அகிலத்திரட்டு அம்மானை 5371 - 5400 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 5371 - 5400 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தாங்களுக்கு நெஞ்சம் சற்று மிரங்கலையோ
இப்படியே தேவர் எல்லோரு முறையமிட
அப்படியே முறையமிட்டு அவரங்கே நிற்கையிலே

அம்மை உமை இரங்கல்

நல்ல உமைதிருவும் நன்றா யெழுந்தருளி
வல்ல பொருளான வாய்த்தநா ராயணரின்
அடியி லவள்வீழ்ந்து அழுதுகரைந் தேதுரைப்பாள்
முடியுமடி யில்லா முதலே முதற்பொருளே
அரிஹரிநா ராயணரே அண்ணரே அச்சுதரே
கரிஹரிநா ராயணரே கண்ணரே கார்வண்ணரே
இலச்சைகெட்ட பாவி ஏமாளிக் கலியதினால்
அலச்சல்செய் தெங்களையும் அகற்றிவைத்துப் போனீரோ
பாவிக் கலியனுட பழிசாபச் சூட்சியினால்
பூவில் மண்டூகம் பொசித்துதே காரணரே
கலியனுட ஏதுவினால் கபாலியும் மைத்துனரும்
சலிவாகி மேனி சடல மிகத்திமிர்த்து
இருள்மூடிக் கண்கவிழ்ந்து இருக்கிறா ரீசுரரும்
உருவு சுவடில்லை உம்முடைய மைத்துனரும்
நின்னயமில் லாக்கலியன் நீசன் பிறந்ததினால்
என்னோடே பேச்சு இல்லையும் மைத்துனரும்
வானுறவு கெட்ட மாநீசன்வந்த நாள்முதலாய்
நானும்பர மேசுரரும் நலநஷ்டமுந் தெரியோம்
பேசிப் பழக்கமிட்டுப் பெருத்தநா ளுண்டுமண்ணே
தோசிக் கலியனுட சூட்சியினால் நாங்கள்படும்
பாட்டைவந்து பாராமல் பரிகாசம் பார்ப்பதென்ன
நாட்டைக் கெடுத்தானே நன்றிகெட்ட மாநீசன்
அல்லாமல் நம்முடைய அருமைச்சான் றோர்கள்படும்
பொல்லாங்கை யெல்லாம் போய்ப்பார்க்க எழுந்தருளும்
வரமீறியக் கலியன் மாய்கையி னேதுவினால்
பிரமன் பிறப்புப் பிசகித் தலைமாறி
முண்டம்போல் பிறப்பு முகங்கண்ணில் லாப்பிறவி

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi