அகிலத்திரட்டு அம்மானை 1981 - 2010 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1981 - 2010 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

பாவமாய்க் கஞ்சன் பலநாளா யெங்களையும்
ஏவல்தான் கொண்ட இடுக்கமதை மாற்றுமையா
ஊழியங்கள் செய்து உடலெல்லாம் நோகுதையா
ஆழி யடைத்த அச்சுதரே யென்றுரைத்தார்
வாண னென்றகஞ்சன் மாபாவி யேதுவினால்
நாணமது கெட்டு நாடுவிட்டுப் போறோங்காண்
நரபால னென்ற நன்றிகெட்ட கஞ்சனினால்
வரம்பா னதுகுளறி மானிபங்கள் கெட்டோமே
இத்தனையுங் காத்து இரட்சிக்க வேணுமையா
முத்தியுள்ள தேவர் முறையம் அபயமிட
பூமா தேவி புலம்பி முறையமிட
நாமாது லட்சுமியும் நன்றா யபயமிட
நாரா யணர்பதத்தை நாயகியுந் தெண்டனிட்டுச்
சீரான லட்சுமியும் செப்பினள்கா ணம்மானை
என்னைப்போல் பெண்ணல்லவோ இவள்தா னிடுமுறையம்
வன்னமுள்ள மாலே மனதிரங்கிக் காருமையா
உடனேதா னாதி ஓலமிட்டுத் தேவருக்கும்
திடமான பூமா தேவிக்குஞ் சொல்லலுற்றார்
தேவர் வேண்டுதலுக்கு இரங்கல்
வந்து பிறப்போங்காண் மாபாரத முடிக்க
நந்தி குலம்வளர நாம்பிறப்போங் கண்டீரே
சாரமில்லாக் கஞ்சன் தனைவதைத்துப் பூமியுட
பாரமது தீர்ப்போம் பாரத முடித்துவைப்போம்
துவாபர யுகத்தில் துரியோ தனன்முதலாய்த்
தவறாத வம்பன் சராசந் தன்வரையும்
அவ்வுகத் திலுள்ள அநியாயமு மடக்கிச்
செவ்வுகத்த மன்னவர்க்குச் சிநேகமது செய்வதற்கும்
உங்களுக்கும் நல்ல உதவிமிகச் செய்வதற்கும்
அங்குவந்து தோன்றி ஆய ருடன்வளர்வோன்
போங்களென்று பூமா தேவியையுந் தேவரையும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi