அகிலத்திரட்டு அம்மானை 5761 - 5790 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 5761 - 5790 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அப்போது மாயவனார் அவர்கள் தமைப்பார்த்துச்
செப்புகிறா ரையா திருக்கண் பொறிபறக்கக்
கண்கள் சிவந்து கருமேனி தான்விறைத்து
விண்க ளதிர வெடுவெடெனக் கோபமுற்றுத்
தேவர் திணுக்கிடவே தெய்வமுனி தான்பதற
மூவர் திணுக்கிடவே உரைக்கிறா ரெம்பெருமாள்
மண்திண் ணெனவே மலைகள் பொடிபடவே
திண்திண் ணெனவே தேவர் மிகப்பதறச்
சிவனுங் கிடுகிடெனச் சிவனுமை யும்பதற
நமனும் பதற நாரா யணருரைப்பார்
தேவரே வானவரே தெய்வமுனி சாஸ்திரியே
மூவரே நானும் ஒளித்ததெங்கே சொல்லுமென்றார்
சாகக்கிடந்த தெங்கே தப்பி ஒளித்ததெங்கே
போகக்கிடந்த தெங்கே போனதெங்கே சொல்லுமென்றார்
ஆளுக்கொரு மூப்பாய் அரியிங்கே யில்லையென்று
கோளுரைத்த ரீசர் குருமுன்னே நீங்களெல்லாம்
சாத்திரத்தைப் பார்த்துச் சரியாகச் சொன்னதிட்டச்
சூத்திரத்தை யெல்லாம் சொல்லுமென்றா ரெம்பெருமாள்
சொல்லநா வில்லாமல் சோர்ந்துமிகத் தேவரெல்லாம்
பல்வாய் சுண்டொல்கிப் பதைபதைத்து நின்றனரே
கண்தலை கவிழ்ந்து கால்பேர்த்து வைக்காமல்
விண்கவிழ்ந்த யோகமுனி வெட்கிநின்றா ரன்போரே
நின்ற நிலையறிந்து நெடியபர மேசுரரும்
அன்றெந் தனோடே அறம்பாடிச் சொன்னதெல்லாம்
இன்றெங்கே போச்சுதுகாண் இரண்டும்மிகச் சொல்லாமல்
நின்றிங்கே நீங்கள் நினைவயர்ந்து நிற்பதென்ன
பேச்சுப்பே சுங்கிளிக்குப் பின்பூனை நாட்டமுற்றால்
சீச்சுக்கீச் சென்றுகிளி கீழ்ப்பதுங்க வேண்டியதேன்
அன்றுநீர் சொன்னமொழி அயர்த்துமிகப் போனதென்ன
இன்றுநான் கண்டிலனே இதற்குமுன் னுள்ளதிறம்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi