அகிலத்திரட்டு அம்மானை 6961 - 6990 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 6961 - 6990 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மாய்ந்தவுட னாகிடினும் வந்துரைத்தா ளோசிவனே
சற்றும் பதறாமல் தானிருந்து இத்தனைநாள்
புத்திமேல் நெஞ்சரிப்பாய் போவோமென் றேகிவந்தாள்
தன்மதலை யென்றால் தலைவைத் திருப்பாளோ
என்மதலைக் கிவள்தான் இடறி விழுவாளோ
ஒருவர்பிள்ளைக் கொருவர் உடைமை யிடுவாரோ
கருதல் விருப்பம் காணுமோ மற்றோர்க்குப்
பெற்றகும்பி யல்லோ பெருங்கனல்போல் மீறுவது
மற்றோர்கள் கும்பி வருந்திக் குமிறிடுமோ
பாவியவன் கொன்று பன்னிரண் டாண்டுவரை
ஆவி யறிந்திலையே ஆரும்வந்து சொல்லலையே
தாய்தகப்ப னில்லார்போல் தயங்கினது கண்டோமோ
சேய்பரனுக் கேராத செய்த பழவினையோ
என்றாதி நாதன் ஏந்திழையைத் தான்பார்த்துச்
சென்றாதி வேந்தர் செடத்தோ டுயிர்திரும்பி
எழுந்திருக்கு மட்டும் இருநீ சிறைதனிலே
குளிர்ந்த திருமேனி கூறினா ரந்தரிக்கு
கேட்டுமா காளி கிலேச மிகவடைந்து
தீட்டும்வட வாமுகத்தில் செய்யவன்னி மண்டபத்தில்
இருந்தாள் தவசு ஈசன் செயலெனவே
வருந்தாத கூளிகணம் வாதைவிடு பேய்களெல்லாம்
நாச்சியார்க் கிச்சிறையால் நமக்கென்ன கேடோகாண்
கேச்சியாய்த் தேசமதுக் கென்னகேடோ அறியோம்
என்று சிலபேய்கள் எண்ணியெண்ணி யேதிரியும்
மூன்று முறுக்குள்ள மூளிப்பே யேதுசொல்லும்
கைவாய்த்து மாகாளி கவிழ்ந்திருந்த ஏதுவினால்
மெய்வாய்த்து தென்று விளியிட்டுக் கொண்டோடும்
இப்படியே பேய்கள் எண்ணஞ்சில திண்ணமுமாய்
அப்படியே காளி அவள்சிறையி லேயிருக்க
நல்லநா ராயணரும் நாடுஞ் சிவனாரை

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi