அகிலத்திரட்டு அம்மானை 1321 - 1350 of 16200 அடிகள்
வளைத்தோர்க்கு நல்ல மாலைசூட்ட லாமெனவே
தழைத்த சுகசீல தாட்டீக மாமுனியைத்
தினகரராய்ப் பூமிதனில் செய்துவைத்து லட்சமியை
மனோகரமாய்ப் பூமியிலே வைத்தபெட்ட கத்தோடே
வில்லோ டேபிறக்க விமல னருளினராம்
நல்ல துசுவீசு மாமுனியை நாடதிலே
தசரதராய்த் தோன்றவைத்துத் தேசாதி ராசனுக்கு
விசமாலை ராமருமாய் வீரக் கணையோடே
கூடப் பிறக்கக் குன்றெடுத்தார் தான்துயிலும்
நீட அரவணையை நீதலட்சு மணராக்கித்
தலையணை மெத்தையையும் சத்துரு பரதனுமாய்
நிலைவரமாய் ஈசன் நெறியாய்ப் பிறவிசெய்யத்
தேவரையும் வானரமாய்ச் சிவனார் பிறவிசெய்ய
மூவரை யும்பிறவி உள்ளதெல்லாஞ் செய்திடவே
கொடுமுடியாய்ப் பிறந்த கோளிலங்கைப் பாவிகளை
முடியடிவே ரில்லாமல் முழுது மறுப்பதற்கு
வேண்டும் பிறவியெல்லாம் விமல னருளிமிகத்
தாண்டவ சங்காரம் தானிதென்றா ரம்மானை
விருத்தம்
இராவணன் தன்னைக் கொல்ல இராம பாணங்க ளோடே
சிராம ராய்மாயன் தானும் தசரதன் தனக்குத் தோன்ற
விராகன மாது சீதை வில்லுட னுதிக்கத் தேவர்
மராம ரக்குலங் களாகி வந்தனர் புவியின் மீதே
நடை
சிராமருந்தான் ராவணனைச் செயிக்க ஒருவிதமாய்
இராமபா ணத்தோடே நாட்டில் பிறந்தனராம்
தென்னிலங்கை தான்முடிய சீதை சிறையிருக்கப்
பொன்னரிய வில்லோ(டு) உடன்பிறந்தாள் பொன்மாது
தேவரெல்லாம் வானரமாய்த் தென்னிலங்கை சுட்டழிக்கப்
பூவர் சுகுமுனிவர் போர்விசுவ கன்மனெனும்
வானரத்துக் கேற்ற மந்திரி தானாகித்
தானவரையு மனுப்பித் தரணிதனி லெம்பெருமாள்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 1321 - 1350 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi