அகிலத்திரட்டு அம்மானை 5101 - 5130 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 5101 - 5130 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அன்று அந்த மாயன் அதற்கேது சொல்லலுற்றார்
முன்னுகத்தில் கேளு முகமைந்து கொண்டோனும்
உன்னோடும் பிறவி ஒருயேழு உண்டுமடா
ஒண்ணாம் யுகத்துக்கு உற்ற குறோணியடா
மண்ணெல்லாங் குறோணி வந்தெடுத்து விழுங்குகையில்
பூதக் குருமுனிவன் புத்திசொன்னா னவ்வுகத்தில்
நீதமுடன் கேளாமல் நீசனவன் மாண்டான்காண்
அடுத்த யுகமதிலே அக்குண்டோம சாலினுக்குக்
கடுத்தமுள்ள கோவிரிஷி கடியபுத்தி சொன்னான்காண்
கேளா தேமாண்டான் கிளையோடே யந்நீசன்
பாழாகிப் பின்னும் பதிந்தமூன் றாம்யுகத்தில்
மல்லோசி வாகனென்று வந்த இருவருக்கும்
நல்லபெல ரோமரிஷி நாடிமிகப் புத்திசொன்னான்
கேளாதே மாண்டான் கிரேதா யுகந்தனிலே
தாழாத சூரபற்பன் தம்பி யவன்றனக்கும்
வீரவா குதேவர் விரைந்துமிகப் புத்திசொன்னார்
தாராமல் சூரன் தன்கிளையோ டேமாண்டான்
அவ்வுகத்தில் வந்த அசுர னிரணியற்குச்
செவ்வுகந்த சிங்கம் செப்பினதே புத்தியது
சற்றுமவன் கேளாமல் தான்மாண்டா னவ்வசுரன்
பத்தத் தலையான பார அரக்கனுக்குத்
தம்பிவி பீஷணனும் தான்சொன்னான் புத்தியது
வம்பிலவன் கேளாமல் மாண்டான் கிளையோடே
பின்னுந்துரி யோதனனாய்ப் பிறந்தான் மறுயுகத்தில்
மன்னுகந்த பீஷ்மரும் வாழ்த்திமிகப் புத்திசொன்னார்
கேளாமல் மாண்டான் கேடுகெட்ட மாபாவி
தாழம லுன்றனக்கு தற்சொரூபத்தோ டிருந்து
நாரா யணராய் நானுதித்து உன்றனக்குச்
சீரான புத்தி செப்புகிறேன் கேளடவா
உன்கிளையும் நீயும் உற்றார்பெற் றார்களுடன்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi