அகிலத்திரட்டு அம்மானை 2161 - 2190 of 16200 அடிகள்
மாமதனோ சூரியனோ மறையவனோ இறையவனோ
நாமத் திறவானோ நாரா யணன்தானோ
சோமத் திருவுளமோ தெய்வேந் திரன்தானோ
ஈசனோ வாசவனோ இந்திரனோ சந்திரனோ
மாயனோ வுன்னை வதைக்கவந்த மாற்றானோ
ஆரோ எனக்கு அளவிடவுங் கூடுதில்லை
பேரோ அயோதைப் புதல்வனெனக் காணுதில்லை
தெய்வகியாள் தேகத் திருச்சுவடு தோணுகொஞ்சம்
மெய்யதிப னான விட்டிணுபோல் முச்சுவடு
என்றந்தக் கஞ்சனுக்கு இத்தூதன் சொல்லிடவே
அன்றவன் கேட்டு அயர்ந்திருந்தா னம்மானை
என்செய்வோ மென்று இருக்குமந்த நாளையிலே
முன்செறியும் பூத மூரிதனை யேவியவன்
கொல்லவென்று விட்டான் குழந்தைதனை யம்மானை
வல்ல பெலமுள்ள மாபூதம் பட்டபின்பு
பின்னுமே தானும் பிலஅரக்கரை யேவிக்
கொன்றுவா வென்றான் குழந்தைதனை யம்மானை
கொல்லவந்த பேரையெல்லாம் கொன்றதுகா ணக்குழந்தை
வெல்லவிட்டப் பேரிழந்து மெலிந்திருந்தான் கஞ்சனுமே
ஆயர் குடியில் அரியோன் மிகவளர்ந்து
மாயன் விளையாடி மடந்தையோடுங் கூடி
வென்றுபால் வெண்ணெய் மிகப்பொசித்துக் காடதிலே
கன்றாவு மேய்த்துக் காளியன் தனைவதைத்துக்
கஞ்சனுட ஏவலினால் காட்டில்வந்த சூரரையும்
துஞ்சிவிடக் கொன்று தொலைத்தனர்கா ணம்மானை
ஆயருக்கு வந்த ஆபத்து அத்தனையும்
போயகற்றி நந்தன் பிள்ளையெனவே வளர்ந்தார்
மதுரைதனில் வாழும் மாபாவிக் கஞ்சனுக்கு
இறுதிவரும் போது ஏதுசெய்தான் கஞ்சனுமே
நந்திடையன் பாலன் நல்லஸ்ரீ கிட்டிணனை
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 2161 - 2190 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi