அகிலத்திரட்டு அம்மானை 1591 - 1620 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1591 - 1620 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

மேதையைச்சீதை மேவியாற்றிலனுப்பி
சீதையும் ராமரோடு சேர்ந்து நடந்திடவே
மாதைமிகப் பார்த்து மாயராமர் ஏதுரைப்பார்
இதுவரையும் லட்சுமியே எங்கே மறைந்திருந்தாய்
அதுவுரைத்து லட்சுமியும் அன்றுவழி தானடந்தாள்
அன்று கயிலை அரனிடத்தில் சென்றிருந்து
முன்னேயுள்ள துண்டம் ஓரிரண்டு உள்ளதிலே
அன்று ராவணனுக்கு அவர் உரைத்த சொற்படியே
ஒன்னேயொரு துண்டம் ஒருநூறு பங்குவைத்துத்
துவாபர யுகம்வகுத்துத் துரியோதன னெனவே
கிரேதா யுகமழித்துக் கீழுலகில் தோணவைத்தார்

துவாபர யுகம்

பாவி பிறக்க பச்சைமால் தான்கூடத்
தாவிப் பிறந்த தம்பியர் மூவரையும்
விபீஷணனும் நல்ல வெற்றிச்சாம் புவனையும்
அபூருவமாய்க் குந்தியர்க்கு ஐவரையும் பிறவிசெய்தார்
ஐவரையும் பூமி அதிலே பிறவிசெய்து
மொய்குழ லான மெல்லி திரௌபதியாய்
அம்மை திருக்குழலில் அமர்ந்திருந்த பொற்சடையை
நம்மை விபீஷணற்கு நல்மக ளாக்கிவைத்து
அரக்கர் குலமறுக்க அம்மை யெழுந்தருளி
இரக்கர் புரமேகி இருக்குமந்த நாளையிலே
தோழியாய் முன்னிருந்த துய்யத் திரிசடையை
நாழிகை தன்னில் நாதன் பிறவிசெய்தார்
பின்னுமந்த மாயன் பெரியோ னடிவணங்கி
நின்னுகரங் குவித்து நெடியோ னுரைத்தனராம்
எழுபது வெள்ளம் ஏற்றவா னரங்களுடன்
முழுது மிலங்கை முடித்துநான் நிற்கையிலே
என்படைக ளான எழுபதுவெள் ளமதிலும்
உன்படைக ளெல்லாம் உயிரழிந் தாரெனவே
ஆராய்ந்து என்படையை அளவிட்டு நிற்கையிலே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi