அகிலத்திரட்டு அம்மானை 6871 - 6900 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 6871 - 6900 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வல்லாத நாயகமே வந்துநீ ரேற்குமட்டும்
மாதவிடை மாமணங்கள் மலர்ந்துறக்க மில்லாமல்
சீதமாய் மனுவோடு உறவாடிச் சேராமல்
மூடாம லாடை முகமினுக்கிச் சேராமல்
பாடாம லந்திசந்தி படுத்துத் துயிலாமல்
நன்மை யறியாமல் நளிப்பேச்சுக் கேளாமல்
தின்மை யறியாமல் தீன்ரசத்தைத் தேடாமல்
கொய்து புடவை குக்குளித்துச் சூடாமல்
மயிரு வளர்க்க மனதுவே றெண்ணாமல்
கொங்கை திரளாமல் கூறுடம்பு வீசாமல்
செங்கனிவாய்த் தேமல் தேகமதில் வீழாமல்
பக்குவ ஞாயப் பருவம்வந்து வாய்க்காமல்
மிக்குவ மான மிகுவாழ்வு சேராமல்
சுற்றுக் கிளைகள் தொடுத்தன்பு கொள்ளாமல்
ஒற்றுப் பிதற்றாமல் ஒருவர்முகம் பாராமல்
அல்லல்நோய் பிணிகள் அனுப்போலும் வாராமல்
தொல்லை வாராமல் சுகமுமிக வாராமல்
இந்த விதிப்படியே எங்களையும் நீர்படைத்துச்
சொந்தமுடன் வந்துநீர் தொட்டெடுத்து நன்மைதந்து
இரச்சிப்போ மென்று எமக்கு உறுதிபண்ணி
நிச்சித்துத் தர்மகுலம் நீர்பார்த்து தான்படையும்
என்றுகன்னி ஏழ்பேரும் இப்படியே சொல்லிடவே
அன்றுஆ திநாதன் அகமகிழ்ந்து கொண்டாடி
நல்லதுதான் பெண்ணேநீர் நம்மோடே கேட்டபடி
வல்லவித மானாலும் மாறாதென வுரைத்தார்
வாக்குரைக்க கன்னியர்கள் மனமகிழ்ந்து கொண்டாடி
நாக்குரைப்பார் பின்னும் நாரா யணரோடு
நாங்கள்போய்ப் பிறந்தால் நம்முடைய நாயகமே
தாங்கள்வரு மென்றதற்குத் தருணமே தென்றுரைத்தார்
அப்பொழுது அய்யா நாராய ணருரைப்பார்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi