அகிலத்திரட்டு அம்மானை 6061 - 6090 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 6061 - 6090 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நடையொற்றைக் காலால் நடப்பார் சிலபேர்கள்
இப்படியே நன்றாய் இவரிவர்க் கோர்விதமாய்
அப்படியே தேசமைம்பத் தாறதி லுந்திரிவார்
சோழக் குருநாடு தேசமது நன்னாடு
ஆளவை குண்டர் அவர்வளரும் நன்னாடு
இந்நாட்டில் வாழும் இராச ருடவளமை
சொன்னால் தொலையாது சொல்ல எளிதல்லவே
இப்புவியில் வாழும் என்றன்வை குண்டரிடம்
எப்புவியில் வாழும் இருஷிகன் னாசியெல்லாம்
வரம்வைக்கச் சொல்லி வதைக்கவந்த வைகுண்டர்காண்
பரம்பெரிய வைகுண்டப் பதியாள வந்தவர்காண்
இப்புவியை ஆளஇராச வைகுண்ட ராசா
எப்போ வருவாரென்று இருக்கும் சன்னாசி யெல்லாம்
சன்னாசி யெல்லாம் தலைவீதம் வாழுகின்ற
மின்னான சீமை விரிக்கக்கேள் நீங்களெல்லாம்
பாண்டிய னான பரிகொங்கை நன்னாட்டில்
ஆண்டிருப்பான் சன்னாசி அவனொருவன் கேட்டிருநீ
வருஷ மொருநேரம் மாறிப் பிறந்தேனென்று
புருஷனென வந்தெடுத்தால் பிள்ளையுண் டென்றுசொல்லி
இருப்பான் சிலநாள் இவனொரு சன்னாசி
இருந்தந்த நாட்டைவிட்டு எழுந்திருந்து அவன்தானும்
சிங்கள நன்னாட்டில் சீகண்டன் ராச்சியத்தில்
புங்கம்பா லுண்டு பூவையரைப் பாரோமென்று
ஆடை யுடுக்காமல் அவனிருப் பானொருவன்
கோரக்க நாடு குருக்கேத்திரன் ராச்சியத்தில்
சூரக்கோல் கைப்பிடித்துச் சூலா யுதமேந்தி
வீரத்தனம் போலிருப்பான் இவனொரு சன்னாசி
தன்மதத்தால் பேசித் தானிருப்பா னேசிலநாள்
கன்மத்தால் சாவான் கடியமூன் றாம்பேர்தான்
இப்படியே யைம்பத் தாறூ ரிவைகளுக்கும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi