அகிலத்திரட்டு அம்மானை 2011 - 2040 of 16200 அடிகள்
சங்குவண்ண மாலோன் தானே விடைகொடுத்தார்
கண்ணன் அவதாரம்
விடைவேண்டித் தேவர் மேதினியில் தாம்போகப்
படைவீர ரான பச்சைமால் தானெழுந்து
ஆதி கயிலை அரனிடத்தில் வந்திருந்து
சோதி மணிநாதன் சொல்லுவா ரம்மானை
வாணநர பாலனென்ற மாபாவிக் கஞ்சனினால்
நாணமது கெட்டோமென நாடிமிகத் தேவரெல்லாம்
பூமா தேவிமுதல் பொறுக்கமிகக் கூடாமல்
ஆமா அரியே ஆதி முறையமென்றார்
முறையம் பொறுக்காமல் முடுகியிங்கே வந்தேனென்று
மறைவேத மாமணியும் மகிழ்ந்துரைத்தா ரம்மானை
அதுகேட்டு ஈசர் அச்சுதருக் கேதுரைப்பார்
இதுநானுங் கேட்டு இருக்குதுகா ணிம்முறையம்
ஆனதால் கஞ்சன் அவனைமுதல் கொல்வதற்கு
ஏனமது பாருமென்று எடுத்துரைத்தா ரீசுரரும்
பாருமென்று ஈசர் பச்சைமா லோடுரைக்க
ஆருமிக வொவ்வாத அச்சுதரு மேதுரைப்பார்
மேருதனில் முன்னாள் வியாசர் மொழிந்தபடி
பாருபா ரதமுதலாய்ப் பாரதப்போர் தான்வரையும்
நாரா யணராய் நாட்டில் மிகப்பிறந்து
வீரான பார்த்தன் மிகுதேரை ஓட்டுவித்துச்
சத்தபல முள்ள சராசந் தன்வரையும்
மற்றவ னோராறு வலியபலக் காரரையும்
கொல்லவகை கூறி குருநிலையைத் தான்பார்த்து
வெல்லப்பிறப் பாரெனவே வியாசர் மொழிந்தபடி
அல்லாமற் பின்னும் ஆனதெய்வ ரோகணியும்
நல்ல மகவான நாரா யணர்நமக்கு
மகவா யுதிப்பாரென மகாபரனார் சொன்னபடி
தவமா யிருந்து தவிக்கிறாள் தேவகியும்
இப்படியே யுள்ள எழுத்தின் படியாலே
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 2011 - 2040 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi