அகிலத்திரட்டு அம்மானை 2131 - 2160 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2131 - 2160 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

ஆக்கிரமத் தாலே அவன்தூக்க ஏலாமல்
சோர்வுறவே கஞ்சன் துடியிழந்து நிற்கையிலே
பாரளந்தோன் தங்கை பகவதியு மேதுசொல்வாள்
என்னை யெடுத்து ஈடுசெய்யா தேகெடுவாய்
உன்னை வதைக்க உற்றயெங்க ளச்சுதரும்
ஆயர்பா டிதன்னில் அண்ணர் வளருகிறார்
போய்ப்பா ரெனவே போனாள் பகவதியும்
கேட்டந்தக் கஞ்சன் கிலேச மிகவாகி
வீட்டுக்குள் போயிருந்து விசாரமுற்றா னம்மானை

விருத்தம்


அய்யோ முனிதான் சபித்தபடி ஆயர் பதியில் போகறியேன்
மெய்யோ தளரு துடல்மெலியு மெல்லி மொழிந்த விசளமதால்
கையோ சலித்துக் காலயர்ந்து கால விதியாற் கருத்தயர்ந்து
பையோ ராளைத் தானழைத்துப் பார்க்க விடுத்தான் கஞ்சனுமே

கஞ்சன் பாடு

நடை

அய்யோ மறையோன் அன்று சபிபத்தபடி
சையோ இடையர் தம்பதியில் போகறியேன்
தங்கை வயிற்றில் செனித்தபிள்ளை யானதுண்டால்
பங்கம்வரு மென்றனக்குப் பதறுதடா என்னுடம்பு
என்று மனங்கருகி இயலழிந்த கஞ்சனுந்தான்
அன்றுஒரு தூதனையும் அனுப்பினன்கா ணம்மானை
வாராய்நீ தூதா மற்றோ ரறியாமல்
பாராய்நீ தூதா அயோதைப் பதியேகி
என்றுஅந்தத் தூதனையும் ஏகவிட்டான் கஞ்சனுமே
நன்றுநன்று என்று நடந்தானே தூதனுந்தான்
தூதன் மிகநடந்து தோகைஅயோ தைமனையில்
புகுந்தந்தப் பிள்ளை பொன்தொட்டிலி லேகிடக்கக்
கண்டுஅந்தத் தூதன் கஞ்சனுக்கு நஞ்செனவே
விண்டு பறையாமல் விரைவாகப் போயினனே
போயந்தத் தூதன் பொறையுள்ள கஞ்சனுக்கு
வாயயர்ந்து சிந்தை மறுகியே சொல்லலுற்றான்
காமனோ சீவகனோ கண்ணனோ சந்திரனோ

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi