அகிலத்திரட்டு அம்மானை 4741 - 4770 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 4741 - 4770 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கோடிநூ றாயிரம்போல் கூண்டரிய தீபமொடு
தேடரிய மாமறையோர் சிந்தைகளித் தேயிருக்க
நாடதிக மாகி நல்ல அனந்தபுரம்
மாத மும்மாரி வருசிக்கத் தான்பொழிந்து
வாரமுடன் செந்நெல் மாறாம லேவிளைந்து
தென்னங் குலைசிதறித் தேர்ப்போ லலங்கரித்து
என்னென்ன பவிசு எல்லா மிகப்பெருத்து
ஒப்பில்லாத் தேசம் உற்ற அனந்தபுரம்
செப்பத் தொலையாது சிறந்தப் பெருமையது
நன்றாகச் சீமை நாடோறு மேவாழ்க
அன்றுஸ்ரீ ரங்கர் அங்கே யகமகிழ்ந்து
நீசன் நினைத்த நினைவுபோ லெம்பெருமாள்
தேசப் பவிசும் சிறப்பு மிகக்கொடுத்து
நீசன் தனக்கெதிரி நீணிலத்தி லில்லையென்று
தோசக் கலிப்புவியைச் சூட்டியர சாளுகையில்

கலியரசன் தவம்


மதலைய தில்லாமல் மனஞ்சலித்து மாநீசன்
குதலையி னேதுவினால் கொஞ்சஞ் சடைவாகி
ஆதித் திருமால் அடியை மிகப்போற்றிச்
சோதியே யென்றனக்குச் சிறுவனொன்று தாருமென்றான்
அப்போது நாராயணர் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்போது உனக்கு இங்கிருந் தால்மதலை
கிட்டாது காசிதனில் கீர்ந்த நதிக்கரையில்
திட்ட முடன்தவசு செய்யப்போ யங்கிருந்தால்
மதலையுட துயரம் மாறுங்கா ணுன்றனக்குப்
பதலைமொழி நீசனுக்குப் பகர்ந்தார்கா ணம்மானை
கேட்டந்த நீசன் கெட்டிதா னென்றுசொல்லி
நாட்டுக்குச் சீட்டெழுதி நருட்களையுந் தான்வருத்திப்
போனானே நீசன் புகழ்பெரிய காசிதனில்
சேனா பதிகள் திக்கெங்குஞ் சூழ்ந்துநிற்க
நீசன் தவசு நிற்க வொருமறையோன்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi