அகிலத்திரட்டு அம்மானை 6601 - 6630 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 6601 - 6630 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அன்று சிவனாரும் ஆதிநா ராயணரும்
அம்மை உமையாளும் அரம்பை ஸ்திரிமாரும்
செம்மையுட னடந்து சென்றார் வனமதிலே
வனத்தி லவர்கள்வர மாதரேழு கன்னியர்கள்
இனத்திலுள்ள மாதுமையை எல்லோருங் கண்டாவி
தாயே வுனது தாள்கண்டு எத்தனைநாள்
வாயே புவிக்குடைய மாதாவென் தாயாரே
எனதேர மெங்களைநீர் இகழ்ந்து கடத்தாமல்
தனதாக எங்கள் தயவில் குடியிருந்து
கற்பகலாக் காத்த கண்ணெங்கள் மாதாவே
உற்பனமா யெங்களைநீர் உலகில் தவறவிட்டு
இருந்தாயே தாயே எங்கள்விதி நாயகமே
அருந்தாமல் வாடினோமே அறமில்லார் தங்களைப்போல்
காத்திருந்தா யென்றிருந்தோம் எங்களுட கட்டழியப்
பார்த்திருந்த ஞாயமென்ன எங்களுட பார்வதியே
எந்நேர மீசுரர்க்கும் என்னம்மை யுங்களுக்கும்
சொன்ன பணிமறந்து சொல்தப்பி நின்றோமோ
ஈசருட சட்டம் யாங்கள் மிகமறந்து
தேச மதில்வரவே சிந்தை யிச்சித்ததுண்டோ
கற்பினை மறந்தோமோ காராவைக் கொன்றோமோ
அற்புதவேள் தாயே அடியார் தமக்கருளும்
என்றுகன்னி யெல்லாம் இப்படியே தானுரைக்க
அன்று அறம்வளர்த்த அம்மை மனதிரங்கி
நல்லதுகாண் பெண்ணேயுங்கள் ஞாயமெல் லாமுரைப்போம்
வல்ல சிவனாரே வார்த்தையொன்று நீர்கேளும்
தவத்தை நிறைவேற்றித் தார்குழலா ளேழ்வரையும்
அகத்தே வரவழையும் ஆதியே யென்றுரைத்தாள்
அப்போ சிவனார் ஆனகன்னி ஏழ்வரையும்
கொப்போடு சூழ்ந்துநின்ற குழையெல்லாமே யுதிர்த்தி
நிறைவேற்றித் தவத்தை நேரிழைமா ரேழ்வரையும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi