அகிலத்திரட்டு அம்மானை 1171 - 1200 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1171 - 1200 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

பள்ளி யுறக்கம் பரிவாய் வருகுதில்லை
தள்ளினால் தேவரையும் தற்காப்பா ராருமில்லை
என்ன வசமாய் எடுப்போஞ் சொரூபமது
தன்னிகரில் லாதவனே சாற்றுவீ ரென்றனராம்
மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து
தூயவரு மங்கே சொல்லுவா ரம்மானை
பாவி யரக்கனுக்குப் பண்டுநா மீந்தவரம்
தாவிப் பறிக்கத் தானாகா தென்னாலே

இராமாவதாரம்

என்றரனார் சொல்ல எம்பெருமா ளச்சுதரும்
அன்றெம் பெருமாள் ஆலோ சனையாகி
என்னை மகவாய் எடுக்கத் தசரதரும்
முன்னே வரங்கேட்டு உலகி லவரிருக்க
அன்னுகத்தி லுள்ள அரசன் தினகரனும்
பொன்னு திருவைப் பிள்ளையென வந்தெடுக்க
நெட்டையா யரசர் நெடுநாள் தவசிருக்க
சட்டமதைப் பார்த்துத் தானனுப்பு மீசுரரே
பின்னும் பெருமாள் பெரியோனைப் பார்த்துரைப்பார்
முன்னு முறையாய் முறைப்படியே தேவரையும்
வானரமாய்ப் பூமியிலே வந்து பிறந்திருக்கத்
தானவரே யிப்போ தான்படைக்க வேணுமென்றார்
ஏவலா யென்றனுக்கு இப்பிறப் பானதிலே
காவலா யென்றனுக்குக் கைக்குள்ளே நிற்பதற்குப்
பள்ளிகொண்டு நானிருந்த பாம்புரா சன்தனையும்
வெள்ளிமணி மெத்தையையும் வீற்றிருக்கு மாசனமும்
இம்மூணு வேரும் என்னோ டுடன்பிறக்கச்
சம்மூலப் பொருளே தான்படையு மென்றுரைத்தார்
மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து
தூயவரு மந்தப் படியே தெளிந்திருக்கப்
படைக்கும் பொழுதில் பரதேவ ரெல்லோரும்
அடைக்கலமே மாயன் அடியெனத் தெண்டனிட்டார்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi