அகிலத்திரட்டு அம்மானை 1201 - 1230 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1201 - 1230 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

தெண்டனிட்டுத் தேவரெல்லாம் செப்புவா ரம்மானை
மண்டல மெங்கும் மயமாய் நிறைந்தோனே
எங்களை லோகமதில் இப்போ படைப்பீரால்
மங்களமா யுள்ள வலுவும் பெலமதுவும்
ஆயனுக்கு நாங்கள் அடிபணிந் தேவல்செய்ய
நேயனே நீரும் நெறியாய்ப் படையுமென்றார்
ஈசர் மகிழ்ந்து இப்படியே தான்படைக்க
வாசத் தசரதரும் வந்து தினகரரும்
மகவாசை யுற்று மகாபரனைத் தானோக்கி
அகப்பாச மற்று அதிகத் தவமிருந்து
நாத னறிந்து நன்மறையைத் தான்பார்த்து
பாத னரக்கன் பத்துச் சிரத்தானைத்
தேவர் துயரமறத் திருமால் தசரதற்கு
மூவ ருடன்கூடி உலகமதி லேபிறக்க
அரக்கர் குலமறவே அம்மைசீதா லட்சுமியை
இரக்கம்போ லுள்ள ஏற்ற தினகரற்கு
மகவாய்ப் பிறக்க மறைதான் விதித்தபடி
செகமீதில் ஞான சிருஷ்டி சிவமயமாய்
இப்படியே வேதத்(து) எழுத்தின் படியாலே
அப்படியே ஈசர் அமைக்கத் துணிந்தனராம்
உடனே தசரதற்கு உற்றதிரு மாலைத்
திடமாய்ப் பிறவி செய்ய எனத்துணிந்தார்
அப்போது ராமர் அய்யா திருமாலை
இப்போ துபடைக்க ஈசுரனார் சம்மதிக்கப்
படைக்கும் பொழுது பரமசிவ னாரை
நடக்குந் திருமால் நாதனைப்பார்த் தேதுரைப்பார்
அவ்வுலகி லென்னை அதிகத் தசரதற்கு
இவ்வுலகு விட்டங்(கு) என்னைப் பிறவிசெய்ய
வந்த விபரம் வகைவகையா யீசுரரே
என்றனக்குத் தானமைத்து என்னை யனுப்புமென்றார்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi