அகிலத்திரட்டு அம்மானை 2041 - 2070 of 16200 அடிகள்
அப்படியே யென்னை அனுப்புமென்றா ரம்மானை
விருத்தம்
முன்னே வியாசர் மொழிந்தபடி முறைநூல் தவறிப் போகாமல்
தன்னை மதலை யெனஎடுக்கத் தவமா யிருந்த தெய்வகிக்குச்
சொன்ன மொழியுந் தவறாமல் துயர மறவே தேவருக்கும்
என்னைப் பிறவி செய்தனுப்பும் இறவா திருக்கும் பெம்மானே
நடை
முன்னே வியாசர் மொழிந்தமொழி மாறாமல்
என்னையந்தப் பூமியிலே இப்போ பிறவிசெய்யும்
செந்தமிழ்சேர் மாயன் சிவனாரை யும்பணிந்து
எந்தனக்கு ஏற்ற ஈரஞ்சாயிர மடவை
கன்னியரா யென்றனக்கு கவரியிட நீர்படையும்
பன்னீர்க் குணம்போல் பைம்பொன் னிறத்தவராய்
முன்னுகத்திலே எனையணைய உகந்திருந்த பேரையெல்லாம்
இன்னுகத்திலென் தனக்கு இயல்பாய் படையுமென்றார்
மேருதனிலிருந்து மேகவர்ணர் செயலெனவே
தாருகாவனத்தில் தவசிருந்த ரிஷியை எல்லாம்
ஆயர் குலத்தில் அநேக மடவாரை
பாயமுற வாடிருக்கப் படைப்பீர்கா ணீசுரரே
உருப்பிணியாய் இலட்சுமியை உலகிற்பிறவி செய்யும்
கரும்பினிய தெய்வக் கயிலாச மாமணியே
சத்தபெல முள்ள தத்துவத்தார் தங்களையும்
மெத்தவரம் பெற்ற மிகுவசுரர் தங்களையும்
எல்லோரையு மிப்பிறவி இதிலே வதைத்திடவே
அல்லோரை யும்பிறவி ஆக்கிவைய்யு மென்றுரைத்தார்
என்றனக்கு நல்ல ஏற்ற கிளைபோலே
விந்து வழிக்குலம்போல் மிகுவாய்ப் படையுமென்றார்
இப்படியே மாயன் இசையஅந்த ஈசுரரும்
அப்படியே பிறவி அமைக்கத் துணிந்தனராம்
துணிந்தாரே மாயன் தொகுத்ததெல்லா மாராய்ந்து
வணிந்தார மார்பன் வகைப்படியே செய்யலுற்றார்
தெய்வகியாள் வயிற்றில் திருமால் பிறந்திடவே
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 2041 - 2070 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi