுட னென்பேரில் உள்ளாசை கொண்டான்காண்
அதட்டினே னானதற்கு ஆகட் டெனவுறுக்கி
மதட்டி மதலைதனை மாளவைத்தான் மாபாவி
ஆனதி னாலடியாள் அறமெலிந்து தான்வாடி
போனேன் பிரமா பூசாந்திரக் கணக்கில்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi