அகிலத்திரட்டு அம்மானை 2101 - 2130 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2101 - 2130 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

சுற்றுமதிற் காவல்வைத்த துடியோர் வலுவிழந்து
வசுதேவன் காலிலிட்ட வாய்த்த விலங்குமற்று
விசுவாச மாதருட விலங்கது தானுமற்றுத்
பாழ்கொண்ட கஞ்சன் பருங்கோட்டை கதவும்
தாள்திறந்து நேரம் தான்விடியு முன்னாகக்
கண்டாளே தெய்வகியும் கனத்த மதலைதனை
கொண்டாடித் தானெடுத்துக் கூறுவா ளம்மானை
கண்ணணோ சீவகனோ கரியமுகில் மாயவனோ
வண்ணனோ தெய்வேந்திரனோ மறையவனோ தூயவனோ
அய்யோமுன் பெற்ற அதிக மதலையெல்லாம்
மெய்யோதா னிம்மதலைக்(கு) ஒவ்வாது மேதினியே
என்று பிரியமுற்று ஏற்ற மதலைதனை
அன்று கொடுத்து அனுப்பினா ளயோதையிடம்
வாங்கியே வசுதேவன் வகையாக ஏதுசொல்வான்
தாங்கிய கைவிலங்கு மாறுவதேப்போ என்றான்
இன்றுமுதல் மாறுமென்று இயல்குழந்தை சொல்லிடவே
நன்றிது நன்றெனவே நாடிக்குழந்தைதனை
கொண்டு வசுதேவன் அயோதைக் குடிலேகிக்
கண்டு அயோதை கன்னியங்கே பெற்றிருந்த
பெண்மதலை தன்னைப் பூராயமா யெடுத்து
ஆண்மதலை தன்னை அயோதை யிடமிருத்தி
வந்து வசுதேவன் மங்கைகை யில்கொடுத்துப்
புந்திமிக நொந்து போயிருந்தா னம்மானை
அந்த யிராவிடிந்து அலைகதிரோன் தோன்றினபின்
கந்த மனசுள்ள கஞ்ச னவன்தனக்கு
ஒற்றாளாய்த் தூதன் ஒருவன் மிகஓடி
பெற்றா ளுன்தங்கை பிள்ளை யெனவுரைத்தான்
கேட்டானே கஞ்சன் கெருவிதமாய்த் தானெழுந்து
பூட்டான நெஞ்சன் பிள்ளைதனை வந்தெடுத்துத்
தூக்கி நிலத்தில் துண்ணெனவே தானடிக்க

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi