அகிலத்திரட்டு அம்மானை 4291 - 4320 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 4291 - 4320 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சேருமென்று சொல்லச் செவுகர் தாம்விரைந்து
அழைத்துவந்தார் சான்றோரை அரசன்மிகக் கொண்டாடித்
தழைத்தபுகழ் சான்றோரே சந்தோசமாக இப்போ
வைகை தனையடைக்க வழிபாரு மென்றுரைத்தான்
செய்கை முடிச்சான்றோர் தேசமன்ன னோடுரைப்பார்
நல்லதல்ல மன்னவனே நம்மோ டிதுவுரைக்க
இல்லை யிந்தவேலை இதற்குமுன் கேட்டிலையே
வெட்டாப் படையை வெற்றிகொண்டோ மும்மாலே
பட்டாங்கு எல்லாம் பகர்ந்தாரே சோழனுடன்
மாயக் கலியதனால் மன்னவனுங் கேளாமல்
ஞாயமொன்றும் போகாது நளிமொழிகள் பேசாதே
குட்டையினால் மண்ணெடுத்துக் குளக்கரையைத் தானடைக்கக்
கெட்டியல்லாமல் வேறு கெறுவிதங்கள் பேசாதே
என்றுரைக்கச் சான்றோர் இயம்புவா ரம்மானை
நன்றுநன்று மன்னவரே நமக்கு அழகல்லவே
இவ்வேலை யொன்றும் எங்களோ டீயாமல்
எவ்வேலை சொல்வீரோ யாமதற்குள் ளதென்றார்
கேட்டந்த மன்னன் கிறுக்க முடனிறுக்கித்
திட்டினான் சான்றோரைச் சினத்தான்கா ணம்மானை
அப்போது சான்றோர் அதற்கிசையாமல் நின்றார்
இப்போது சோழன் ஏதுசொல்வா னம்மானை
நான்வேலை சொன்னால் நகட்டுவதோ உங்களுக்கு
தான்பாரு மென்று தன்தள கர்த்தருடன்
வேலையது கொள்ளுமென்று விசைகாட்டினான் கெடுவான்
தூல மறியாமல் துள்ளியே சேவுகர்கள்
சூழ வளைந்து துய்யசான் றோர்களையும்
வேழம் பலதை விட்டுப் பிடித்திடவே
சான்றோ ரடுக்கல் சாரவகை யில்லாமல்
மீண்டகலத் தோற்று வெளியிலே நின்றிடவே
அப்போது சோழன் அவனானை கொண்டுவந்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi