அகிலத்திரட்டு அம்மானை 2371 - 2400 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2371 - 2400 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

மாமுனியும் போக வனத்திலந்த ஐபேரும்
ஓமுனியே தஞ்சமென்று உகந்திருந்தா ரம்மானை
பாவிதுரி யோதனனும் பஞ்சவரைக் கொல்லவென்று
ஆவி யவன்செய்த அநியாய மத்தனையும்
ஒக்க வொருமிக்க உரைக்கக்கே ளொண்ணுதலே
சிக்கெனவே நஞ்சைத் தீபாவி யிட்டனனே
நஞ்சைக் கலந்து நல்லதயி ரென்றீந்தான்
அஞ்சலென்று மாயன் அதுகாத்தா ரம்மானை
பாதாளம் வெட்டிப் பார்வீ மனையோட்டி
நீதாள மான நெடியோ னதுகாத்தார்
கன்னிதனிற் பாவி கழுநாட்டி ஐவரையும்
கொன்றுவிட வைத்ததையும் குன்றெடுத்தார் காத்தனரே
அரவதையும் விட்டு அருள்வீம னைவதைத்தான்
விரைவுடனே மாயன் விசந்தீர்த்துக் காத்தனரே
தண்ணீரில் நஞ்சைவிட்டுச் சதித்தானே ஐவரையும்
மண்ணீரேழு மளந்த மாயனது காத்தார்
பூதத்தை யேவிப் புல்லிசெய்தான் மாபாவி
நீதத் திருமால் நிலைநிறுத்தி யாண்டனரே
இப்படியே பாவி இடறுசெய்த தோசமெல்லாம்
அப்படியே மாயன்காத்து ஆண்டனரே ஐவரையும்
பாவியவன் செய்ததெல்லாம் பலியாம லைபேர்க்கும்
சோவிதமாய் மாயன் துணைசெய்தா ரம்மானை

துரியோதனன் பாடு

பின்னுமந்தப் பஞ்சவர்க்குப் பெரும்பாவி சொன்னபடி
பன்னிரண் டாண்டு பரிவாய்க் கழிந்தபின்பு
மாயன் தூதுபோனார் வஞ்சமில்லாப் பஞ்சவர்க்குத்
தீயதுரி யோதனனும் திருமாலைப் பாராமல்
தாள்போல் புத்தி தானுரைத்துப் பஞ்சவர்க்கு
வாழ்வுபெறப் பூமி வாரென்றார் வாமனுமே
எள்போ லிடங்கள் ஈயேனென வுரைத்தான்
மாயனையும் பாவி வாபோ வெனப்பேசி

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi